Saturday, February 16, 2013

தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தி புதியதமிழகம் கட்சி மும்முனைப் போரட்டம்





தொல்காப்பியருடைய காலத்தில் மருத நில மக்களாகஅடையாளப்படுத்தப்பட்ட வேளாண்குடிமக்கள்இன்றைய தேவேந்திர குல வேளாளர்கள் ஆவர்.காலப்போக்கில் அத்தொன்மை வாய்ந்த தமிழ்குடிமக்கள் பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையர்என மருவி அழைக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறுபெயர்களில் அழைக்கப்படக்கூடிய வேளாண்குடிமக்களை ”தேவேந்திர குல வேளாளர்” என ஒரே பெயரில்அழைத்திட அரசாணை பிறப்பிக்க உரிய சட்ட பூர்வநடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்

 அரசு மற்றும் பொது நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டைபெறும் பொருட்டு  சமூகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்ட மக்களை அகில இந்திய அளவில் ஒருங்கிணைத்து “அட்டவணை சமுதாய மக்கள்” என அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வகைப்படுத்தினார்.தமிழகத்தில் அட்டவணைப்படுத்தப்பட்ட பிரிவில் 76 சாதிகள் உள்ளடங்குவர். இதில்பள்ளர் என்ற “தேவேந்திர குல வேளாளர்” சக்கிலியர் என்ற ”அருந்ததியர்” பறையர் என்ற”ஆதிதிராவிடர்” ஆகிய மூன்று பிரிவினர் பெரும்பான்மையினர் ஆவர்.
அகில இந்திய அளவிலும் மற்றும் பிற மாநிலங்களிலும் இதே போன்றுஅட்டவணைக்குள் அடங்கிய பல்வேறு இன மக்களை தனித்தனியாக அந்தசாதியினுடைய பெயராலும், இட ஒதுக்கீட்டை பெறும் பொருட்டு அரசால் வழங்கப்படும்சான்றிதழ்களில் எஸ்.சி அல்லது அட்டவணை சாதி என்று அழைக்கப்படுகின்றனர்.தமிழகத்தில் 1980 ஆம் ஆண்டு சில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தவறானநடவடிக்கையால் அட்டவணை சாதிக்கு உட்பட்ட 76 சாதிகளையும் ”ஆதிதிராவிடர்கள்”என்று அப்பட்டியலில் உள்ளடங்கிய ஒரு சாதியின் பெயரால் அழைக்கப்படும் எனஅரசாணை பிறப்பிக்கப்பட்டு அதைத் தொடர்ந்து இன்று வரையிலும் நீடித்து வருகிறது.

இந்த தவறான நடவடிக்கையின் காரணமாக “பட்டியலின” மக்களிடையே தேவையற்றமுரண்பாடுகளும், ஒற்றுமையின்மையும் நிலவி வருகிறது.எனவே பட்டியலினமக்களின் நலன்களுக்கான அரசுத்துறைக்கு ”ஆதிதிராவிடர் நலத்துறை” என இதுவரைதமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகள் அனைத்தையும் ரத்து செய்து “பட்டியலினமக்கள்” என பொதுவாக அழைத்திட வலியுறுத்தியும்




 அட்டவணை மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் எந்த ஒரு மாற்றம் செய்வதற்கு மாநிலஅரசிற்கு தனியாக உரிமை இல்லை. கடந்த காலங்களில் ஆந்திரா மற்றும் பஞ்சாப்மாநிலங்களில் அந்த அரசு கொண்டு வந்த உள் இட ஒதுக்கீடு சட்டங்கள் நீதிமன்றத்தால்ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 2008 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசுதமிழகத்தில் பட்டியலின மக்களுக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டை அருந்ததியர் உள்இட ஒதுக்கீடு என்ற பெயரில் சிதைத்து, மேலும் இந்தியா முழுமைக்கும் கல்வி மற்றும்வேலை வாய்ப்புகளில் பொது பிரிவினருக்கு அடுத்தபடியாக முன்னுரிமை பெற்றிருந்தஅனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கான முதல் வாய்ப்பை தமிழகத்தில் மட்டும்பட்டியலின மக்களில் 3 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடிய  சக்கிலியர் அல்லதுஅருந்ததியர் என்று அழைக்கப்படக்கூடிய ஒரு பிரிவினருக்கு மட்டுமே கிடைக்ககூடியவகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன் விளைவாக கடந்த மூன்று வருடங்களாக பல்கழைக்கழகங்கள் மற்றும்கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் அரசு உதவிபெறக்கூடிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உருவான அனைத்து ஆசிரியர்பணியிடங்கள் மற்றும் அரசினுடைய 110 துறைகளில் உயர் பதவிகள் அனைத்தும்அருந்ததியர் என்ற ஒரே சாதிக்கு மட்டுமே தாரை வார்க்கப்பட்டது.

இதன் காரணமாக  பள்ளர் எனும் “தேவேந்திரகுல வேளாளர்கள்”, பறையர் என்றுஅழைக்கப்படக்கூடிய  ”ஆதிதிராவிடர்கள்” உட்பட பிற 70 சாதி மக்களின் படித்தபிள்ளைகள் எண்ணற்ற வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர். முந்தைய தி.மு.க. அரசுகொண்டு வந்த பல திட்டங்களை ரத்து செய்துள்ள இந்த அரசு தி.மு.க. அரசுகொண்டுவந்த உள் இட ஒதுக்கீடு சட்டத்தை மட்டும் ரத்து செய்ய தயக்கம் காட்டுகிறது.

இந்த அரசு உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த தேவேந்திர குல வேளாளர்மற்றும் ஆதிதிராவிடர்களு இது  பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. எனவே பட்டியலினமக்களின் பெரும்பான்மை பிரிவினரின் உரிமையைப் பறிக்கும் உள் இட ஒதுக்கீட்டைஉடனடியாக ரத்து செய்யயும் வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக பிப்ரவரி 6ஆம் தேதி முதல் மும்முனைப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் கூறினார்.





புதிய தமிழகம் கட்சி







பேரையூர் ஊராட்சி



முதுகுளத்தூர் அருகே பேரையூரில் ஊராட்சி அ.தி.மு.க. த லைவரைக் கணடித்து, கிராமத்தினர் இன்று(திங்கள்கிழமை)உண்ணாவிரதம் இருந்த னர். இதனால் பதற்றம் நிலவியதையொட்டி, போலீசார் குவிக்கப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்ம், பேரையூர் ஊராட்சி தலைவராக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. நிறைகுளத்தான் மனைவி, சவுந்தர வள்ளி என்பவர் தற்போது இரு்நது வருகிறார். ஆனால் ஓராண்டிற்கு முன்பு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற சமயம், சவுந்தர வள்ளி ளியைத் தோற்கடித்து, மேட்டுப்பட்டி வேல் முருகன்(தி.மு.க) என்பவர், பேரையூர் ஊராட்சி தலைவராகத் தேர்ந்தெடுக்க்ப்பட்டார் என்பது குறிப்பிடத்ததக்கது ஆகும். 

ஆனால் கடந்த தடவை ஊராட்சி தலைவராகவும், தற்போது மாவட்ட ஊராட்சிகள் கவுன்சிலராகவும் உள்ள நிறைகுளத்தான் மகன் சதன் பிரபாகர் என்பவர், தனது நிர்வாகம் சமயம், போடப்படிருந்த ஒப்பந்த பணி ஒன்றில் தற்போதைய ஊராட்சி தலைவர் வேல் முருகன் முறைகேடு செய்துள்ளார் என்று ராமநாதபுரம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வழக்கு விசாரணை முடிவில் வேல் முருகன் வெற்றி பெற்றது செல்லாது என்றும்,  தேர்தலில் இவரிடம் தோற்ற்ப்போன சவுந்தவள்ளியை பேரையூர் ஊராட்சி தலைவ ராக பதவி ஏற்கும் படியும் நீதிபதி உத்தரவிட்டு. பரபரப்பு தீர்ப்பு கூறினார. இந்த தீர்ப பை எதிர்த்து, மதுரை கிளை உயர்நீதி மன்றத்தில் வேல்முருகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த நிலையில் பேரையூர் ஊராட்சி நிர்வாக சீர்கேடுகள், கிராமங்கள் வளர்ச்சித் திட்டப் பணிகள் புறக்கணிப்பு, ஊராட்சி தலைவராக சவுந்தர வள்ளி நீடிப்பது போன்றவற்றை கண்டிப்பதாகவும், ப்லவேறு கோரிக்கைகளை வலியுறுததியும் காலை 10 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.உண்ணாவிரதத்திற்கு தேவேந்திரகுல வேளாளர் சமூக தலைவர் துரைராஜ்(முன்னாள் தலைமை ஆசிரியர்) தேவேந்திர குள சமூக பிரமுகர்கள் மகாலிங்கம், சக்தி வேல், வழக்குரைஞர் ரவி(எ)சிவகுமார், ஊராட்சி துணைத் தலைவர் ரூபி கேசவன் ஆகியோர் முன்னிலையும் வகித்தனர்.   வார்டு உறுப்பினர்கள் முத்து லட்சுமி ராஜகுமார்(வார்டு-1), ராணி பாஸ்கரன்(வார் டு -2), சுரேஷ்(வார்டு-3), பேச்சி ராஜன்(வார்டு-8), ஊராட்சி முன்னாள் தலைவர் பெருமாள், தே.மு.தி.க. கிளை தலைவர் முருகேசன், தேவேந்திர குல வேளாளர் மற்றும் மகளிர் மன்றத்தினர் 100 பேர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்தால் கமுதி, முதுகுளத்தூர், பேரையூர் பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவில், முதுகுளத்தூர் ஏ.எஸ்.பி. விக்ரமன், காவல் ஆய்வாளர்கள் ஜேசு, குமரன், கண்ணதாசன், பிச்சையா,  சார்பு ஆய்வாளர்கள் சபரிதாசன், தனகுமார், திலகவதி, கீதா, முத்துசசாமி, தங்க ராஜ், செந்தில்குமார் மற்றும் போலீஸார் குவிக்கப்பட்டு, பலத்த பந்தோபஸ்து போடப்பட்டிருந்தது.





பசுபதி பாண்டியன் - திமுக தலைவர் கருணாநிதி


திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி பதில் அறிக்கையில் ''




கேள்வி :-தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவராக இருந்த பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆகியும், முதல் குற்றவாளியாகக் கூறப்பட்ட சுபாஷ் பண்ணையாரை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்களே?

கருணாநிதி : திருச்சியில் திமுக மாவட்டச் செயலாளர் கே.என்.நேருவின் தம்பி கே.என். ராமஜெயம் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கிலும் குற்றவாளிகள் யாரும் இதுவரை கண்டுபிடிக்கப்பட வில்லையே? என்று பதில் வினா தொடுத்துள்ளார்.




DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget