Thursday, January 30, 2014

புதிய தமிழகம் வெளிநடப்பு

சட்டப்பேரவை கூட்டத்தொடர்

ஆளுநர் உரையை புறக்கணித்து, திமுக, மமக, புதிய தமிழகம் வெளிநடப்பு
நடப்பு ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் வியாழக்கிழமை ஆளுநர் ரோசய்யா உரையுடன் தொடங்கியது. 

இதில் எதிர்க்கட்சித் தலைவரான தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தன. 





புதிய தமிழகம் கிருஷ்ணசாமி வெளிநடப்புக்குப்பின் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது. ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை. சட்டசபையில் அறிவிக்க வேண்டிய அறிவிப்புகளை தினம் தினம் அறிக்கையாக வெளியிடுவது போன்ற பல்வேறு ஜனநாயக விரோத போக்கை கண்டித்து கவர்னர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தேன்.


இவ்வாறு அவர் கூறினார்.




No comments:

Post a Comment

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget