Friday, January 31, 2014

கைது குறித்து உச்சநீதிமன்றத்தின் 11 கட்டளைகள்

"கைது" என்ற சொல் கைது செய்தல் அல்லது தடுத்தல் அல்லது ஒருவரின் சுயசுதந்திரத்தை பறித்தல் என்று பொருள்களில் கையாளப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்ட நபரின் சுதந்திரம் தடைபட ஆரம்பிக்கும் போதே கைது நடவடிக்கை தொடங்கி விடுகின்றது.

ஆரம்பக் காலங்களில் ஜாமீனில் விடக்கூடிய குற்றங்களுக்குக் கூட கைவிலங்கு மாட்டுவார்கள். திரைப்படங்களில் காண்பிப்பது போல விலங்கு மாட்டி வீதி வீதியாக அழைத்துக் கொண்டு காவல் நிலையம் செல்வர். இது போன்ற செயல்களை வன்மையாக கண்டித்த உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும்  இது தொடரக்கூடாது என்றும், பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், காவல்துறையின் பிடியில் இருந்து தப்பித்து செல்லக் கூடியவர்களுக்கு மட்டுமே விலங்கு போடலாம் என்றும் கட்டளையிட்டுள்ளது. இனி கைது செய்யப்பட்டோரின் உரிமைகளைக் காண்போம்.

ஒருவர் கைது செய்யப்பட்டால், அதற்கான காரணங்கள் அவருக்குத்  தெரிவிக்கப்பட வேண்டும். அவர் பிடிப்பாணையின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தால், பிடிப்பாணையைப் பார்க்க அவருக்கு உரிமை உண்டு. அவருடைய விருப்பத்திற்கேற்ப வழக்கறிஞரைக் கலந்தாலோசிக்கும் உரிமையும் அவருக்கு உண்டு.

கைது செய்யப்பட்ட நபரை, காவல்துறை கைது செய்த 24 மணிநேரத்திற்குள்ளாக அருகில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பாக ஆஜர்படுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட நபரை 24 மணிநேரத்திற்கு மேல் காவலில் வைக்க குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. காவல்துறைக்கு இந்த அதிகாரம் இல்லை. குற்றவியல் நீதித்துறை நடுவரின் முன் ஆஜர் செய்யப்பட்டு அவர் காவலைத் தொடரச் சொன்னால் 24 மணிநேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட காவலில் வைக்க கூடாது.



கைது குறித்து உச்சநீதிமன்றத்தின் 11 கட்டளைகள்

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்க வேண்டும். இதனுடைய நோக்கம் என்னவென்றால் குற்றம் சாட்டப்பட்டவருக்குத் தம்மைக் கைது செய்யும் அதிகாரியின் பெயர் என்ன? அவர் என்ன ரேங்க்  என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.

2. கைது செய்தவுடன் அந்த இடத்திலேயே கைது குறிப்பு தயார் செய்யவேண்டும். அந்தக் கைது குறிப்பில் ஒரு சாட்சியம் கையெழுத்து வாங்க வேண்டும் மற்றும் அதில் கைது செய்யப்படட நேரம் காணப்படவேண்டும்.

3. கைது செய்யப்படும் தகவலை உறவினர் / நண்பர் / தெரிந்தவருக்குத் தெரிவிக்கவேண்டும்.

4. கைது செய்யப்பட்ட விபரத்தை 8 முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும்.

5. காவல்துறை அதிகாரி குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்யும் போது என்ன குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விபரத்தை அவருக்குத் தெரியப்படுத்தவேண்டும்.

6. கைது செய்த பின்பு, நேரடியாக காவல் நிலையத்திற்குக் கொண்டுச் செல்ல வேண்டும். அதே போல் காவல்நிலையத்தில் உள்ள டைரியில் மேலே கண்ட விவரங்கள் பதியப்படவேண்டும்.

7. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்து சோதனை குறிப்பு தயார் செய்ய வேண்டும். அதில் காவல்துறை அதிகாரியும், கைதியும் கையொப்பம் செய்ய வேண்டும். மேலும், அதனுடைய நகல் கைது செய்யப்பட்டவருக்குத் தரப்படவேண்டும்.

8. கைது செய்யப்பட்டவர் விரும்பினால், தகுதி வாய்ந்த மருத்துவரால் சோதனை செய்யவேண்டும்.

9. மேலே கூறப்பட்டுள்ள தஸ்தாவேஜூகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட செயல்துறை நடுவருக்கு காவல்துறையினரால் அனுப்பி வைக்கப்படவேண்டும்.

10. கைது செய்யப்பட்டவர் காவல்துறையின் காவலில் இருக்கும் போது எதிரி (கைது செய்யப்பட்டவர்) தன்னுடைய வழக்கறிஞரை சந்திக்க விரும்பினால் தடை செய்யக்கூடாது.

11. எதிரி கைது செய்யப்பட்ட 12 மணிநேரத்திற்குள் அவரது கைது பற்றி மாவட்டத்தில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கப்படவேண்டும். அவ்வாறு தெரிவிக்கப்படும் தகவல்கள் தனி நோட்டிஸ் போர்டில் இருக்க வேண்டும்.

இவையெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியப்படுமா என்பது கேள்வியே. இருப்பினும் இவற்றில் சில முக்கிய விஷயங்கள் அவர்கள் செய்ய தவறினால் வழக்கறிஞர் மூலம் அதனை நீதிமன்ற கவனத்துக்குக் கொண்டு செல்லமுடியும். அத்தகைய நேரங்களில் காவல்துறை அதிகாரியை நீதிமன்றம் கண்டிக்கவோ, தண்டிக்கவோ செய்யலாம்.


************************************************************************************




விருதுகள் வேண்டாம்

பாரத ரத்னா விருது இனி எத்துறை வல்லுநருக்கும் வழங்கப்படலாம் என்று விதிகளைத் தளர்த்திவிட்ட பின்னர் அந்த விருது இன்னின்னாருக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஆங்காங்கே குரல்களும் கோரிக்'கை'களும் உயரத் தொடங்கியுள்ளன. 

அதே சமயம் இத்தகைய விருதுகளை வேண்டாம் என்று புறந்தள்ளிய பெருமக்களும் இருக்கத் தான் செய்கிறார்கள். அவர்களைப் பற்றிய ஒரு பட்டியல் இது.

பட்டியலில் முதலாமவர்: 
1. அபுல் கலாம் ஆஸாத். சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர். ஐ ஐ டி போன்ற இந்தியக் கல்வித் தரக் குறியீடுகளைத் தொடங்கிய பெரும் சாதனையாளர். அவருக்கு அப்போது பாரத ரத்னா அளிக்கப்பட்டபோது, தார்மீக எண்ணத்துடன், அரசில் 'விருதுப் பட்டியலைத் தயாரிக்கும் இடத்தில் இருக்கும் தான் விருது பெறத் தகுதியற்றவன்' என்று கூறி மறுத்துவிட்டார். ஆனால், அவர் எதிர்ப்பு தெரிவிக்க இயலாத நிலையில் (அதாவது, அவரது மரணத்திற்குப் பின்னர்) 1992 ல் மீண்டும் அவருக்கு இந்த பாரதரத்னாவை கொடுத்தே விட்டார்கள்.

2. ரொமிலா தாப்பர் (சரித்திர ஆய்வாளர்) 1992லும் 2005லுமாக இரண்டு முறை பத்ம விபூஷணை மறுத்த ரொமிலா தாப்பர் சொன்ன காரணம் : 'கல்வியியலாளர்களே எனக்கு விருது அளிக்கத் தகுதியானவர்கள்; குறைந்த பட்சம் என் துறையில் பணி சிறந்தவர்களாகவாவது அவர்கள் இருக்கவேண்டும்'

3.டட்டோபந்த் தெங்கிடி (சமூகப் பிரமுகர்) 2003ல் பத்ம பூஷணை மறுத்து அவர் சொன்ன காரணம் "என் தலைவர்கள் ஹெட்கேவர், குருஜி கோல்வால்கர் ஆகியோருக்கு பாரதரத்னா கிடைக்காத வரை இதை என்னால் ஏற்க இயலாது" (நல்லவேளை, கோட்சேவுக்கும் பாரதரத்னா கேட்காமல் விட்டார்)

4. உஸ்தாத் விலாயத் கான் (சிதார் இசைமேதை) பத்மஸ்ரீ(1964), பத்ம விபூஷண் (1968) விருதுகளை மறுத்து அவர் சொன்னகாரணம்: "என் இசையை மதிப்பிட இந்தத் தேர்வுக் கமிட்டிக்குத் தகுதியில்லை"

5. ரத்தன் தியாம் (கலைஞர்) 2001 ஆம் ஆண்டு பத்மஸ்ரீயை நிராகரித்த ரத்தன் இப்படிச் சொன்னார்: "வடகிழக்கில் (நாகாலாந்தில்) மரணங்களுக்கும், காயங்களுக்கும் குழப்பங்களுக்கும் வித்திடுகிற அரசின் முடிவால், ரத்தம் கசியும் இதயத்துடன் இவ்விருதைப் புறக்கணிக்கிறேன்."

6. நிகில் சக்கரவர்த்தி (ஊடகவியலாளர்) 1990ல் பத்மபூஷண் விருதை நிராகரித்த நிகில் சொன்னார்: "ஊடகத்துறையினருக்கு இந்த விருது வழங்கப்படுவது பொருத்தம் இல்லை என்று கருதுகிறேன்"

7. சுகுமார் அழிக்கோடு (மலையாள எழுத்தாளர்) 2007 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை மறுத்த சுகுமார் "இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது" என்று காரணம் கூறினார்.

8. குஷ்வந்த்சிங் (எழுத்தாளர்) 1984ல் பத்ம பூஷண் விருது பெற்ற குஷ்வந்த், பொற்கோயிலுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை எதிர்த்து அதனைத் திருப்பியளித்தார். ஆயினும், 2007ல் பத்ம விபூஷண் பெற்றார்.

9. கே. சுப்ரமணியம் (பாதுகாப்பு ஆலோசகர்) 1999ல் பத்ம பூஷணை மறுத்தவர் சொன்னது 1990 -ல் நிகில் சொன்ன அதே காரணம்.

10. கனக்சென் தேகா (அஸ்ஸாமிய எழுத்தாளர்) 2005ல் பத்ம ஸ்ரீயை மறுத்த தேகா சொன்னது : "இந்த விருதை ஏற்றால், அஸ்ஸாமியமக்களின் அன்பும் மதிப்பும் எனக்குக் குறைந்துவிடும்"

11. சிதாரா தேவி (கதக் கலைஞர்) 2002 ஆம் ஆண்டு பத்ம பூஷணை மறுத்த சிதாரா இப்படிக் கூறினார்: "பாரத ரத்னாவுக்கு குறைந்த விருதை ஏற்க மாட்டேன். - தகுதி குறைந்தவர்களெல்லாம் பத்ம விருதுகளைப் பெறுகிற நிலையில் நானும் அதைப் பெற மாட்டேன்"

12. எஸ்.ஜானகி (திரைப்பாடகி) 2012 ஆம் ஆண்டு பத்ம பூஷணை மறுத்துத் தள்ளிய ஜானகி அம்மையார் "தென்னிந்திய கலைஞர்களிடம் இந்திய அரசு ஓரவஞ்சனை பாராட்டுகிறது. ஆகவே, இந்திய அரசின் இவ்விருதை நான் புறக்கணிக்கிறேன்" என்றார்.




தாமிரபரணி!


குடிநீருக்கு தகுதியில்லாத தாமிரபரணிதமிழகத்தின் தென் மாவட்டங்களான  திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி ஆறு அதன் முகத்துவாரத்திலிருந்து சுமார் 3 ½ கி.மீ தூரத்திலேயே அதிக அளவில் மாசுபடுத்தப்படுகிறது.

காரையாறு அணைக்கட்டிலிருந்து வெளியாகும் தூய்மையான தாமிரபரணி நீர், அணைக்கட்டின் கீழே சுமார் 3 ½ கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சொரி முத்து ஐய்யனார் கோவில் அருகிலேயே மிகப் பெரிய அளவில், குடிநீருக்கு தகுதியில்லாத அளவிற்கு மாசு படுத்தப்படுகிறது.

சமீபத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகமும் ஒரு சுற்றுச் சூழல் அமைப்பும் சமீபத்தில் ஒரு சிறப்பு நீர் ஆய்வை மேற்கொண்டது. காரையாறு தாமிரபரணி நீர் தேக்கத்திலிருந்து பாபநாசம் கோவில் முன்பு வரை உள்ள 6.63 கி.மீ. இடவெளி தூரத்தில் 7 இடங்களில் தாமிரபரணி நீரை எடுத்து பரிசோதனை செய்தனர்.
                 
இந்த ஆய்வு சுற்றுச்சூழல் விஞ்ஞானி பேராசிரியர் யு.பு.முருகேசன் தலைமையில் 20 நாட்கள் நடைபெற்றது. இதே போன்ற ஆய்வு இதற்கு முன்பும் இதே இடத்தில் 2004 மற்றும் 2006ஆம் ஆண்டுகளிலும் நடைபெற்றிருக்கிறது. அச்சமயம் சொரிமுத்து ஐய்யனார் கோவில் அருகிலும் பாபநாசம் சிவன் கோவில் அருகிலும் எடுத்த பரிசோதனை நீரில் “டோட்டல் - கோலிபார்ம்ஸ்” (Total coliforms) என்னும் பாக்டிரியாவின் எண்ணிக்கை 100 மிலி நீரில் 844 – 1,300 என்ற அளவில் மட்டுமே இருந்தது.
                
ஆனால், தற்போது நிலமை 100 சதவிகிதம் அதிகரித்து குடிநீருக்கு உபயோகமற்ற அளவில் 100 மி.லி. நீரில் பாக்டிரியாவின் எண்ணிக்கை 2,400க்கும் அதிகமாக உள்ளது.  அவர்களிடம் உள்ள பரிசோதனை கருவியில் இந்த அளவிற்கு மேல் பாக்டிரியாக்களின் எண்ணிக்கையை கணக்கிடமுடியாது என்கின்றனர். அதிக தொழில் நுட்பம் வாய்ந்த நுண்ணிய கருவியின் மூலம் இந்த நீரில் கலந்துள்ள உடலுக்கு கேடு விளைவிக்கும் பாக்டிரியாவை கணக்கிட்டால் 100 ஆடு  நீரில் பல லட்சம் கிருமிகள் இருக்கும் ஆபத்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
                
ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசையை ஒட்டிய 20 தினங்களில் காரையாறு சொரிமுத்து ஐய்யனார் கோவில் பகுதியிலிருந்து பாபநாசம் சிவன் கோவில் பகுதி முடிய உள்ள சுமார் 3. கி.மீ பகுதியில் கொட்டப்படும் கழிவுகளே அனைத்து நீரும் மாசு படுவதற்கு பெரிதும் காரணமாக உள்ளது. பக்தர்கள் பலியிடும் உயிரினங்கள் மற்றும் பக்தர் கூட்டத்தின் கழிவுகள் முதலானவைகளே இதற்கு காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் உலக சுகாதார அமைப்பு விதித்துள்ள குடிநீருக்கான தரத்தில் 100 மி.லி. நீரில் 50 எண்ணிக்கை "டோட்டல் கோலிபார்ம்ஸ்” (Total coliforms) மட்டுமே இருக்கலாம் என அனுமதிக்கிறது. வேறு எந்தவிதமான பேக்கல் கோலி பார்ம் ஒன்று கூட குடிநீரில் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறது.
                
2ஃ8ஃ13  முதல் 16ஃ8ஃ13  முடிய சொரிமுத்து ஐய்யனார் கோவில் அருகில் பரிசோதிக்கப்பட்ட நீரில் உடலுக்கு கேடு விளைவுக்கும் பாக்டிரியாவின் எண்ணிக்கை, 100 ஆடு நீரில் 2,400க்கும் அதிகமாக உள்ளது.  இது மட்டுமல்லாமல் திருநெல்வேலி டவுண், பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கழிவு நீரையும் தாமிரபரணி நதியில் இணைத்து விடுகிறார்கள். நாட்டில் உள்ள அனைத்து நதிகளை இணைக்கக் கேட்டு போராடி வரும் இத்தருணத்தில் இவர்கள் சாக்கடையை நதி நீரில் இணைக்கிறார்கள். தாமிரபரணி நதிக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் இந்நிலையென்றால், தூத்துக்குடி மாவட்டத்தில் இந்நதி கரையோரமாக இருக்கும் குரங்கினி முத்துமாலை அம்மன் கோவில் திருவிழாவும், ஏரல் சேர்மன் ஆடி அமாவாசை திருவிழாவும் தன் பங்குக்கு தாமிரபரணி ஆற்றை மேலும் கூவத்திற்கு ஈடாக மெருகேற்றி வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பேரூராட்சியின் அனுமதியுடன் தாமிரபரணியாற்றில் குப்பைகள் கொட்டப்படுவது, மிகவும் வேதனை அளிக்கிறது
           
120 கி,மீ பயணம் செய்யும் தாமிரபரணியாற்றின் துவக்கத்தில் உள்ள 3.5 கி.மீ  தூரத்திலே இவ்வளவு மாசுகள் நீரில் கலந்தால், அதன் கடைமடையின் நிலமை என்னவாக இருக்கும் என்று யோசிக்கவே அச்சமாக இருக்கிறது. சுமார் 1 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசனத்திற்கும், பல லட்சம் மக்களின் குடிநீருக்கும் தாமிரபரணி ஆறு பயன்படுகிறது.  ஆற்று நீரை மாசு படுத்தாமல் இருக்கின்ற வகையில், அரசு மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஆற்று நீரை மாசுபடுத்தாமல் புனிதமாக பயன்படுத்த வேண்டும் என்பது இங்குள்ள சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

அரசும், மக்களும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.



Thursday, January 30, 2014

Chiyaan Vikram's Summer Special 2014


Chiyaan Vikram's magnum-opus with director Shankar, Ai, is currently being filmed in Kodaikanal. This is the last leg of the shoot and Vikram will be relieved from his duties for the film in another 6 days. He will begin dubbing for the film in the first week of February on either 3rd or 4th.

The film is being targeted as an April 14th release and all the work is being done keeping the release date in mind. Aascar Films is producing Ai on a grand scale. Amy Jackson plays the female lead while Santhanam, Ram Kumar, Upen Patel and Suresh Gopi are also in the movie.

==============================================================================

Director Shankar has been keeping his fans waiting for more than 2 years now, since the release of Nanban. All along he has been sculpting his new movie, Ai, with Vikram and Amy Jackson in the lead.

The movie is now nearing the finish line and we had reported about how Vikram is expected to begin dubbing for the film in the first week of February. Most of the scenes have already been canned while a few song sequences need to be shot. In typical Shankar style, a grand set has been erected in Chennai and a song sequence would be shot here in the first week of March. 


The editing of the movie is happening simultaneously along with the filming. The makers are devising all possible plans to release the movie as a summer special around April 14th.

==========================================================================

'ஐ' படத்தினை விளம்பரப்படுத்த இயக்குநர் ஷங்கர் படம் உருவான விதத்தின் வீடியோவே போதுமானது என்று திட்டமிட்டு இருக்கிறார்.

விக்ரம், ஏமிஜாக்சன், ராம்குமார், சுரேஷ் கோபி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடிப்பில், தமிழ் சினிமாவில் உருவாகி வரும் மெகா பட்ஜெட் படம் 'ஐ'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய ஷங்கர் இயக்கியிருக்கிறார்.

படத்தில் விக்ரம் என்ன லுக்கில் வருகிறார் என்பதை கூட ஷங்கர் வெளியிடவில்லை. இப்படத்தினைப் பற்றிய செய்திகள் எல்லாமே மர்மமாகவே இருக்கிறது. இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கவிருக்கிறது. பிரம்மாண்ட அரங்கில் பாடல் காட்சி ஒன்றை காட்சிப்படுத்த இருக்கிறார்கள்.

இந்நிலையில், படத்தினை விளம்பரப்படுத்த படம் உருவான வீடியோ பதிவே போதும் என்று திட்டமிட்டு இருக்கிறாராம் ஷங்கர். பேட்டிகள் எல்லாம் கொடுத்துவிட்டு, படம் உருவான விதத்தினை டிவி சேனல்களில் கொடுத்தாலே போதும், மக்கள் ஆச்சர்யப்பட்டு விடுவார்கள் என்று திட்டமிட்டு இருக்கிறாராம்.

ஏனென்றால், விக்ரமின் உழைப்பு, பாடல்களுக்காக செட்கள் போடப்பட்ட விதம், பாடல்களுக்கு விக்ரமிற்கு போடப்பட்ட மேக்கப், சண்டைக் காட்சிகள் உருவான விதம் என எல்லாவற்றையுமே வீடியோவாக எடுத்திருக்கிறார்கள்.

இந்த வீடியோ பதிவை பார்த்தாலே வியப்படைந்து விடுவார்கள். ஆகையால் பேட்டி கொடுத்துவிட்டு, இந்த வீடியோவை கொடுத்து விடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறாராம்.



புதிய தமிழகம் வெளிநடப்பு

சட்டப்பேரவை கூட்டத்தொடர்

ஆளுநர் உரையை புறக்கணித்து, திமுக, மமக, புதிய தமிழகம் வெளிநடப்பு
நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வியாழக்கிழமை ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது. 

இதில் எதிர்க்கட்சித் தலைவரான தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன. 





புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வெளிநடப்புக்குப்பின் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை. சட்டசபையில் அறிவிக்க வேண்டிய அறிவிப்புகளை தினம் தினம் அறிக்கையாக வெளியிடுவது போன்ற பல்வேறு ஜனநாயக விரோத போக்கை கண்டித்து கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தேன்.


இவ்வாறு அவர் கூறினார்.




Monday, January 27, 2014

தென்காசி தொகுதியில் தேர்தல் பணி - புதிய தமிழகம்

தென்காசி

பாராளுமன்ற தேர்தலில் கட்சிகளுக்கிடையே கூட்டணி உடன்பாடு ஏற்படும் முன்பே தென்காசி தொகுதியில் தேர்தல் பணியை புதிய தமிழகம் கட்சியினர் தொடங்கி விட்டனர். பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. அணியில் புதிய தமிழகம் இடம்பெறுவது உறுதியாகி விட்டது. அக்கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகார பூர்வமாக தி.மு.க. தரப்பில் அறிவிக்கப்படவில்லை.

தென்காசி மக்களவை தொகுதிக்குட்பட்ட புதிய தமிழகம் கட்சியின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் பாராட்டு விழா கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது:–

நம் கட்சியினர் கூட்டணி கட்சியினரோடு இப்போதே நல்ல தொடர்பை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இதுவரை இந்த தொகுதியிலிருந்து வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றவர்களால் இந்த தொகுதிக்கு எந்தவிதமான பயனும் ஏற்படவில்லை என்பதை அனைத்து தரப்பு மக்களும் உணர்ந்துள்ளனர்.

எனவே, புதிய தமிழகம் கட்சி வெற்றி பெற்றால் மட்டுமே இந்த தொகுதியின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும் என அனைத்து தரப்பினரும் நம் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கிளை செயலாளர்கள், புதிய நிர்வாகிகள் உடனடியாக வாக்காளர் பட்டியலை வீடு வீடாக சென்று சரி பார்க்க வேண்டும் என்றார்.

கூட்டத்துக்கு மாவட்ட செயலர் அரவிந்தராஜா முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொறுப்பாளர் ஜெயகுமார் வரவேற்றார். கூட்டத்தில் மாநில இளைஞரணி செயலர் பாஸ்கர் மதுரம், கிழக்கு மாவட்ட செயலர் சுப்பிரமணியன், மாநகர மாவட்ட செயலர் செல்லப்பா, இன்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். தென்காசி ஒன்றிய செயலர் சந்திரன் நன்றி கூறினார்.





DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget