இந்தியா விடுதலைபெற்று 58 ஆண்டுகள் ஆன பின்னரும் தமது உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலையிலேயே அவர்கள் இன்னமும் இருந்துவருகிறார்கள்.
நாகப்பட்டினம் அருகே கீழவெண்மணி என்னும் கிராமத்தில் 1960களில் கூலி உயர்வு கேட்டுப் போராடிய தலித் விவசாய தொழிலாளர்கள் கடும் அடக்கு முறையை சந்திக்க நேர்ந்தது. அவர்களின் குடிசைகளுக்கு தீவைக்கப்பட்டபோது தலித் பிஞ்சுகள் கருகி சாம்பலாகியிருந்தன.
இந்த சம்பவம் பற்றிய தகவல்களுடன் ஆரம்பிக்கிறது தலித்துகள் பற்றிய டி.என்.கோபாலன் வழங்கும் தொடரும் துயரம் என்னும் நிகழ்ச்சித் தொடரின் முதல் பாகம்.
தேவேந்திரகுல வேளாளர் நிலை:
தேவேந்திரகுல வேளாளர் என்று அழைக்கப்படும் பள்ளர் இனத்தவர் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அதிகம் வாழுகின்றனர். ஆதிதிராவிடர் என்றழைக்கப்படும் பறையர், அருந்ததியர் என்றழைக்கப்படும் சக்கிலியர்களைக் காட்டிலும் தேவேந்திரகுல வேளாளர்கள் பொருளாதார ரீதியில் சற்று முன்னேறியவர்களாகக் கருதப்படுகின்றனர்.
சில காலத்துக்கு முன் தென்மாவட்டங்களில் இடைநிலை சாதியினரான முக்குலத்தோர் என்றழைக்கப்படும் தேவர் இனத்தவருக்கும் தேவேந்திரகுல வேளாளருக்கும் இடையே மோதல்கள் ஆங்காங்கே நடந்த வண்ணம் இருந்தன.
சாதிக் கொடுமை பற்றி விழிப்புணர்வு அடைந்த தலித் மக்கள் அந்தத் தளையிலிருந்து வெளிவருவதற்காக முயற்சிகளை எடுத்தபோது - பொதுவள ஆதாரங்களில் தமக்கும் பங்கு உண்டு என்று ஆதிக்க சாதியினரிடம் உரிமைகோரியபோது இந்த மோதல்கள் எழுந்தன.
1995ல் திருநெல்வேலி மாவட்டம் கொடியங்குளத்தில் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தவருக்கு எதிராக பொலிசார் மோசமாக நடந்ததாக குற்றம்சாட்டப்படும் சம்பவம் பற்றியும், தென் மாவட்டங்களில் தற்சமயம் நிலைமை எப்படி மாறி வந்துள்ளது என்பது பற்றியும் இரண்டாம் பாகம் ஆராய்கிறது.
ஆதி திராவிடர் நிலை:
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் 1940களிலும், ஐம்பதுகளிலும், பலரும் போற்றும் கம்யூனிஸ்ட் தலைவர் சீனிவாசராவ் தலைமையில் நடந்த பல்வேறு போராட்டங்கள் விளைவாக ஆதிதிராவிடர் நிலையில் கணிசமான மாற்றம் ஏற்பட்டிதருப்பதாகக் கருதப்படும் அங்கேயும் ஓரே அவலம்.
பறையர் அல்லது ஆதிதிராவிடர் என்றழைக்கப்படும் தலித் பிரிவினர் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்கின்றனர். மாநிலத்தின் மக்கட்தொகையில் 19 சதம் தலித்துகள் என்றால் ஆதிதிராவிடர்கள் அதில் 70 சதம் இருப்பார்கள் எனக் கணக்கிடப்படுகிறது.
பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் குறிப்பிடத்தக்க அளவு கல்வியறிவு பெற்ற சமூகமாக அது கருதப்பட்டாலும், அவர்கள் பெரும்பாலும் நிலமற்ற கூலிகளாகவே இருக்கிறார்கள். அவர்கள் மீதான ஒடுக்குமுறையும் தொடர்வதாகவே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
1997ஆம் ஆண்டு மதுரை அருகே உள்ள மேலவளவில் ஆதிதிராவிடர் இனத்தைச்சேர்ந்த அதன் பஞ்சாயத்து தலைவர் உட்பட ஆறுபேர் படுகொலை செய்யப்பட்டனர். எட்டாண்டுகள் பின்னரும் அங்கே தலித்துகள் தாங்கள் வஞ்சிக்கப்படுவதாகவே கூறுகின்றனர். மேல்சாதியினரோ பிரச்சினை எதுவுமே இல்லை, எல்லாம் சுமுகமாகவே இருக்கிறது என்றனர். வடமாவட்டங்களிலும் தலித்துகள் மீதான ஒடுக்குமுறை தொடர்கிறது.
பெரம்பலூர் பகுதியில் பருககல் கிராமத்தில் நாம் ஒரு தேனீர்கடையில் இரண்டுவித குவளைகளைப் பார்த்தோம். ஏன் அப்படி எனக் கேட்டபோது கடை உரிமையாளர் பதிலளிக்கமறுத்துவிட்டார். அங்கே இருந்த சில வன்னியர்கள் பாகுபாடு எதுவும் இல்லை என்றனர்.
அண்டைமாவட்டமான கடலூரிலோ சிறுத்த தொண்டமாதேவி என்ற கிராமத்தில் பாதுகாப்பற்ற சில ஆதிதிராவிடவீட்டுப் பெண்களை மேல்சாதியினர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துவதாக செய்திகள் இரண்டாண்டுகளுக்கு முன் வந்தன. தலித் அமைப்பான விடுதலைச்சிறுத்தைகள் இயக்கத்தின் போராட்டத்திற்கு பின் அங்கே நிலைமை கட்டுக்குள் வந்தது.
வன்னியர்களின் பிரதிநிதியாக கருதப்படம் பாட்டாளி மக்கள் கட்சியும் விடுதலைச்சிறுத்தைகள் இயக்கமும் இணைந்து தமிழ்பாதுகாப்பு இயக்கம் இப்போது நடத்திவருவதால் வடமாவட்டங்களில் பதட்டம் சற்று தணிந்திருப்பதாக கருதப்படுகிறது.
அருந்ததியரின் அவலம்:
கிராமப்புறங்களில் ஒரு சென்ட் நிலம் கூட இல்லாது, ஜீவிப்பதற்கு முற்றிலுமாக நில உடைமையாளர்களை சார்ந்து நிற்கிறார்கள் அருந்ததியர். நகர்புறங்களில் செருப்பு தைக்கும் தொழிலாளிகளாகவும் , மற்றும் துப்புரவுப் பணியாளர்களாகவும் நாம் இவர்களை சந்திக்கலாம். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மொழியியல் துறையில் ஆராய்ச்சி செய்துவரும் மாணவர் குருசாமி பல்கலைக்கழக வளாகத்திலேயே பிரச்சினை இருப்பதாக கூறினார்.
கிராமப்புறங்களில் மற்ற தலித் பிரிவினராலேயே தாங்கள் ஒதுக்கப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும்கூட கம்பம் நகர அருந்ததியர் அமைப்பின் தலைவர் கிருஷ்ணன் புகார் கூறினார். ஆனால் தேவேந்திரகுலவேளாளர் தலைவர்களில் ஒருவரான Late. பசுபதி பாண்டியனோ அப்படிஒரு சிக்கல் இருப்பதாகவே தன் கவனத்திற்கு வரவில்லை என்கிறார்.
புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்னமும் ஒருபடிமேலே போய் தேவேந்திரகுலத்தவர்க்கும், அருந்ததியருக்கும் இடையே பிரச்சினை இருப்பது எனக்கூறுவதே மேல்சாதியினரின் சதி என்கிறார். தேனிமாவட்டத்தில் ஒரு தலித் ஆர்வலர் அருந்ததியர் பின் தங்கியிருப்பதற்காகன காரணம் அவர்களே என்றார்.
துப்புரவுப்பணியாளர்களாகப் பணியாற்றும் ஆதி ஆந்திரர்கள் என்பவர்களும் அருந்ததியர்களாகத்தான் கருதப்படுகிறார்கள். இவர்கள் நிலை இன்னமும் பரிதாபத்திற்குரியதாகத்தான் இருக்கிறது.
சென்னையைச்சேர்ந்த தொழிற்சங்கத்தலைவர் புருஷோத்தமன் மலம் அள்ளும் பழக்கம் முற்றிலுமாக மறைந்துவிடவில்லை என்கிறார்.
மதமாற்றம் பலன் தருமா?
தமிழகத்தில் வாழும் தேவேந்திரகுலவேளாளர், ஆதிதிராவிடர், அருந்ததியர் போன்ற தாழ்த்தப்பட்ட பிரிவினரின் அவலநிலை குறித்து இப்பெட்டக நிகழ்ச்சியின் கடந்த பகுதிகளில் பார்த்தோம். தலித்துகள் என்றழைக்கப்படும் இச்சமூகம் காலாகாலமாக பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கிறது. திராவிட இயக்க எழுச்சியின் விளைவாக பிராமண ஆதிககம் கணிசமான அளவு தகர்க்கப்பட்டும்கூட, தலித்மக்களுக்கு சமூக அந்தஸ்து இன்றளவும் மறுக்கப்படுகிறது.
இந்து மத வரையறைகளுக்குள் சிக்கியிருப்பதால்தான் தங்களுககு இப்படிப்பட்ட அவமானங்கள், எனவே மதம் மாறுவதே தங்கள் பிரச்சினைக்கு சரியான தீர்வு என பல தலித் சிந்தனையாளர் கூறிவந்திருக்கின்றனர்.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பலர் கிறித்துவர்களாக மாறியிருக்கின்றனர்.
பின்னர் கிறித்தவத்தில் நீதிகிடைக்காத தலித் மக்கள் இஸ்லாத்தை நாடத்துவங்கினர். இப்படியான மதமாற்றங்கள் தலித்துகளின் இந்தப் பிரச்சினைக்கு தீர்வாக அமைந்ததா, அமையுமா என்பதை இந்தப் பகுதியில் ஆராய்கிறார் எமது டி.என். கோபாலன்.
பொருளாதாரம்:
சாதி இறுக்கங்களுக்கு அப்பால் தலித் மக்களின் பிந்தங்கிய நிலைக்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்களது வறுமையும் எழுத்தறிவின்மையுந்தான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இம்மக்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ்தான் வாழ்கிறார்கள். இவர்களது உடமைகளும் மிகவும் குறைவானவையே.
இந்த நிலைகுறித்தும், இவற்றை சமூகம் எவ்வாறு கையாழுகிறது என்பது குறித்து இந்தப் பகுதியில் ஆராய்கிறார் டி.என்.கோபாலன்.
அரசியல் அதிகாரத்தை நோக்கி:
தலித்துகளின் நிலை குறித்து ஆராயும் இந்தப்பெட்டகத்தின் ஏழாவது பகுதியில், தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தை அடைவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆராயப்படுகிறது. முக்கிய அரசியல் கட்சிகளில் தலித் இனத்தைச்சேர்ந்த தலைவர்களுக்கு முக்கிய இடம் தரப்படுவதில்லை அவர்கள் வெறும் காட்சிப்பொருளாகத்தான் வைக்கப்படுகிறார்கள் என்று கருதப்படுகிறது.
தலித்துகள் அதிகார மையங்களை வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.
தமிழ்த் தேசியம் குறித்த அணுகுமுறையில் தலித் அமைப்புகளுக்குள்ளேயே மாறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தலித்துகள் அரசியல் உரிமைகள் பெற வேண்டுமானால், தமிழ், திராவிடம் போன்ற முழக்கங்களைக் கைவிட வேண்டும் என்கிறார். ஆனால் , விடுதலைச் சிறுத்தைகளோ, இந்த விஷயத்தில் தமிழ் தேசியம் என்பது பிரிவினைவாதமல்ல தலித்துகளை உள்ளடக்கிய தமிழர்கள் தங்களது உரிமைகளைப் பெறுவதே என்று கூறுகிறார்கள்.
தலித் கட்சிகள் தலித்துகளை அணி திரட்டுவது என்பது அரசியல் ரீதியானதாக இல்லாமல் தனிநபர்களைச் சுற்றியதாகவே அமைந்திருக்கிறது என்பது யதார்த்தமான உண்மை என்கிறார் அரசியல் ஆய்வாளர் அ.மார்க்ஸ்.
http://www.bbc.co.uk/tamil/highlights/story/2006/03/060314_dalit.shtml
|
Showing posts with label தேவேந்திரகுல வேளாளர். Show all posts
Showing posts with label தேவேந்திரகுல வேளாளர். Show all posts
Saturday, April 25, 2015
தமிழகத்தில் தேவேந்திரகுலவேளாளர்களின் நிலை
Thursday, October 30, 2014
Notable Persons in Devendra Kula Vellalars (DKV)
Notable Persons of Devendra Kula Vellalars (DKV)
The Mallar were called Pallar only after the 15th century by more powerful tribes from other parts of South India with a view to degrading their social status. The name Pallar is mentioned only in pallu poems and later poems. The Pallar are the focus of a genre of Tamil poetry known as pallu.
Mallar / Pallar is a caste from the Indian state of Tamil Nadu. They are mostly agriculturalists in Tamil Nadu, Sri Lanka and amongst the Tamil diaspora. In Sri Lanka, Pallars / Mallars are currently found in Jaffna and eastern Batticalo region and were primarily agricultural workers. In Sri Lanka, Pallar have formed an important component in rebel groups after the civil war. Today amongst the Tamil diaspora across the world, Pallars / Mallars are found as part of the greater Tamil community.
The Mallar are an ancient community, engaged extensively in wet land farming and distributed mainly in Thanjavur, Madurai and Ramanathapuram districts. The Pallan rank themselves highest among the scheduled castes, and number around 2.2 million (Census of India 2001).
Kudumban SC List (SC 35)
Moopan BC List (BC 65)
Kaaladi BC List (BC 35)
Kaaladi DNC List (DNC 28)
Mannadi MBC List (MBC 16)
Vathiriyar SC List (SC 72)
Devendrakulathan SC List (17)
The Mallar are an ancient community, engaged extensively in wet land farming and distributed mainly in Thanjavur, Madurai and Ramanathapuram districts. The Pallan rank themselves highest among the scheduled castes, and number around 2.2 million (Census of India 2001).
Kudumban SC List (SC 35)
Moopan BC List (BC 65)
Kaaladi BC List (BC 35)
Kaaladi DNC List (DNC 28)
Mannadi MBC List (MBC 16)
Vathiriyar SC List (SC 72)
Devendrakulathan SC List (17)
Languages: Tamil (Mother Tongue)
Religion: Hinduism, Christianity, Islam
Regions with significant populations: Tamil Nadu, Sri Lanka, Kerala, Maharastra, Andhra Pradesh, Karnataka, Pondicherry, Malayasia, Singapore, Canada, USA, ............
Social Reformers:
- Poraali Immanuel Sekaran Devendrar.
- Krishnammal Jagannathan / கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் (Social activist) http://en.wikipedia.org/wiki/Krishnammal_Jagannathan
- Sankaralingam Jagannathan (Social activist).
- Major Kathir Mahadevan (Former Tanjai University Vice Chancellor).
- Durai Kaliya Rathinam (Retd. Judge).
- P. Chandra Bose (Founder and Convenor General Secretary of Thiyagi Immanuvel Peravai).
- S. Raju (General Secretary, Thiyagi Immanuel Peravai, Paramakudi).
- Subha Annamalai (Mallar Ilakkiya Kazhagam, Mallar Nadu).
- M. Thangarasu (Devendrar Thannarva Arakkattalai).
- Durai Kailai Rajan (Devendrar Mahajana Sangam).
- M. Oorkkavalan (Devendrar Mahajana Sangam).
- K C Selvakumar (President, Madurai Mavatta Devendra kula Vellalar Uravinmurai Sangam).
- Prabha Kalvimani (Human Rights Activist and Co-ordinator, Tribes Irular Pathukappu Sangam).
- S. Kannaiyan (South Indian Coordination Committee of Farmers Movements).
- Senthil Mallar (Author of Meendezhum Pandiyar Varalaru).
- S. Varman Mallar (President, All India Mallar Sangamam).
- Dr. Ganapathi Kudumbanar (General Secretary, Tamilnadu Devendrar Ilaignar Peravai).
Freedom Fighters:
- Sundaralinga Kudumbanar known as Veeran Sundaralingam, General who fought against the East India Company
- Vennikaladi Kudumbar
Performers:
- Chiyaan Vikram, Actor.
- Cheran, Film director, Actor and Producer.
- Suseenthiran, Film director and Screenwriter.
- Saravanan M, Film director (Engaeyum Eppothum fame).
- Prasanth, Actor.
- Imman D, Music Director.
- Ponnambalam, Actor
Scholars:
- Mozhignayiru Devaneya Pavanar.
- Deva Asirvatham.
- Gurusamy Siththar (Devendrar Kalai Panbattukkazhgam).
- Daniel Selvaraj - Tamil writer, lawyer, Communist - Won Tamil Nadu Government's literary award for the best Novel in 2011, Won Sahitya Akademi award for Tamil in 2012 for Novel "Thol"
- Poomani - Tamil writer, Film Director - Tamil Nadu State Film Award Special Prize in 1996 for the film Karuvelam Pookkal, Gitanjali Literary Prize in 2012 for Novel Agngnaadi, Kalaignar Porkizhi Award & Sahitya Akademi Award in 2014 for Novel Agngnaadi
Judges / Judicial Officers:
- Late. Ashok Kumar M.Sc., B.L - Judge of the Madras High Court and the Andhra Pradesh High Court.
- Marimuthu S, B.A, B.L - Former Judge High Court of Kerala.
- Maruthamuthu M, B.A, B.L - Retired High Court Judge.
- Thangamani M.A, B.L - Joint Secretary ,Government of Tamil Nadu (Retd), High Court Advocate,Chennai
Collectors / IAS Officers:
- Christdas Gandhi IAS.
- V Kanagaraj IAS.
- Karthik IAS.
- P A Ramiah IAS.
- C.Umashankar IAS.
Administrator:
- K Muthukaruppan IPS officer.
- Rajendran (Late) - DGP.
- Malini I.R.S - Ex Commissioner of Income Tax, Government of India.
- Lakshmi Thangamani M.A - Ex Joint Director of School Education, Government of Tamil Nadu.
- Raman - Addl Director General Of Audit & Accounts,Government Of India (Retd).
Politicians:
- Late C. Pasupathy Pandian - Leader of Tamil Nadu Devendra Kula Velalar Kootamaippu.
- John Pandiyan - Leader of Tamizhaga Munnetra Kazhagam.
- K. Krishnasamy - Leader of Puthiya Tamilagam, MLA (Ottapidaram State Assembly Constituency).
- Gomathy Srinivasan - Ex Minister, AIADMK.
- Padma Vibhushan V. Arunachalam - Ex MLA, Ex MP.
- Paramalai - Ex MLA, Congress(I).
- S Murugesan - Lawyer, Ex MP, AIADMK.
- A.K.S Vijayan - Ex MP, DMK.
- Late C. Karuppasamy - MLA, AIADMK (Sankarankoil Constituency) - State Minister.
- Late A. S. Ponnammal, Congress Party
- A. Ramasamy - Ex MLA, Puthiya Tamilagam , Nilakkottai Constituency.
- S. Duraiappa - MLA, AIADMK, Vasudevanallur Constituency.
- S. Sundararaj - Ex MLA, AIADMK, Paramakudi Constituency - Hon. Minister for Handlooms and Textiles.
- M. Gunasekaran - Ex MLA, AIADMK, Manamadurai Constituency.
- S. Kamaraj - Ex MLA, AIADMK, Krishnarayapuram Constituency.
- T. Indira Gandhi - Ex MLA, AIADMK, Thuraiyur Constituency.
- K. Ponnusamy - Ex MLA, AIADMK, Dharapuram Constituency.
- Alaguvelu - MLA, AIADMK, Kallakurichi Constituency.
- S. Muthuselvi - Ex MLA, AIADMK, KSankarankoil Constituency.
- Xavier - Ex MP, Thoothukudi Constituency.
- V. Ponnupandi - Ex MLA, Communist Party of India (CPI), Srivilliputhur Constituency.
- K. Ulaganathan - Ex MLA, Communist Party of India (CPI), Thiruthuraipoondi Constituency.
- P. L. Sundaram - Ex MLA, Communist Party of India (CPI), Bhavanisagar Constituency.
- Somasundaram - Ex MLA, Palayamkottai Constituency.
- O.P. Raman (OPR), Ex. Minister of Electricity, DMK, Melur (South) Constituency - Madras State Legislative Assembly Election 1967.
- M. Vasanthi - MP, AIADMK, Tenkasi Loksabha Constituency.
- Mottaya Kudumban, Indian politician and former Member of the Legislative Assembly of Tamil Nadu. He was elected to the Tamil Nadu legislative assembly as a Forward Bloc (Marxist Group) candidate from Mudukulathur constituency in 1952 election. He was one of the two winners from the same constituency in that election, the other being U. Muthuramalinga Thevar.
- Tmt. Rajalakshmi. V. M - Minister for Adi Dravidar and Tribal Welfare, AIADMK, Sankarankovil Constituency, Tirunelveli District
- Thiru. Manoharan. A - AIADMK, Vasudevanallur Constituency, Tirunelveli District
- Thiru. Sundararaj. R - AIADMK, Ottapidaram Constituency, Thoothukudi District
- Tmt. Chandra Prabha. M - AIADMK, Srivilliputhur Constituency,Virudhunagar District
- Dr. Muthiah. S - AIADMK, Paramakudi Constituency, Ramanathapuram District
- Thiru. Mariappan Kennady. S - AIADMK, Manamadurai Constituency, Sivaganga District
- Thiru. Manickam. K - AIADMK, Sholavandan Constituency, Madurai District
- Thiru. Thangathurai. R - AIADMK, Nilakkottai Constituency, Dindigul District
- Tmt. Kasthuri Vasu. V - AIADMK, Valparai Constituency, Coimbatore District
- Thiru. Arumugam. B - AIADMK, Gandarvakottai Constituency, Pudukkottai District
- Thiru. Stalinkumar. S - DMK, Thuraiyur Constituency, Tiruchirappalli District
- Thiru. Adalarasan. P - DMK, Thiruthuraipoondi Constituency, Tiruvarur District
- Thiru. Ravichandran. K.S - DMK, Egmore Constituency, Chennai District
- Thiru. Kalimuthu. V .S - Congress, Dharapuram Constituency, Tirupur District
Physicians:
- K.Arumugam M.D
- M.Govindasamy M.D
- Shanmugasundarraj M.D
- N.Pitchiah M.D
- S.Purushothaman M.S, M.Ch
- S.V.Jothiramalingam MBBS, M.Ch
- D.Kailairajan MBBS, M.Ch
- Ramadoss M.S, M.S(ortho), D.Ortho
- Manoharan M.S, M.S(ortho), D.ortho
- Shanmuganathan M.S,M.S(ortho) D.ortho
- Lakshmanan M.S (ENT), D.L.O
- Karuppasamy M.S (ENT),D.L.O
- S.Radhakrishnan M.S (ENT), D.L.O
- Paulraj M.S (ENT), D.L.O
- T.Veerabadhiran M.S
- Lakshmanaperumal M.S
- S.Manoharan M.S, M.Ch
- S.Vadivel M.S
- R.Paramasivam M.D
- Subbiah M.D
- Subramaniam M.D
- Saraswathi M.D
- Rajan M.D, F.R.C.P, D.Sc
- Revathy Kailarajan M.D, D.G.O
- S.B.Vasumathi M.D.D.G.O
- Jothiramalingam MBBS, M.Ch (Neuro)
And many more...........
Saturday, February 16, 2013
தேவேந்திரகுல வேளாளர் அரசாணை பிறப்பிக்க வலியுறுத்தி புதியதமிழகம் கட்சி மும்முனைப் போரட்டம்
தொல்காப்பியருடைய காலத்தில் மருத நில மக்களாகஅடையாளப்படுத்தப்பட்ட வேளாண்குடிமக்கள்இன்றைய தேவேந்திர குல வேளாளர்கள் ஆவர்.காலப்போக்கில் அத்தொன்மை வாய்ந்த தமிழ்குடிமக்கள் பள்ளர், குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையர்என மருவி அழைக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறுபெயர்களில் அழைக்கப்படக்கூடிய வேளாண்குடிமக்களை ”தேவேந்திர குல வேளாளர்” என ஒரே பெயரில்அழைத்திட அரசாணை பிறப்பிக்க உரிய சட்ட பூர்வநடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்
அரசு மற்றும் பொது நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டைபெறும் பொருட்டு சமூகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பில் புறக்கணிக்கப்பட்ட மக்களை அகில இந்திய அளவில் ஒருங்கிணைத்து “அட்டவணை சமுதாய மக்கள்” என அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வகைப்படுத்தினார்.தமிழகத்தில் அட்டவணைப்படுத்தப்பட்ட பிரிவில் 76 சாதிகள் உள்ளடங்குவர். இதில்பள்ளர் என்ற “தேவேந்திர குல வேளாளர்” சக்கிலியர் என்ற ”அருந்ததியர்” பறையர் என்ற”ஆதிதிராவிடர்” ஆகிய மூன்று பிரிவினர் பெரும்பான்மையினர் ஆவர்.
அகில இந்திய அளவிலும் மற்றும் பிற மாநிலங்களிலும் இதே போன்றுஅட்டவணைக்குள் அடங்கிய பல்வேறு இன மக்களை தனித்தனியாக அந்தசாதியினுடைய பெயராலும், இட ஒதுக்கீட்டை பெறும் பொருட்டு அரசால் வழங்கப்படும்சான்றிதழ்களில் எஸ்.சி அல்லது அட்டவணை சாதி என்று அழைக்கப்படுகின்றனர்.தமிழகத்தில் 1980 ஆம் ஆண்டு சில மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தவறானநடவடிக்கையால் அட்டவணை சாதிக்கு உட்பட்ட 76 சாதிகளையும் ”ஆதிதிராவிடர்கள்”என்று அப்பட்டியலில் உள்ளடங்கிய ஒரு சாதியின் பெயரால் அழைக்கப்படும் எனஅரசாணை பிறப்பிக்கப்பட்டு அதைத் தொடர்ந்து இன்று வரையிலும் நீடித்து வருகிறது.
இந்த தவறான நடவடிக்கையின் காரணமாக “பட்டியலின” மக்களிடையே தேவையற்றமுரண்பாடுகளும், ஒற்றுமையின்மையும் நிலவி வருகிறது.எனவே பட்டியலினமக்களின் நலன்களுக்கான அரசுத்துறைக்கு ”ஆதிதிராவிடர் நலத்துறை” என இதுவரைதமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகள் அனைத்தையும் ரத்து செய்து “பட்டியலினமக்கள்” என பொதுவாக அழைத்திட வலியுறுத்தியும்
அட்டவணை மக்களுக்கான இட ஒதுக்கீட்டில் எந்த ஒரு மாற்றம் செய்வதற்கு மாநிலஅரசிற்கு தனியாக உரிமை இல்லை. கடந்த காலங்களில் ஆந்திரா மற்றும் பஞ்சாப்மாநிலங்களில் அந்த அரசு கொண்டு வந்த உள் இட ஒதுக்கீடு சட்டங்கள் நீதிமன்றத்தால்ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 2008 ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசுதமிழகத்தில் பட்டியலின மக்களுக்கான 18 சதவிகித இட ஒதுக்கீட்டை அருந்ததியர் உள்இட ஒதுக்கீடு என்ற பெயரில் சிதைத்து, மேலும் இந்தியா முழுமைக்கும் கல்வி மற்றும்வேலை வாய்ப்புகளில் பொது பிரிவினருக்கு அடுத்தபடியாக முன்னுரிமை பெற்றிருந்தஅனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கான முதல் வாய்ப்பை தமிழகத்தில் மட்டும்பட்டியலின மக்களில் 3 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக்கூடிய சக்கிலியர் அல்லதுஅருந்ததியர் என்று அழைக்கப்படக்கூடிய ஒரு பிரிவினருக்கு மட்டுமே கிடைக்ககூடியவகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன் விளைவாக கடந்த மூன்று வருடங்களாக பல்கழைக்கழகங்கள் மற்றும்கல்லூரிகளில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் அரசு உதவிபெறக்கூடிய பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உருவான அனைத்து ஆசிரியர்பணியிடங்கள் மற்றும் அரசினுடைய 110 துறைகளில் உயர் பதவிகள் அனைத்தும்அருந்ததியர் என்ற ஒரே சாதிக்கு மட்டுமே தாரை வார்க்கப்பட்டது.
இதன் காரணமாக பள்ளர் எனும் “தேவேந்திரகுல வேளாளர்கள்”, பறையர் என்றுஅழைக்கப்படக்கூடிய ”ஆதிதிராவிடர்கள்” உட்பட பிற 70 சாதி மக்களின் படித்தபிள்ளைகள் எண்ணற்ற வேலை வாய்ப்புக்களை இழந்துள்ளனர். முந்தைய தி.மு.க. அரசுகொண்டு வந்த பல திட்டங்களை ரத்து செய்துள்ள இந்த அரசு தி.மு.க. அரசுகொண்டுவந்த உள் இட ஒதுக்கீடு சட்டத்தை மட்டும் ரத்து செய்ய தயக்கம் காட்டுகிறது.
இந்த அரசு உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த தேவேந்திர குல வேளாளர்மற்றும் ஆதிதிராவிடர்களு இது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது. எனவே பட்டியலினமக்களின் பெரும்பான்மை பிரிவினரின் உரிமையைப் பறிக்கும் உள் இட ஒதுக்கீட்டைஉடனடியாக ரத்து செய்யயும் வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக பிப்ரவரி 6ஆம் தேதி முதல் மும்முனைப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்று டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்கள் கூறினார்.
Thursday, June 21, 2012
Let us try again
In 1998, our Devendra Kula Vellalar rejected from getting
into Backward class (BC). Now let's try in a very organized manner to make us
include in either Backward Class (BC) or Most Backward Class (MBC). Let us come
out of this SC / Dalit tag and fight this world our strength, Knowledge, Manners,
Ideology, Trustworthiness, Honest, Humbleness, Intelligence, Gratefulness, Generous,
Friendliness, etc. and most importantly Tolerance
and Self control.
Details of 1998 rejection:
Sunday, June 17, 2012
Monday, May 21, 2012
பா.ஜ மாநாட்டில் தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க தீர்மானங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல்
தேசிய பயங்கரவாத தடுப்பு மையமானது கூட்டாட்சித் தத்துவத்துக்கு
எதிரானது என மதுரை பாஜக தாமரைச் சங்கமம் 5-வது மாநில மாநாட்டில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
மதுரையில் வியாழக்கிழமை தொடங்கிய பாஜக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள் விவரம்:
*இலங்கைப் பிரச்னையில் தமிழக அரசியல் கட்சிகள் சேர்ந்து குரல் கொடுப்பது
அவசியம். ஆனால், இலங்கை சென்ற குழுவில் அதிமுக, திமுக இடம் பெறாதது
துரதிருஷ்டவசமாகும்.
*இலங்கைத் தமிழர் வாழ்வு குறித்து கவலைப்படாத மத்திய காங்கிரஸ் திமுக
கூட்டணி அரசை மாநாடு கண்டிக்கிறது. இனிமேலாவது இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு
நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது.
*மதக்கலவரத் தடுப்பு மசோதா எனும் பெயரில் மாநில அரசின் சட்டம், ஒழுங்கு
பாதுகாக்கும் உரிமையைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. காவல்
துறைக்கு அதிகாரம் வழங்குதல், உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை மாநில அரசுகளின்
அதிகாரத்தை தட்டிப்பறிக்கும் வகையில் உள்ளன.
*மத்திய அரசின் இத்தகைய போக்கிற்கு மாநில சுயாட்சி பற்றிப் பேசிவரும் திமுக
போன்ற கட்சிகள் ஆதரவு அளிப்பது சரியல்ல. ஆகவே கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான
நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.
*சேதுசமுத்திரத் திட்டத்தில் பெரும்பாலான மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும்
வகையில் ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக, பாரம்பரியச் சின்னமாக மத்திய அரசு
அறிவிக்க வேண்டும்.
*மழை நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் தேசிய நதிகள் இணைப்புத்
திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு மின்சாரப் பற்றாக்குறைய
முற்றிலும் நீக்கி மூடியுள்ள தொழிற்சாலைகள் இயங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க
வேண்டும்.
*இந்து ஆலயங்களில் வசூலிக்காத குத்தகை பாக்கியை வசூலிக்கவும், ஆலயச்
சொத்துகளின் வாடகை, வருவாய் ஆகியவற்றை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும். பசுவதை தடைச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
*தென்தமிழகத்தில் தொழில் வளர்ச்சியடைய குளச்சல் துறைமுகம் உருவாக்கம், மதுரை
விமான நிலையத்தில் சர்வதேச விமானம் வந்து செல்ல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை
செயல்படுத்த வேண்டும்.
*விருதுநகர்-அருப்புக்கோட்டை உள்ளிட்ட நகர்களின் அகல ரயில் பாதை திட்டத்தை
உடனடியாக செயல்படுத்திட வேண்டும்.
*குடும்பன் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் தேவேந்திரகுல வேளாளர்
பிரிவினரை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
*தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க சிறப்புப் பயிற்சித்
திட்டத்தை செயல்படுத்த அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். வறுமையில் வாடும் மாணவ,
மாணவியருக்கு சாதி பாகுபாடின்றி மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை ஏழை இந்துக்
குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Aiming to project itself as an alternative to the two Dravidian
parties in Tamil Nadu, BJP state unit on Friday said it had started
preparations for the next Parliamentary polls, scheduled in 2014.
Talking to reporters on the concluding day of BJP's two-day state
conference "Tamarai Sangamam" here, party state president Pon
Radhakrishnan alleged that both DMK and AIADMK were "involved" in
corruption and have been "punished" during every elections by the
voters.
"Preparations are on for the next elections and setting up
of relevant committes, initiating the membership drive and others could
be taken up soon and we aim to reach every village of the state",
Radhakrishnan said.
He declined to reply to queries on the
possible alliances of the party ahead of the polls saying it would be
discussed at an appropriate time.
Radhakrishnan said BJP was a party which performed beyoned the differences of caste, creed and religion.
To a query, he said the party will not contest the Pudukottai assembly bypoll. On the Sri Lankan issue, he said BJP supported devolution of power to Tamils. Radhakrishnan
charged the Centre with attempting to takeover the state's right in
maintaining the law and order under the pretext of "Communal Disturbance
Prevention Bill".
He said it was not proper for DMK, a proponent of state autonomy, to support such a bill. He also wanted to declare Sethu Samudhram as a traditional and national symbol and a heritage site. Rdhakrishnan
said the rivers in the country should be linked to prevent wastage of
rain waters. The government should take steps on a war footing to
overcome the power shortage and reopen the closed mills.
He said
slaughtering of cows should be banned in the state.
The sub castes of
Devendra Kula Velalar community, including Kudumban, should be
integrated and they should be named as Devendrakula Velalar.
Special
skill training programmes should be conducted to enable youths in
tamilnadu get employment. The government scholarship should be given for
all poor students and educational assistance should be extended to all
poor Hindu students also, he said.
http://www.dnaindia.com/india/report_preparations-on-to-project-itself-as-alternative-in-tn-bjp_1687460
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=12392
சாதிவாரி கணக்கெடுப்பின்போது எந்தெந்த பிரிவுகளில் பதிவு செய்ய வேண்டும்?
தேவேந்திர குலம்:
மள்ளர் நாடு சமூக நல நிறுவன தலைவர் சுப. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் தேவேந்திரர்கள் தங்களின் உட்பிரிவுகளான காலாடி, குடும்பன், மூப்பன், பண்ணாடி, வாய்காரர், கடையர், வாதியார் என்பதற்கு பதிலாக ஒரே இனமாக தேவேந்திர குலத்தான் என்று பதிவு செய்ய வேண்டும்.
விருதுநகர் மாவட்டங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பில் தேவேந்திர குலத்தான் என அதிகாரிகள் பதிவு செய்ய மறுப்பதை எதிர்த்து கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும், எனவே தேவேந்திர குலத்தான் என்று பதிவு செய்ய வேண்டுமே தவிர ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்டோர் எஸ்.சி. என பதிவு செய்யக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
மள்ளர் நாடு சமூக நல நிறுவன தலைவர் சுப. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் தேவேந்திரர்கள் தங்களின் உட்பிரிவுகளான காலாடி, குடும்பன், மூப்பன், பண்ணாடி, வாய்காரர், கடையர், வாதியார் என்பதற்கு பதிலாக ஒரே இனமாக தேவேந்திர குலத்தான் என்று பதிவு செய்ய வேண்டும்.
விருதுநகர் மாவட்டங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பில் தேவேந்திர குலத்தான் என அதிகாரிகள் பதிவு செய்ய மறுப்பதை எதிர்த்து கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும், எனவே தேவேந்திர குலத்தான் என்று பதிவு செய்ய வேண்டுமே தவிர ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்டோர் எஸ்.சி. என பதிவு செய்யக் கூடாது என்றும் கூறியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)
DKV
DKV
DKV



















