Tuesday, November 19, 2013

சம்பத் கமிஷன் அறிக்கை உண்மைக்கு புறம்பானது: மா.கம்யூ தீர்மானம்


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்)-ன் மாநிலக்குழு கூட்டம் நவம்பர் 17, 18, 19 தேதிகளில் கோவையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராஜன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்திரராசன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

இக்கூட்டத்தில் 19.11. 2013ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:-

இமானுவேல் சேகரன் நினைவு தினத்தன்று பரமக்குடியில் காவல்துறை நிகழ்த்திய துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்துகிற ஒய்வு பெற்ற நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கையை நிராகரிக்க வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

இரட்டைகுவளை எதிர்ப்பு மாநாடு உள்ளிட்டு தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக செயல்பட்டு வந்த தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் மீது பரமக்குடியில் ( 2011 செப்படம்பர் 11)  காவல்துறை நடத்திய கொடூரமான துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்தவர்களும், ஊடகங்களும் மற்றும் தனி நபர்கள் எடுத்த வீடியோ காட்சிகளும் காவல் துறையின் எல்லை மீறிய அராஜகத்தை வெளி உலகத்திற்கு ஏற்கனவே கொண்டு வந்துள்ளன.

வழக்கமான போக்குவரத்துகள் முற்றிலுமாக மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டு, கடைகள் முழுவதும் காவல்துறையால் அடைக்கப்பட்டுவிட்ட சூழலில், நினைவஞ்சலி கூட்டத்திற்கு வருகிறவர்கள் மட்டுமே பரமக்குடி நகருக்குள் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 50 பேர் நடத்திய மறியல் போராட்டத்தை காரணமாக்கி காவல் துறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. துப்பாக்கி சூடு முடிந்து பல மணி நேரம் பரமக்குடி நகரை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டு, காவல் துறை  நடத்திய அராஜகம் ஜனநாயகத்திற்கு விடப்பட்ட சவாலாகும். பரமக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்ட சில மணி நேரத்திற்குள் மதுரை மாவட்டம் சிந்தாமணி மற்றும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியிலும் காவல் துறை தலித் மக்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூடு வன்மையான கண்டனத்திற்குரியது.

ஆகவே தான், துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களும், போராடுகிற அமைப்புகளும் சி.பி.ஐ விசாரணை கோரி நீதி மன்றத்திற்கு சென்று தற்போது சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தான் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கை 30-10- 2013 அன்று தமிழக  சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற கூட்டத் தொடரின் இறுதி நாளில் அதுவும் தென் மாவட்டங்களின் பதட்டமான ஒரு தினத்தில் சம்பத் கமிஷன் அறிக்கை சட்டமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது சரியான அணுகுமுறையல்ல, சம்பத் கமிஷன் அறிக்கை காவல் துறையின் அராஜகத்தை மூடி மறைக்கிறது.

 காவல்துறையின் நடவடிக்கையை பாராட்டுவதோடு, பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீதே பழி சுமத்துகிறது. உண்மைக்கு மாறாக காவல் துறையை பாதுகாக்கும் சம்பத் கமிஷன் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல. தமிழக அரசு சம்பத் கமிஷன் அறிக்கையை நிராகரித்திட வேண்டும் என்று  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.



Friday, October 25, 2013

டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. ஆய்வு


தாது மணல் விவகாரம் தொடர்பாக ஒருமித்த கருத்துடைய எம்.எல்.ஏ.க்களை அணி சேர்த்து திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஆய்வு செய்யவுள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

இது தொடர்பாக, திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியது:

கிராமப்புறங்களில் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ள சூழலில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 30 நாள் அவகாசம் அளித்திருப்பது போதுமானதாக இல்லை. குக்கிராமங்களிலும் முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரையிலும் மனுக்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளையின் தொடர்ச்சியாக தாது மணல் கொள்ளை விவகாரம் பூதாகரமாகியுள்ளது. நாட்டின் கனிமவளங்கள் கொள்ளைபோவதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை.

தாது மணல் விவகாரம் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆய்வுக் குழு விசாரணையில் தொய்வு ஏற்பட்டாலோ, தோல்வி ஏற்பட்டாலோ எதிராகப் போராட புதிய தமிழகம் கட்சி தயங்காது. இந்த விவகாரத்தில் எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழுவை நியமித்து அரசு விசாரணை நடத்துவது மட்டுமல்லாது வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தாது மணல் குவாரிகள் தொடர்பாக புதிய தமிழகம் கட்சியைப் போன்ற ஒருமித்த கருத்துடைய எம்.எல்.ஏ.க்களை அணி சேர்த்து கடலோரக் கிராமங்களில் ஆய்வு செய்யவுள்ளேன். ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி வரும் 29-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் அவர்.

தேர்தல் ஆதரவு: முடிவு அறிவிக்க தாமதம் ஏற்காடு இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் உள்ளிட்டவை தொடர்பாக கிருஷ்ணசாமி கருத்து தெரிவிக்கவில்லை. கடந்த 18-ஆம் தேதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னையில் கூடுவதாக அறிவித்த கூட்டமும் நடைபெறவில்லை. இதுதொடர்பாக அவர் கூறியது:

தேர்தலுக்காக மக்களைச் சந்திக்கும் கட்சியல்ல புதிய தமிழகம். மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். மக்களைத் திரட்டி மாநாடு நடத்துவது, பொதுக்கூட்டம் நடத்துதல் உள்ளிட்ட சக்தியும் இல்லை. மக்களைத் தேடிச் சென்று அவர்களுடன் பழகி பணியாற்றுகிறோம். ஏற்காடு இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தல் தொடர்பாக முடிவு எடுத்துள்ளோம். ஆனால், அறிவிக்காமல் உள்ளோம் என்றார் கிருஷ்ணசாமி.



டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

தாது மணல் ஆலைகளில் முறைகேடு புகார்கள் தொடர்பாக ஆய்வு நடத்தியது தொடர்பாக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.இதுகுறித்து நெல்லையில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியலில் புதியதாக வாக்காளர்களை சேர்க்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும். 

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் கடந்த 6 மாதங்களாக முடங்கி காணப்படுகிறது. இத்திட்டத்தை உடனடியாக செயல்படுத்தி தொழிலாளர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்க வேண்டும்.புதியதாக இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் இட ஒதுக்கீட்டு முறையை அமல்படுத்த கோரி 29ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.நெல்லை மாவட்டத்தில் தாது மணல் ஆலை முறைகேடு புகார் தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். இதில் உண்மை நிலவரங்களை தெரிவிக்கும் வகையில் வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். அதிகாரிகள் குழுவுக்கு பதிலாக எம்.எல்.ஏக்கள் குழுவை சம்பவ இடங்களுக்கு அனுப்ப வேண்டும். ஒருமித்த கருத்துக்களை கொண்ட எம்.எல்.ஏக்கள் குழுவினருடன் நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகளுக்கு சென்று ஆய்வு நடத்த உள்ளேன். 

சட்டசபையில் பேச அனுமதி வழங்கினால் இப்பிரச்னை குறித்து பேசுவேன். இப்பிரச்னைக்காக மட்டும் கலெக்டரை மாற்றியுள்ளனர் என்று கூற முடியாது. அதற்கு வேறு காரணங்களும் இருக்கலாம்.கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும். அரசு இப்பிரச்னையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நேரடியாக இதில் தலையிடுவது குறித்து ஆலோசிக்கப்படும். வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் சேர்ப்பு, உயர் கல்வி சேர்க்கை குறித்து விழிப்புணர்வு, மது பிரச்னையால் பாதிப்பு குறித்து சமுதாய மக்களிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. தேர்தலுக்காக மட்டும் மக்களை சந்திப்பதில்லை. 

ஏற்காடு இடைத்ததேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்பது இதுவரை முடிவு ஏதும் செய்யவில்லை. பார்லிமென்ட் தேர்தலுக்கு கால அவகாசம் இல்லாததால் தற்போதைக்கு கூட்டணி குறித்து எதுவும் கூற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது நிர்வாகிகள் அரவிந் த ராஜா, செல்லப்பா, நடராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.


டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு


வெங்காய விலை பற்றி பேச அனுமதி மறுப்பு: கிருஷ்ணசாமி வெளிநடப்பு


சட்டசபையில் வெள்ளிக்கிழமை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளிநடப்பு செய்தார்.

வெளிநடப்பு குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, ‘‘வெங்காய விலை உயர்வு மற்றும் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டியது குறித்து பேச சபையில் அனுமதி கேட்டேன். அனுமதி தராததால் வெளிநடப்பு செய்தேன்’’ என்றார்.




Tuesday, October 22, 2013

இம்மானுவேல் தேவெந்திரர்



கேரளா தேவேந்திரகுல சமுதாய சங்கம்

கேரளா தேவேந்திரகுல சமுதாய சங்கம் நடத்திய மண்டல மாநாடு

நாள்: 22-09-2013 ஞயிற்றுக்கிழமை


கேரளா தேவேந்திரகுல சமுதாய சங்கம் நடத்திய மண்டல மாநாடு கடந்த 22-09-2013 அன்று கோவில்கடவில் நடந்தது. இதில் நமது தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிறப்பு அழைப்பாளராக அழைத்ததின் பேரில் கலந்துகொண்டோம். தலைவர் தமிழினவேந்தர் மாநட்டில் சிறப்புரையாற்றினார்.





கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் உள்ள மறையூர் , கோவில் கடவு, காந்தலுர்,பெரடிபள்ளம், சுரக்குளம், மிசன் வயல், சாணல்மேடு,திண்டுகொம்பு, மூணார் என பல்வேறு மலை கிராமங்களில் பெரும்பாண்மையாக நமது தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்கள் வாழ்கின்றனர். இதில் மூணார் தவிர மற்ற கிராம மக்கள் தேயிலை தோட்ட தோழிலாளர்கள் அல்ல.பெரும்பாண்மையாக விவசாயம் செய்து வருகின்றனர். தொழில் செய்து வருகின்றனர். நில உடைமையாளர்களாக உள்ளனர். அனைவரும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மொழிவாரி கேரள மாநிலம் உருவாவதற்கு முன்பாகவே குடியேறிய மக்கள். தற்போது இடுக்கி , தேவிகுளம், பீர்மேடு பொன்ற பகுதியில் வாழும் இம்மக்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனை சாதிச்சான்றிதழ் பெரும் பிரச்சனை. முல்லைப்பெரியாறு பிரச்சனைக்குப்பிறகு பெருமளவில் நம்மக்களை பாகுகுபடுத்திபார்க்கும் நிலை உள்ளது. இதற்காக விரைவில் திருவனந்தபுரத்தில் ஒரு பேரணி நடத்தி போராட வேண்டும் என்று அப்போராட்டத்தை அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் சங்கத்தின் சார்பில் ஒருங்கிணைக்வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மாநாட்டில் சிகப்பு பச்சை கொடியுடன் உணர்வோடு கலந்துகொண்ட நமது பெண்களின் எழுச்சிமிகு உணர்வு நம்மை வியக்கவைத்தது. தலைவருக்கு மக்கள்கொடுத்த வரவேற்பு பிரமிக்கவைத்தது. மறையூர்,காந்தலூரில், கோவில்கடவில் தலைவர் சமுதாயக் கொடிஏற்றி வைத்தர்.தலைவரின் வருகை அறிந்து சந்திக்க வந்த பெண்கள் கூட்டம் நம்மை பிரமிக்கவைத்தது. குடும்பம் குடும்பமாக மாநட்டில் கலந்துகொண்டதோடு மட்டுமல்லாது தலைருடன் புகைப்படம் எடுக்க மக்கள் காட்டிய ஆர்வம் எழுச்சி மிக்கது.தலைவருடன்தோழர் கண்மணிமாவீரன், துரைப்பாண்டியன்,குபெந்திரபாண்டியன்,கிங்தேவேந்திரன்,தேவப்பிரியன்,மதுரை ஆம்புலன்ஸ் முனியாண்டி உள்ளிட்ட பலர் உடன்சென்றிருந்தனர்.





தேவேந்திரகுல வேளாளர்









Tuesday, September 17, 2013

எலுமிச்சை பழம் - மூலிகை மருந்து



எலுமிச்சம் பழத்தின் தாயகம் இந்தியா. எலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும். விரல் முனையில் தோன்றும் உகிர் சுற்று நோய்க்கு எலுமிச்சம் பழத்தை விரல் முனையில் செருகி வைப்பதுண்டு. 

முற்றிய சொறி, கரப்பான் நோய்களுக்கு எலுமிச்சம் பழத்தைத் தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல குணம் தெரியும். எலுமிச்சை ஊறுகாய் மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி, வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது. 




எலுமிச்சையைக் கொண்டு பல அழகு சாதனைங்களைத் தயாரிக்கலாம். எலுமிச்சைத் தோல் மாடுகளுக்கான சத்துள்ள தீவனமாகவும் உபயோகிக்கப்படுகிறது. எலுமிச்சம் பழம் மூலம் வைட்டமின்சி சத்தினை எளிதாகப் பெறமுடியும் என்று அறிந்த மேலை நாட்டு மக்கள் அன்றாடம் ஏதாவது ஒரு விதத்தில் எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். 

எலுமிச்சம்பழத்தை எந்தப் பருவத்தில் எந்த நேரத்தில் சாப்பிட்டாலும் உடலுக்கு ஒத்துகொள்ளும் தன்மை உடையாது அதனால்தான் வெளிநாடுகளில் இதை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர். பச்சைக் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் மேலை நாட்டில் இருந்து வருகிறது. அதிகரித்தும் வருகிறது. பச்சைக் காய்கறிகளுக்கு ருசியூட்ட எலுமிச்சம் பழ ரசம் சிறப்பாகப் பயன்படுகிறது. 

சாதாரணமாக பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் என்று கூறுவர். அதைவிட அதிகமாக எலுமிச்சம் பழத்தில் உள்ளது.  நமது நாட்டில் காபி, தேநீர் போன்ற பானங்கள் அருந்தும் பழக்கமே அதிகம் இருந்து வருகிறது. காபி, தேநீர் போன்றவை உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பவையாக இருக்கின்றன. ஆகவே காப்பி, தேநீர் பழக்கத்தை விட்டுவிட்டு எலுமிச்சை ரசபான வகைகளை அருந்தும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம். 




எலுமிச்சம் பழச்சாற்றைத் தனியாக அருந்தக்கூடாது. எலுமிச்சம் பழச் சாற்றிலுள்ள சிட்ரிக் ஆசிட் சாற்றை அப்படியே அருந்தும்போது பலவிதமான உல் கேடுகளை உண்டாக்கக் கூடும். எலுமிச்சைச் சாற்றைத் தனியாக அருந்தினால் பற்களின் எனாமல் கரைந்து பற்களைக் கூசச் செய்வதுடன் பற்களையே நாளடைவில் இழக்க வேண்டி வரும். 

எலுமிச்சம் பழச்சாற்றை வேறு கலப்பு இல்லாமல் தனியாக அருந்தினால் தொண்டை, மார்பு ஆகியவை பாதிக்கப்பட்டு பலவிதமான தொல்லைகளுக்கு இலக்காக வேண்டி வரும். எலுமிச்சம் பழ ரசத்தைத் தண்ணீர், வெந்நீர், தேன் போன்ற ஏதாவது ஒரு பொருளுடன் சேர்த்து உண்ணலாம். அத்தோடு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து அதன் புளிப்புச் சுவையைக் குறைத்த பிறகு குடிப்பது நலம். பச்சைக் காய்கறிகள், வேறு ஏதாவது பழங்களின் ரசம் ஆகியவற்றில் எலுமிச்சம் பழ ரசத்தைச் சேர்த்தும் அருந்தலாம். 

சிலர் பருப்புக்கூட்டு போன்றவற்றில் எலுமிச்சம் சாற்றைப் பிழிந்து உண்ணுவார்கள். இது நன்மைக்குப் பதில் தீங்கையே விளைவிக்கும். 
எலுமிச்சம் பழ ரசத்தைக் கோடை நாளில் அருந்தினால் உடல் இயற்கையாகவே குளிர்ச்சி பெறும். சூரிய வெப்பத்தினால் ஏற்படும் ஆயாசம் குறைந்து சுறுசுறுப்பாகச் செயற்பட முடியும். எலுமிச்சம் பழச்சாற்றை எப்போதுமே வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் இரைப்பை பெருமளவு பாதிக்கப்பட்டு இரைப்பை புண் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டு அவதியுற நேரிடும். 

எலுமிச்சை ரசத்தில் சிட்ரிக் ஆசிட் இருப்பதனால் மண், கண்ணாடி, பீங்கான் ஆகிய பாத்திரங்களில் மட்டுந்தான் அதனை ஊற்றி வைக்கலாம். இவ்வாறு செயதால் ரசம் கெட்டுப் போகாமல் இருக்கும். வேறு பாத்திரங்களில் ஊற்றி வைத்தால் ரசத்தின் இயல்பு கெட்டு நச்சுத்தன்மை கொண்டதாக ஆகிவிடும்.எலுமிச்சம் பழத்தைச் சாறு பிழியும் நோக்கத்துடன் அறுப்பதாக இருந்தால் அறுப்பதற்கு முன்னதாகப் பழத்தை வெந்நீரில் போட்டு எடுத்தால் அதிக அளவு சாறு கிடைக்கும். 

எலுமிச்சம் பழம் உடல் வெப்பத்தைக் குறைக்கும். புளிப்பை அகற்றும். உடலைத் தூய்மைப்படுத்தும். உடல் உறுப்புகள் இயல்பாக இயங்குவதற்குத் தூண்டுதல் அளிக்கும். மூளையின் வளர்ச்சியையும் இயக்கத்தையும் மேம்படுத்தும். வாய்க்கசப்பை அகற்றும். கபத்தைக் கட்டுப்படுத்தும். வாதத்தை விலக்கும். இருமல், தொண்டை நோய்களைக் குணப்படுத்தும். காச நோய்க்கு நல்ல கூட்டு மருந்தாக உதவும். மூலத்தைக் கரைக்கும். விஷங்களை முறிக்கும். பொதுவாக உடல் நலம் தொடர்பாக இது ஆற்றும் உதவிக்கு ஈடாக வேறு எந்தக் கனியையும் கூற முடியாது. 

உடலின் நரம்பு மண்டலத்திற்கு வலிமையை ஊட்டமளிக்கக்கூடிய ஆற்றல் எலுமிச்சம் பழத்திலுள்ள பாஸ்பரஸ் என்ற ரசாயனப் பொருளுக்கு உண்டு. இது மட்டுமின்றி நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது. எலுமிச்சம் பழத்தில் உள்ள மற்றொரு ரசாயனப் பொருளான 'பொட்டாசியம்' இரத்தத்தின் அமிலத் தன்மையைக் கட்டுப்படுத்துவதுடன் நரம்புத் தளர்ச்சியடையாமல் காக்கிறது. மற்ற எந்தப் பழத்தையுட விட எலுமிச்சம் பழந்தான் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய பிணிகளுக்குச் சரியான மருந்தாக உதவுகிறது. 



ஓட்ஸ் சாப்பிடுங்கள்



ஓட்ஸ்யில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் உப்பு உள்ளது. இதில் இயற்கை இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளதால் இதயம், எலும்பு மற்றும் நகங்களுக்கு மிகவும் நல்லது.

இதில் கரையக்கூடிய நார்பொருள் உள்ளது. இந்த நார்பொருள் இரத்தத்தில் உள்ள எல்.டி.எல் கொலஸ்டிரால் எனப்படும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது. ஓட்ஸ் உடலில் உள்ள உபரி கொழுப்பை  உறிஞ்சி வெளியேற்றுகிறது.

மேலும் இதில் உள்ள கரையக்கூடிய நார்பொருள், வயிறு, குடல் ஆகியவற்றின் செயல்பாடுகளை ஒழுங்கு செய்வதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் உடலின் வெப்பநிலை சீராக இருப்பதால் முகத்தில் பருக்கள் வருவதை தடுக்கிறது.




ஓட்ஸ் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை நிலைப்படுத்துகிறது. நரம்பு சம்மந்தமான கோளாறுகள் குறைய உதவுகிறது. பெண்களில் மாதவிடாய் நிற்கும் காலங்களில் ஏற்படும் கருப்பை மற்றும் கருவகத்தில் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உதவுகிறது. மேலும் உடல் திசுக்களில் ஏற்படும் சிதைவினை தாமதிக்கிறது மற்றும் புற்றுநோயால் ஏற்படும் அபாயத்தினை குறைக்கிறது.

மனித மூளையில் உள்ள விம்பிக் சிஸ்டம் என்ற அமைப்பு சரிவரச் செயல்பட்டால் போதும். ஆண்மைக்குறைவும், பெண்மைக் குறைவும் ஏற்படாது. அதற்கு எளிய மருந்து ஓட்ஸ் உணவுதான் என்று San francisco (USA) வில் உள்ள ‘அட்வான்ஸ் ஸ்டடி ஆப் ஹியூமன் செக்ஸுவாலிட்டி’ என்ற அமைப்பு கண்டுபிடித்து உறுதி செய்துள்ளது. ‘லிபிடோ’ என்று சொல்லப்படும் உணர்ச்சி உந்துதல் குறைவாக இருந்தால் அதுதான் பல மனக்கவலைகளை உருவாக்கிவிடுகிறது. எதிர் காலத்தின் மீது பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஓட்ஸ் இந்தக் குறையை மிக எளிதாக நிறைவு செய்துவிடுகிறது. 





தினமும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் நோய்கள் வருவதை தவிர்க்கலாம். மேலும்,  உடலில் உள்ள தேவையில்லாத கொலஸ்ட்ராலை நீக்கி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு நமது மூளையின் நரம்புகளை திடப்படுத்தி மூளை நன்றாக செயல்பட உதவும்.




Thursday, September 12, 2013

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்




 இமானுவேல்சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சியினர், மக்கள் அஞ்சலி செலுத்தினர்.ராமநாதபுரம் மாவட் டம், பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினைவிடம் உள்ளது. ஆண்டுதோறும் செப்.11ம் தேதி அவரது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலை வர் திருமாவளவன், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், தமிழரசி, முன்னாள் எம்.பி பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ முருகவேல், ஆகியோரும், அதிமுக சார்பில் அமைச்சர்கள் சுந்தரராஜ், செல்லூர் ராஜு, முதுகுளத்தூர் எம்எல்ஏ முருகன், ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

மாலையில் லோக் ஜன சக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில பொதுச்செயலா ளர் ஜான்பாண்டியன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்எல்ஏ ராம்பிரபு, பாஜ சார்பில் மாவட்ட செயலாளர் சண்முகராஜ், தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் சிங்கைஜின்னா, மதிமுக சார்பில் முன்னாள் எம்பிக்கள் கிருஷ்ணன், சிப்பிபாறை ரவிச்சந்திரன் அஞ்சலி செலுத்தினர்.இமானுவேல்சேகர னின் மகள்கள் கீதா, பிரபா, பேத்தி சுபா அவரது நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து முளைப்பாரி ஊர்வலம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட் டம், பால்குடம் எடுத்தல், முடி காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.பரமக்குடியில் பள்ளிகளுக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 





==========================================================================


பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் புதன்கிழமை மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இமானுவேல் சேகரனின் 56-ஆவது நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்களின் விவரம்:

இமானுவேல் சேகரனின் சொந்த ஊரான செல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.ஜெயராமன் தலைமையில் இளைஞர் மன்ற தலைவர் துரைகாந்த் மற்றும் அக் கிராம பொதுமக்கள் காலை 7.00 மணிக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து தேவேந்திரர் பண்பாட்டுக் கழக தலைவர் அழகர்சாமி, செயலாளர் புண்ணியமூர்த்தி, பொருளாளர் சண்முகம் ஆகியோர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தி.மு.க. சார்பில் அக் கட்சியின் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், தமிழரசி மற்றும் முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், சுப.த. திவாகரன், உ.திசைவீரன், சேது.கருணாநிதி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதிமுக சார்பில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ் ஆகியோர் தலைமையில் அக் கட்சியைச் சேர்ந்த சேமிப்பு கிடங்கு வாரியத் தலைவர் முனியசாமி, முன்னாள் மாவட்டச் செயலாளர் கே.சி.ஆணிமுத்து, முன்னாள் அமைச்சர் ஏ.அன்வர்ராஜா, முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மதிமுக மாவட்டச் செயலாளர் நென்மேனி என்.ஜெயராமன் தலைமையில், பொள்ளாச்சி எம்.பி. கிருஷ்ணன், முன்னாள் எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், நகர் செயலாளர் கே.ஏ.எம்.குணா, மதுரை மாவட்டச் செயலாளர்கள் பூமிநாதன், வீர.தமிழ் செல்வம் ஆகியோர் கட்சியினருடன் அஞ்சலி செலுத்தினர்.

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா தலைமையிலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் தொல்.திருமாவளவன், விவசாய அணி மாநில துணைத் தலைவர் பாம்பூர் இருளன் ஆகியோர் கட்சியினருடன் சென்று அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் மாவட்டத் தலைவர் ஏ. ரவிச்சந்திர ராமவன்னி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.வி.ஆர்.ராம்பிரபு, மாவட்ட பொதுச் செயலாளர் ஏ.ஜெ.ஆலம், முகம்மது ரபீக், நகர் தலைவர் கோதண்டராமன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பா.ஜ.க. சார்பில் மாவட்டத் தலைவர் கே.சண்முகராஜ், எஸ்.சி. பிரிவு மாநில இளைஞரணிச் செயலாளர் இளங்கண்ணன், வர்த்தக அணி நாகராஜன் ஆகியோர் அக் கட்சியினருடன் சென்று அஞ்சலி செலுத்தினர்.

தமிழ்ப் புலிகள் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் நாசாத் திருவள்ளுவன் தலைமையிலும், மள்ளர் நாடு நிறுவனத் தலைவர் சுப.அண்ணாமலை, சுரேஷ் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், மாவட்டத் தலைவர் சிவகுருநாதன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

தியாகி இமானுவேல் சேகரன் பேரவை நிறுவனத் தலைவர் பூ.சந்திரபோஸ் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், பல்வேறு நகர் மற்றும் கிராமங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், பல்வேறு அமைப்பினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பரமக்குடி நகரைச் சுற்றியுள்ள சமுதாய மக்கள் பால்குடம் எடுத்து வந்தும், முளைப்பாரியுடன் வந்தும் அஞ்சலி செலுத்தினர்.








Wednesday, September 11, 2013

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்




Today's Dina Thanthi

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்




Today's Dina Thanthi

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்




Today's Dina Thanthi

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்




Today's Dina Thanthi


தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்





Today's Dina Thanthi


தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்


இம்மானுவேல் சேகரன் 56- வது நினைவு தினத்தை முன்னிட்டு, இன்று பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் பொதுமக்கள்  மற்றும் அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ, சுந்தர்ராஜன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.திமுக சார்பில் சுப.தங்கவேலன், முன்னாள் அமைச்சர் தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. திசைவீரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னதாக இம்மானுவேல் சேகரனின் சொந்த ஊரான பரமக்குடி செல்லூரில் உள்ள மக்கள் முதலில் அஞ்சலி செலுத்தினர்.








தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்


தியாகி இமானுவேல் சேகரனின் 56–வது நினைவு தினம் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினை விடத்தில் இன்று அனு சரிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் இன்று காலை அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் சுந்தர்ராஜ், செல்லூர் ராஜூ ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர் அன்வர்ராஜா, முதுகுளத்தூர் எம்.எல்.ஏ. முருகன், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சதன் பிரபாகரன் தலைமையில் ஏராளமான அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான சுப.தங்க வேலன் தலைமையில் முன்னாள் அமைச்சர் தமிழரசி, முன்னாள் எம்.எல்.ஏ. திசைவீரன், நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் திவாகர், பரமக்குடி நகர செயலாளர் சேதுகருணாநிதி உள்பட ஏராளமான தி.மு.க.வினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இதேபோல் இமானுவேல் சேகரன் பிறந்த பரமக்குடி செல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராமன் தலைமையில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள், இளைஞர்கள் மற்றும் கிராமமக்கள் ஆகியோர் ஊர்வலமாக வந்து இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் ஆகியோர் உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர், நெல்லை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இமானுவேல்சேகரன் நினைவிடம் அமைந்துள்ள பரமக்குடியில் ஏ.டி.ஜி.பி. ராஜேந்திரன் மேற்பார்வையில் 2 ஐ.ஜி.க்கள், 6 டி.ஐ.ஜி.க்கள், 8 போலீஸ் சூப்பிரண்டுகள், 7 கூடுதல் உதவி போலீஸ் சூப்பிரண்டுகள், 7 உதவி சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

65 இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் வைக்கப்பட்டுள்ளன. நகரின் முக்கிய இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக வாகனங்கள் சோதனை நடத்தப்படுகிறது.

இதேபோல் பரமக்குடி, மானாமதுரை, உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும், மதுரை ரெயில்வே சூப்பிரண்டு சம்பத்குமார், டி.எஸ்.பி. வெள்ளையன், கோட்ட பாதுகாப்பு ஆணையாளர் சுகுமாறன், உதவி கோட்ட ஆணையாளர் செல்வராஜ் ஆகியோர் மேற்பார்வையில் ரெயில்வே போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். ரெயில்வே கேட்டுகளிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் டவுனில் அரியலூர் எஸ்.பி. ஜியாவுல் ஹக், கடலூர் ஏ.டி.எஸ்.பி., அரியலூர் டி.எஸ்.பி. ராமமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் 3 பட்டாலியனை சேர்ந்த கம்பெனி போலீசார் 650 பேர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

சட்ட விரோத செயல்களை தடுப்பதற்காக ஆளில்லா உளவு விமானம் மூலம் கூட்டத்தை கண்காணிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த விமானத்துக்குள் அதிநவீன கம்ப்யூட்டர்கள் உள்ளதால் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் நடை பெறும் நிகழ்வுகளை இது பதிவு செய்யும். இதன் மூலம் சோதனை சாவடிகள், அஞ்சலி செலுத்த வரும் வாகனங்களின் வழித்தடங்கள், பிரச்சினைக்குரிய பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 


தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்




Today's Dinakaran

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்



Today's Dinakaran

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்



Today's Dinakaran

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்



Today's Dinakaran

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்




Today's Dinakaran

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்


Today's Dinamalar

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்




Today's Dinamalar

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்



தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்


இமானுவேல்சேகரன் நினைவு நாளையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 12 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையங்களிலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில் வாகனன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை (11–ந்தேதி) இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்பவர்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே செல்ல வேண்டும். அவ்வாறு செல்பவர்கள் தங்களது எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் முன்கூட்டியே வாகன அனுமதி சீட்டு பெற்று செல்ல வேண்டும்.

இமானுவேல்சேகரன் நினைவு நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. அனைத்து சோதனை சாவடிகளிலும் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினர் இணைந்து கம்ப்யூட்டர் மூலம் ஒவ்வொரு வாகனமும் வாகன எண், உரிமையாளர் மற்றும் முகவரி ஆகியவை தணிக்கை செய்யப்படும்.

தவறான வாகன எண் அல்லது வாடகை வாகனத்தை சொந்த வாகனமாக பயன்படுத்துதல் மற்றும் முறையாக அனுமதி பெறப்படாத வாகனத்தின் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது சோதனை சாவடியிலேயே சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஏற்பாடானது ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டுமல்லாது அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.

விழாவில் கலந்து கொள்வதற்காக வரக்கூடிய முக்கிய தலைவர்களின் வாகனத்துடன் 3 வாகனங்கள் மட்டுமே உடன் வர அனுமதிக்கப்படும். மேலும் ஏதேனும் பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் சம்பந்தப்பட்டவர்களிடமே சேத தொகையினை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

இமானுவேல்சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றில் வந்து கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடையை மீறி இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களில் வருபவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டுனர் மற்றும் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பரமக்குடியில் மட்டும் 9 இடங்களில் காமிரா அமைக்கப்பட்டுள்ளது. மணிநகர், பொன்னையாபுரம், சந்தைபேட்டை, வைகை நகர் ஆகிய இடங்களில் அஞ்சலி செலுத்த வருபவர்களின் வாகனங்கள் நிறுத்தப்படும். அதன் பின்னர் அவர்கள் நடந்து சென்று நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்கள், ரெயில்வே கேட் போன்ற இடங்களில் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ரெயில்வே டி.ஐ.ஜி. பாஸ்கரன் உத்தரவின் பேரில் ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு சம்பத்குமார், டி.எஸ்.பி. வெள்ளையன், கண்ணன், 6 இன்ஸ்பெக்டர்கள், 27 சப்–இன்ஸ்பெக்டர்கள், போலீசார் 200 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரெயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. தாக்கா உத்தரவின் பேரில் மதுரை ரெயில்வே கோட்ட பாதுகாப்பு படை ஆணையர் சுகுமாறன், உதவி கோட்ட ஆணையர் செல்வராஜ், 3 இன்ஸ்பெக்டர்கள், 15 சப்–இன்ஸ்பெக்டர்கள், 80 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பரமக்குடி, கமுதக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம் ஆகிய ரெயில் நிலையங்களில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ரெயிலிலும் 6 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ராமநாதபுரம்–தூத்துக்குடி இடையே உள்ள கிழக்கு கடற்கரை சாலையிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கன்னிராஜபுரம், சேவல்பட்டி ஆகிய இடங்களில் புதிதாக 2 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் தீவிர சோதனை நடத்தப் பட்டு வருகிறது. (டி.என்.எஸ்)

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்


இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, பொது அமைதி மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை நிலைநாட்டும் வகையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு கலெக்டர் அனுமதியின்றி பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்படுகிறது. இன்று முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதால் இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

இன்று (9-ந் தேதி) முதல் 15-ந் தேதி வரையும், அக்டோபர் 25-ந் தேதி முதல் 31-ந் தேதி வரையும் வெளிமாவட்டங்களில் இருந்தும் ராமநாதபுரம் மாவட்டத்தின் உள்பகுதிகளில் இருந்தும் இமானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி குருபூஜை போன்றவற்றுக்கு வாடகை வாகனங்களில் வரவும் தடைவிதிக்கப்படுகிறது.

இதேபோல் நினைவு ஜோதி எடுத்து வரவும் அனுமதி கிடையாது. அதே நேரத்தில் நினைவிடங்களில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் ஜோதி எடுத்து வரலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தியாகி இமானுவேல் சேகரன் 56- வது நினைவு நாள்


பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி நடைபெறும் நிகழ்வுகளை 5 கிலோ மீட்டர் சுற்றளவில் கண்காணிக்கும் வகையில் போலீஸாரால் நவீன கேமரா பொருத்தப்பட்ட ஆளில்லா உளவு விமானம் இயக்கப்படவுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லாமல் நவீன கேமரா பொருத்தப்பட்ட, 300 மீட்டர் உயரத்தில், 5 கி.மீ. சுற்றளவில் பறந்து சென்று வரக் கூடிய உளவு விமானம் போலீஸாரால் வரவழைக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. 6 பேர் கொண்ட குழுவினர் செப்டம்பர் 11-ம் தேதி காலை முதல் தொடர்ந்து அந்த உளவு விமானம் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.

தற்போது நடைபெறும் இதுபோன்ற நிகழ்ச்சிகளின்போது சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்டறியவும், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனுக்குடன் தெரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கவும் இந்த உளவு விமானம் உதவியாக இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர்.











Friday, August 16, 2013

Cola


Words






India



Scam in India


இந்தியா


மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட போது , பிரிட்டனின் பிரதமராக இருந்த விஸ்ட்டன் சர்ச்சில் , இந்திய பிரதமர் நேருவுக்கு ஒரு தந்தி கொடுத்தார் . அதில் :

" 40 ஆண்டுகாலமாக எங்களின் நேரடி விரோதியாக இருந்த காந்தியைக் கொல்ல நாங்கள் நினைத்ததில்லை , சுதந்திரம் பெற்ற 2 ஆண்டுகளில் நீங்கள் கொன்று விட்டீர்களே!"


Friday, April 26, 2013

Indian coal allocation scam




The coal scam is not just an ordinary corruption story. It is a blueprint of many things that are going to haunt India in the years ahead: incompetence, myopia and a colossal abdication of responsibility.






The Opposition is right to demand that Prime Minister Manmohan Singh furnish some answers to the country. This is not a demand he can evade. Apart from being the head of the council of ministers, during the UPA’s first tenure, Prime Minister Singh was himself the coal minister for about three-and-a-half years. His coal secretary PC Parakh raised strong flags about the arbitrary and nepotistic ways in which captive coal fields were being handed out. Though Singh accepted this and suggested moving to auctioning coal fields in 2004 itself, it took six years for him to operationalise this decision. The rules of play are yet to be set.




It is true there was opposition to the policy change from the states — ironically even from the BJP and CPM who are now his most bitter critics. It is also true that every party and state government was a part of the screening committee that handed out largesse at whim. In that sense, every party is a part of this scam. But the prime minister cannot escape the fact that it was his government in power. Decision-making was his prerogative. And coal is a Union subject over which the Centre has complete authority.



But, citing coalition pressures, Singh repeatedly failed to act. Clearly, the silence of a lamb can sometimes be more harmful than the ill-intent of a wolf. But there is already enough heat in the public domain over this. What is perhaps far more alarming lies one layer beneath. 




The coal scam is not just evidence of dithering leadership, loss to the exchequer, or the, as yet unproved, speculation about myriad kickbacks and political favours. It is about a missing epicenter in governance.


The logic for allocating coal blocks in a panicked rush to private players was that thermal power plants and steel and cement companies were desperate for coal: the country’s growth and energy security was at stake. Yet, after the blocks were allocated, no one monitored whether these companies had begun to mine, or were competent to mine at all. 




They were allowed to squat on the resource, presumably to sell at a premium at a later date. They had also been given cheap coal blocks so they would pass the benefit on to consumers, but whether they were doing so was not monitored.




That’s not all. Public sector giant Coal India has 1.5 lakh hectares of coal-bearing areas at its disposal but is utilising only 25 percent of this coal. Also, existing power plants are functioning at about 40 percent efficiency. The global norm is 80 percent. Additionally, almost 40 percent of the already minimally-efficient power being generated is lost in transmission. Like food, electricity is rotting unused in many locations because of bad distribution. Yet none of these facts seemed to even feature, let alone impact, decision-making in a holistic way.




In January 2011 — perhaps aware of the growing mess around him — Prime Minister Singh set up a high-level committee under former finance secretary Ashok Chawla to suggest ways to overhaul the legal, institutional and regulatory framework around the use of all natural resources: minerals, land, water, forests, gas and spectrum. Such was the urgency, the committee was asked to file its report in four weeks. It submitted its report in June 2011. Two years later, nothing has moved.



At this very moment, therefore — even as report after report lies mute and helpless — the same crushing mess around coal is also playing itself out on all the other vital areas of our national lives: our rivers, our groundwater, our forests, our coastlines, our sandbanks, minerals, mountains and land. All of it is being indiscriminately squandered because there is just no cohesive planning and bird’s eye view informing decisions being made on the use of natural resources. There is no joining of dots, no comprehensive gameplan. No sense of a national future weighted against the present.



Be certain then. It’s coal today: it’s going to be water tomorrow. By the time we understand the disappearance of forests and coastlines and sandbanks is worthy of being called scams, it will be too late.
In the 10 years that he has ruled the most populous democracy in the world — without being an elected leader himself — Prime Minister Singh has been criticised for being an inadequate politician. By a strange trick of fate, are we now to discover he’s been an astute politician all along, but just a very poor administrator?






Wednesday, April 17, 2013

லாக்கப் கொலை / தற்கொலை



கருப்பியைக் கொன்ற போலிஸ் - சிரமப்பட்டு வந்த நீதி!


நான்கு போலீஸார் கருப்பியை மிருகத்தனமாக சித்திரவதை செய்துள்ளனர். லத்தியால் அடித்தும், விரல் நகங்களில் ஊசியால் துளைத்தும் துன்புறுத்தியுள்ளனர். பரிந்து பேச முயற்சித்த கிறிஸ்து தாஸையும் புடைத்து எடுத்துள்ளனர்.

கொட்டடிக் கொலைகள் சாதாரணமாக நடக்கும் தமிழகத்தில், 10 வருடங்களுக்கு முன் பாசிச ஜெயாவின் ஆட்சியில், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு பெண், போலீஸாரால் லாக்கப்பில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி வன்கொடுமைகளை கட்டவிழ்க்கும் அரசு மற்றும் ஆதிக்க சாதியினர் சார்பில் ஏவல் செய்வது போலீஸ் துறையின் இன்றியமையாத கடமைகளில் ஒன்று. தங்களிடம் சிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி ரீதியான அடக்கு முறையையும், தாக்குதலையும், போலீஸ்காரர்கள் செலுத்தாமல் விடுவதில்லை என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.

‘தி இந்து’ நாளேட்டில் வெளியான முன்னாள் தமிழ்நாடு மாநில பெண்கள் கமிஷனின் தலைவர் டாக்டர். வசந்தி தேவியின் கட்டுரையை தழுவி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.


48 வயது நிரம்பிய கருப்பி பரமக்குடியை சேர்ந்தவர். அருந்ததியர் சமூகப் பெண்ணான அவர் வீட்டு வேலைகள் செய்து பிழைத்து வந்தார். 2002 ஆம் ஆண்டு, பணியிடத்தில் தங்கச் சங்கிலியை திருடியதாக வீட்டு உரிமையாளர்களால் பழி சுமத்தப்பட்டு, போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.

காவல் நிலையத்தில் கருப்பி ஆறு நாட்கள் போலீஸாரால் சித்திரவதைக்கு ஆளானார். இறுதியில் அவரது உயிரற்ற சடலம், டிசம்பர் 1 2002 அன்று காவல் நிலையத்தின் பிற்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தது. நடந்தது தற்கொலை என்று போலீஸ் வழக்கு பதிவு செய்தது.

காவலில் இருக்கும் ஒருவர் தப்பித்து சென்று தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் சொல்லும் கதை நடைமுறையில் சாத்தியமற்றது என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின. சம்பந்தப்பட்ட சாட்சிகளை போலீஸார் அச்சுறுத்துவதாக தெரிவித்து, இவ்வழக்கில் தலையிடுமாறு தமிழ்நாடு மாநில பெண்கள் கமிஷனுக்கு பரிந்துரை செய்தன.

அப்போது கமிஷனில் தலைமை பதவியில் இருந்த வசந்தி தேவி இவ்வழக்கை விசாரித்தார். முதலில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் தொடர்பு கொண்டு, கருப்பியின் குடும்பத்தாரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டார்.

சம்பவம் நடந்த காவல் நிலையத்தை பார்வையிட்டவருக்கு, கருப்பியால் தப்பித்துச் சென்று தற்கொலை செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பது தெளிவாகியது. கருப்பியின் குடும்பத்தாரிடம் நடந்த விசாரணையில் அவர்கள் எல்லாரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதும் விளங்கியது.

அவர்களது வாக்குமூலங்கள், ‘கருப்பி திருடியதால் ஏற்பட்ட அவமானம் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாள்’ என்ற போலீஸின் கதையை உறுதிப்படுத்தும் விதமாகவே இருந்தன. இக்கொலைக்கு போலீஸ் எந்த விதத்திலும் பொறுப்பில்லை என்று அவர்கள் உறுதியாக பதிவு செய்துள்ளனர்.

பயத்தால் தான் இவ்வாறு பேசுகிறார்கள் என்று உணர்ந்த வசந்தி தேவி, தன்னை நம்பி உண்மையை வெளியிடலாம் என்று கூறியும், அவர்களது பயம் குறையவில்லை. நடந்தது என்ன என்பதை இனியும் அறிய முடியாது என்று நம்பிக்கை இழந்து அங்கிருந்து புறப்பட இருந்த வசந்தி தேவிக்கு இறுதியில் திருப்பு முனையாக ஒரு ஆதாரம் கிடைத்தது.

கருப்பியின் நாத்தனார் கணவரான கிறிஸ்து தாஸ் என்பவர் இம்மரணத்தின் காரணத்தை மூடிமறைத்து இருந்த இரகசியத் திரையை விலக்கினார். “அம்மா என்னையும் என் பிள்ளைகளையும் தயவு புரிந்து காப்பாத்துங்க, நாங்க பெரிய ஆபத்திலே மாட்டியிருக்கோம்” என்று கூறி வசந்தி தேவியின் காலில் விழுந்து கதறியிருக்கிறார் கிறிஸ்து தாஸ். ‘உண்மையை நான் சொல்லியே ஆகணும், இல்லேனா ஈமத்தீயிலே என் நெஞ்சு வேகாது’ என்று சொல்லி நடந்ததை கூறியிருக்கிறார்.

நவம்பர் 26, 2002 அன்று இரவு கிறிஸ்து தாஸையும் அவருடைய மனைவியையும், கருப்பியின் மகள் மற்றும் மருமகன் ஆறுமுகத்தையும் பரமக்குடி போலீஸார் காவல் நிலையத்திற்கு இழுத்து வந்துள்ளனர். சங்கிலியால் கட்டப்பட்டு இருந்த கருப்பி திருடியதாக போலீஸார் அவர்களிடம் சொல்லியிருக்கின்றனர. அதன் பிறகு கிறிஸ்து தாஸின் ஆடைகளைக் களைந்து, கைகளில் விலங்கிட்டு, கால்களை மேசையில் கட்டி வைத்து விடியும்வரை உடல் ரீதியான தாக்குதல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாக்கியுள்ளனர்.

செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கத்தான், கருப்பியின் உறவினர்களை பிடித்துவந்து, அவளுடைய கண்முன்னரே போலீஸார் அடித்துள்ளனர் என்பதை உணர்ந்தார் கிறிஸ்து தாஸ்.

மூன்று நாட்களும், கருப்பியை நான்கு போலீஸார், மிருகத்தனமாக சித்திரவதை செய்துள்ளனர். லத்தியால் அடித்தும், விரல் நகங்களில் ஊசியால் துளைத்தும் துன்புறுத்தியுள்ளனர். தான் அப்பாவி என்று மன்றாடிய அப்பெண்ணின் கதறல்களுக்கு செவிசாய்க்காமல், பரிந்து பேச முயற்சித்த கிறிஸ்து தாஸையும் புடைத்து எடுத்துள்ளனர்.

மூன்று நாட்கள் கழித்து கிறிஸ்து தாஸ் குடும்பத்தை போலீஸார் விடுவித்தனர்.

டிசம்பர் 1 2002 அன்று, இறந்த பெண் ஒருவரின் உடல் காவல் நிலையத்தின் பின் கிடைத்துள்ளது என்றும், மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு கொள்வதற்கான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றும் கேள்விப்பட்ட கிறிஸ்து தாஸ் அங்கு சென்றுள்ளார். அங்கு அவர் கருப்பியை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது.
வசந்தி தேவியின் விசாரணை துவங்குவதற்கு முன்பே, போலீஸார் கருப்பியின் குடும்பத்தை தொடர்ந்து மிரட்டி வந்தனர் என்ற உண்மையையும் கூறினார் கிறிஸ்து தாஸ்.

விவரங்களுடன் சென்னைக்கு திரும்பிய வசந்தி தேவி கருப்பி வழக்கின் முக்கிய ஆவணங்களான, பிரேத பரிசோதனை அறிக்கை, முதல் தகவல் அறிக்கை, ராமநாதபுரம் கலெக்டரின் மரண விசாரணை அறிக்கை இவற்றை சேகரித்தார். சம்பவத்திற்கு பிறகு நடந்த சப் கலெக்டர் விசாரணையில், ஐந்து போலீஸ் அதிகாரிகளும், ஒரு இன்ஸ்பெக்டரும் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட தகவல் அவருக்கு தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை, ராமநாதபுரம் கலெக்டரின் மரண விசாரணை அறிக்கை ஆகிய ஆவணங்களை சென்னை அரசு மருத்துவமனையின் மருத்துவ தடயவியல் துறை தலைவரின் கருத்துக்காக அனுப்பி வைத்தார்.
தடயவியல் துறைத் தலைவர் கீழ்க்காணும் முக்கிய குறிப்புகளை அனுப்பினார்.

மூச்சுத்திணறல் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளது.
உடல் முழுவதும் பல இடங்களில் கன்றிப்போன காயங்கள் உள்ளன.
இறப்பதற்கு 1-3 நாட்கள் முன்பு வரை கூர்மையற்ற ஆயுதத்தின் மூலம் பலமுறை தாக்கப்பட்டிருக்கிறார்.
இடது மற்றும் வலது பக்கங்களிலிருந்து தாக்குதல்கள் நடந்துள்ளன.
வலது நெற்றியில் உள்ள உறைந்துப்போன காயம் தான் அவர் தூக்கில் தொங்குவதற்கு முன்னதாக ஏற்பட்டுள்ள கடைசி காயமாகும்.

கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு இவ்வழக்கை சி.பி.ஐ. அல்லது மாநில கிரைம் பிரான்ச் மூலமாக, விசாரிக்கக் கோரி உள்துறை செயலாளருக்கும் தலைமை செயலருக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். கடிதங்களுக்கும் நினைவூட்டல்களுக்கும் அரசாங்கத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை.
தமிழ்நாடு மாநில பெண்கள் கமிஷன் சட்டப்படியான அதிகாரங்கள் இல்லாத அமைப்பாக இருந்ததால் வழக்கின் சாட்சிகளை அழைத்து விசாரிக்கும் உரிமை அதற்கு கிடையாது. ஆகவே, வசந்தி தேவி, தேசிய பெண்கள் கமிஷன் தலைவராக இருந்த பூர்ணிமா அத்வானியை தொடர்பு கொண்டார். தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில பெண்கள் கமிஷன்கள் சேர்ந்து, அக்டோபர் 28 2003 அன்று கூட்டு பொது விசாரணையை மதுரையில் நடத்தினர்.

விசாரணைக்கு கருப்பியின் உறவினர்களும், பல சாட்சிகளும் பரமக்குடி சப்-கலெக்டரும், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களும் அழைக்கப்பட்டனர். கருப்பி, உடல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளாகித்தான் இறந்திருக்கிறார் என்பது மேலும் தெளிவானது. நடந்து தற்கொலை அல்ல போலீஸாரால் நடத்தப்பட்ட கொலை என்பது உறுதியாகியது.

கொலை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும், கருப்பியின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ 2 லட்சமும், கொடுமைகளுக்கு ஆளான ஆறுமுகம் மற்றும் கிறிஸ்து தாஸ் குடும்பத்தினருக்கு தலா ரூ 1 லட்சமும், நஷ்ட ஈடு தொகையாக வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

அறிக்கை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், வசந்தி தேவியின் பணிக்காலம் முடிவடைந்த மார்ச் 2005 வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2006 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் அப்போது மாநில மகளிர் ஆணையத்தின் வழக்கறிஞருமான சுதா ராமலிங்கம் இவ்வழக்கை பரமக்குடி காவல் நிலைய கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து சி.பி.ஐ பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இம்மனுவினை நீதிபதி கே.என்.பாஷா விசாரித்தார். “பாதிக்கப்பட்ட பெண், போலீஸாரால் மனிதத் தன்மையற்ற விதத்தில் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதை ஆதாரங்கள் நிரூபிக்கின்றன என்றும் போலீஸ் அதிகாரிகள் குற்றவாளிகளாக சம்பந்தப்பட்டிருப்பதால் இவ்வழக்கின் புலனாய்வை தன்னிச்சையான அமைப்பு ஒன்று செய்யவேண்டும்” என்று தீர்ப்பு வழங்கினார்.

5 வருடங்களுக்கு பிறகு, சென்ற பிப்ரவரி 14ம் தேதி அமர்வு நீதிமன்ற நீதிபதி டபிள்யூ. சதாசிவம் கருப்பியை கொன்ற எட்டு போலீஸ்காரர்களில் 5 பேருக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு தண்டனையும் இன்னும் ஒருவருக்கு 3 வருட சிறை தண்டனையும் வழங்கியுள்ளார்.
லாக்கப் கொலையை தற்கொலை என்று சித்தரித்து கருப்பியின் உடலை மின் கம்பத்தில் தூக்கிலிட்ட காவல் நிலையத்துக்கு பொறுப்பாக இருந்த இன்ஸ்பெக்டர் சாஹில் ஹமீதுக்கு ரூ 1 லட்சம் ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.

சட்டத்தின் காவலர்களான போலீஸ்காரர்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்த ஆதரவுமற்ற ஒரு பெண்ணை படுகொலை செய்திருக்கின்றனர். அவரது குடும்பத்தையும் சித்திரவதை செய்திருக்கின்றனர். அந்த குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனைகளும் அபராதமும் மட்டும் விதிக்கப்பட்டுள்ளன. இதுதான் நமது நீதி நிர்வாக அமைப்பின் லட்சணம்.




DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget