Friday, April 26, 2013

Indian coal allocation scam




The coal scam is not just an ordinary corruption story. It is a blueprint of many things that are going to haunt India in the years ahead: incompetence, myopia and a colossal abdication of responsibility.






The Opposition is right to demand that Prime Minister Manmohan Singh furnish some answers to the country. This is not a demand he can evade. Apart from being the head of the council of ministers, during the UPA’s first tenure, Prime Minister Singh was himself the coal minister for about three-and-a-half years. His coal secretary PC Parakh raised strong flags about the arbitrary and nepotistic ways in which captive coal fields were being handed out. Though Singh accepted this and suggested moving to auctioning coal fields in 2004 itself, it took six years for him to operationalise this decision. The rules of play are yet to be set.




It is true there was opposition to the policy change from the states — ironically even from the BJP and CPM who are now his most bitter critics. It is also true that every party and state government was a part of the screening committee that handed out largesse at whim. In that sense, every party is a part of this scam. But the prime minister cannot escape the fact that it was his government in power. Decision-making was his prerogative. And coal is a Union subject over which the Centre has complete authority.



But, citing coalition pressures, Singh repeatedly failed to act. Clearly, the silence of a lamb can sometimes be more harmful than the ill-intent of a wolf. But there is already enough heat in the public domain over this. What is perhaps far more alarming lies one layer beneath. 




The coal scam is not just evidence of dithering leadership, loss to the exchequer, or the, as yet unproved, speculation about myriad kickbacks and political favours. It is about a missing epicenter in governance.


The logic for allocating coal blocks in a panicked rush to private players was that thermal power plants and steel and cement companies were desperate for coal: the country’s growth and energy security was at stake. Yet, after the blocks were allocated, no one monitored whether these companies had begun to mine, or were competent to mine at all. 




They were allowed to squat on the resource, presumably to sell at a premium at a later date. They had also been given cheap coal blocks so they would pass the benefit on to consumers, but whether they were doing so was not monitored.




That’s not all. Public sector giant Coal India has 1.5 lakh hectares of coal-bearing areas at its disposal but is utilising only 25 percent of this coal. Also, existing power plants are functioning at about 40 percent efficiency. The global norm is 80 percent. Additionally, almost 40 percent of the already minimally-efficient power being generated is lost in transmission. Like food, electricity is rotting unused in many locations because of bad distribution. Yet none of these facts seemed to even feature, let alone impact, decision-making in a holistic way.




In January 2011 — perhaps aware of the growing mess around him — Prime Minister Singh set up a high-level committee under former finance secretary Ashok Chawla to suggest ways to overhaul the legal, institutional and regulatory framework around the use of all natural resources: minerals, land, water, forests, gas and spectrum. Such was the urgency, the committee was asked to file its report in four weeks. It submitted its report in June 2011. Two years later, nothing has moved.



At this very moment, therefore — even as report after report lies mute and helpless — the same crushing mess around coal is also playing itself out on all the other vital areas of our national lives: our rivers, our groundwater, our forests, our coastlines, our sandbanks, minerals, mountains and land. All of it is being indiscriminately squandered because there is just no cohesive planning and bird’s eye view informing decisions being made on the use of natural resources. There is no joining of dots, no comprehensive gameplan. No sense of a national future weighted against the present.



Be certain then. It’s coal today: it’s going to be water tomorrow. By the time we understand the disappearance of forests and coastlines and sandbanks is worthy of being called scams, it will be too late.
In the 10 years that he has ruled the most populous democracy in the world — without being an elected leader himself — Prime Minister Singh has been criticised for being an inadequate politician. By a strange trick of fate, are we now to discover he’s been an astute politician all along, but just a very poor administrator?






Wednesday, April 17, 2013

லாக்கப் கொலை / தற்கொலை



கருப்பியைக் கொன்ற போலிஸ் - சிரமப்பட்டு வந்த நீதி!


நான்கு போலீஸார் கருப்பியை மிருகத்தனமாக சித்திரவதை செய்துள்ளனர். லத்தியால் அடித்தும், விரல் நகங்களில் ஊசியால் துளைத்தும் துன்புறுத்தியுள்ளனர். பரிந்து பேச முயற்சித்த கிறிஸ்து தாஸையும் புடைத்து எடுத்துள்ளனர்.

கொட்டடிக் கொலைகள் சாதாரணமாக நடக்கும் தமிழகத்தில், 10 வருடங்களுக்கு முன் பாசிச ஜெயாவின் ஆட்சியில், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு பெண், போலீஸாரால் லாக்கப்பில் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி வன்கொடுமைகளை கட்டவிழ்க்கும் அரசு மற்றும் ஆதிக்க சாதியினர் சார்பில் ஏவல் செய்வது போலீஸ் துறையின் இன்றியமையாத கடமைகளில் ஒன்று. தங்களிடம் சிக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி ரீதியான அடக்கு முறையையும், தாக்குதலையும், போலீஸ்காரர்கள் செலுத்தாமல் விடுவதில்லை என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.

‘தி இந்து’ நாளேட்டில் வெளியான முன்னாள் தமிழ்நாடு மாநில பெண்கள் கமிஷனின் தலைவர் டாக்டர். வசந்தி தேவியின் கட்டுரையை தழுவி இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.


48 வயது நிரம்பிய கருப்பி பரமக்குடியை சேர்ந்தவர். அருந்ததியர் சமூகப் பெண்ணான அவர் வீட்டு வேலைகள் செய்து பிழைத்து வந்தார். 2002 ஆம் ஆண்டு, பணியிடத்தில் தங்கச் சங்கிலியை திருடியதாக வீட்டு உரிமையாளர்களால் பழி சுமத்தப்பட்டு, போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.

காவல் நிலையத்தில் கருப்பி ஆறு நாட்கள் போலீஸாரால் சித்திரவதைக்கு ஆளானார். இறுதியில் அவரது உயிரற்ற சடலம், டிசம்பர் 1 2002 அன்று காவல் நிலையத்தின் பிற்பகுதியில் உள்ள மின் கம்பத்தில் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தது. நடந்தது தற்கொலை என்று போலீஸ் வழக்கு பதிவு செய்தது.

காவலில் இருக்கும் ஒருவர் தப்பித்து சென்று தற்கொலை செய்துகொண்டதாக போலீஸ் சொல்லும் கதை நடைமுறையில் சாத்தியமற்றது என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின. சம்பந்தப்பட்ட சாட்சிகளை போலீஸார் அச்சுறுத்துவதாக தெரிவித்து, இவ்வழக்கில் தலையிடுமாறு தமிழ்நாடு மாநில பெண்கள் கமிஷனுக்கு பரிந்துரை செய்தன.

அப்போது கமிஷனில் தலைமை பதவியில் இருந்த வசந்தி தேவி இவ்வழக்கை விசாரித்தார். முதலில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் தொடர்பு கொண்டு, கருப்பியின் குடும்பத்தாரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டார்.

சம்பவம் நடந்த காவல் நிலையத்தை பார்வையிட்டவருக்கு, கருப்பியால் தப்பித்துச் சென்று தற்கொலை செய்துக்கொண்டு இருக்க முடியாது என்பது தெளிவாகியது. கருப்பியின் குடும்பத்தாரிடம் நடந்த விசாரணையில் அவர்கள் எல்லாரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதும் விளங்கியது.

அவர்களது வாக்குமூலங்கள், ‘கருப்பி திருடியதால் ஏற்பட்ட அவமானம் காரணமாகத்தான் தற்கொலை செய்து கொண்டாள்’ என்ற போலீஸின் கதையை உறுதிப்படுத்தும் விதமாகவே இருந்தன. இக்கொலைக்கு போலீஸ் எந்த விதத்திலும் பொறுப்பில்லை என்று அவர்கள் உறுதியாக பதிவு செய்துள்ளனர்.

பயத்தால் தான் இவ்வாறு பேசுகிறார்கள் என்று உணர்ந்த வசந்தி தேவி, தன்னை நம்பி உண்மையை வெளியிடலாம் என்று கூறியும், அவர்களது பயம் குறையவில்லை. நடந்தது என்ன என்பதை இனியும் அறிய முடியாது என்று நம்பிக்கை இழந்து அங்கிருந்து புறப்பட இருந்த வசந்தி தேவிக்கு இறுதியில் திருப்பு முனையாக ஒரு ஆதாரம் கிடைத்தது.

கருப்பியின் நாத்தனார் கணவரான கிறிஸ்து தாஸ் என்பவர் இம்மரணத்தின் காரணத்தை மூடிமறைத்து இருந்த இரகசியத் திரையை விலக்கினார். “அம்மா என்னையும் என் பிள்ளைகளையும் தயவு புரிந்து காப்பாத்துங்க, நாங்க பெரிய ஆபத்திலே மாட்டியிருக்கோம்” என்று கூறி வசந்தி தேவியின் காலில் விழுந்து கதறியிருக்கிறார் கிறிஸ்து தாஸ். ‘உண்மையை நான் சொல்லியே ஆகணும், இல்லேனா ஈமத்தீயிலே என் நெஞ்சு வேகாது’ என்று சொல்லி நடந்ததை கூறியிருக்கிறார்.

நவம்பர் 26, 2002 அன்று இரவு கிறிஸ்து தாஸையும் அவருடைய மனைவியையும், கருப்பியின் மகள் மற்றும் மருமகன் ஆறுமுகத்தையும் பரமக்குடி போலீஸார் காவல் நிலையத்திற்கு இழுத்து வந்துள்ளனர். சங்கிலியால் கட்டப்பட்டு இருந்த கருப்பி திருடியதாக போலீஸார் அவர்களிடம் சொல்லியிருக்கின்றனர. அதன் பிறகு கிறிஸ்து தாஸின் ஆடைகளைக் களைந்து, கைகளில் விலங்கிட்டு, கால்களை மேசையில் கட்டி வைத்து விடியும்வரை உடல் ரீதியான தாக்குதல்களுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாக்கியுள்ளனர்.

செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கத்தான், கருப்பியின் உறவினர்களை பிடித்துவந்து, அவளுடைய கண்முன்னரே போலீஸார் அடித்துள்ளனர் என்பதை உணர்ந்தார் கிறிஸ்து தாஸ்.

மூன்று நாட்களும், கருப்பியை நான்கு போலீஸார், மிருகத்தனமாக சித்திரவதை செய்துள்ளனர். லத்தியால் அடித்தும், விரல் நகங்களில் ஊசியால் துளைத்தும் துன்புறுத்தியுள்ளனர். தான் அப்பாவி என்று மன்றாடிய அப்பெண்ணின் கதறல்களுக்கு செவிசாய்க்காமல், பரிந்து பேச முயற்சித்த கிறிஸ்து தாஸையும் புடைத்து எடுத்துள்ளனர்.

மூன்று நாட்கள் கழித்து கிறிஸ்து தாஸ் குடும்பத்தை போலீஸார் விடுவித்தனர்.

டிசம்பர் 1 2002 அன்று, இறந்த பெண் ஒருவரின் உடல் காவல் நிலையத்தின் பின் கிடைத்துள்ளது என்றும், மருத்துவமனையில் இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு கொள்வதற்கான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்றும் கேள்விப்பட்ட கிறிஸ்து தாஸ் அங்கு சென்றுள்ளார். அங்கு அவர் கருப்பியை பிணமாகத்தான் பார்க்க முடிந்தது.
வசந்தி தேவியின் விசாரணை துவங்குவதற்கு முன்பே, போலீஸார் கருப்பியின் குடும்பத்தை தொடர்ந்து மிரட்டி வந்தனர் என்ற உண்மையையும் கூறினார் கிறிஸ்து தாஸ்.

விவரங்களுடன் சென்னைக்கு திரும்பிய வசந்தி தேவி கருப்பி வழக்கின் முக்கிய ஆவணங்களான, பிரேத பரிசோதனை அறிக்கை, முதல் தகவல் அறிக்கை, ராமநாதபுரம் கலெக்டரின் மரண விசாரணை அறிக்கை இவற்றை சேகரித்தார். சம்பவத்திற்கு பிறகு நடந்த சப் கலெக்டர் விசாரணையில், ஐந்து போலீஸ் அதிகாரிகளும், ஒரு இன்ஸ்பெக்டரும் தாற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட தகவல் அவருக்கு தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை, ராமநாதபுரம் கலெக்டரின் மரண விசாரணை அறிக்கை ஆகிய ஆவணங்களை சென்னை அரசு மருத்துவமனையின் மருத்துவ தடயவியல் துறை தலைவரின் கருத்துக்காக அனுப்பி வைத்தார்.
தடயவியல் துறைத் தலைவர் கீழ்க்காணும் முக்கிய குறிப்புகளை அனுப்பினார்.

மூச்சுத்திணறல் காரணமாக மரணம் ஏற்பட்டுள்ளது.
உடல் முழுவதும் பல இடங்களில் கன்றிப்போன காயங்கள் உள்ளன.
இறப்பதற்கு 1-3 நாட்கள் முன்பு வரை கூர்மையற்ற ஆயுதத்தின் மூலம் பலமுறை தாக்கப்பட்டிருக்கிறார்.
இடது மற்றும் வலது பக்கங்களிலிருந்து தாக்குதல்கள் நடந்துள்ளன.
வலது நெற்றியில் உள்ள உறைந்துப்போன காயம் தான் அவர் தூக்கில் தொங்குவதற்கு முன்னதாக ஏற்பட்டுள்ள கடைசி காயமாகும்.

கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு இவ்வழக்கை சி.பி.ஐ. அல்லது மாநில கிரைம் பிரான்ச் மூலமாக, விசாரிக்கக் கோரி உள்துறை செயலாளருக்கும் தலைமை செயலருக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். கடிதங்களுக்கும் நினைவூட்டல்களுக்கும் அரசாங்கத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை.
தமிழ்நாடு மாநில பெண்கள் கமிஷன் சட்டப்படியான அதிகாரங்கள் இல்லாத அமைப்பாக இருந்ததால் வழக்கின் சாட்சிகளை அழைத்து விசாரிக்கும் உரிமை அதற்கு கிடையாது. ஆகவே, வசந்தி தேவி, தேசிய பெண்கள் கமிஷன் தலைவராக இருந்த பூர்ணிமா அத்வானியை தொடர்பு கொண்டார். தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில பெண்கள் கமிஷன்கள் சேர்ந்து, அக்டோபர் 28 2003 அன்று கூட்டு பொது விசாரணையை மதுரையில் நடத்தினர்.

விசாரணைக்கு கருப்பியின் உறவினர்களும், பல சாட்சிகளும் பரமக்குடி சப்-கலெக்டரும், குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர்களும் அழைக்கப்பட்டனர். கருப்பி, உடல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளாகித்தான் இறந்திருக்கிறார் என்பது மேலும் தெளிவானது. நடந்து தற்கொலை அல்ல போலீஸாரால் நடத்தப்பட்ட கொலை என்பது உறுதியாகியது.

கொலை செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும், கருப்பியின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ 2 லட்சமும், கொடுமைகளுக்கு ஆளான ஆறுமுகம் மற்றும் கிறிஸ்து தாஸ் குடும்பத்தினருக்கு தலா ரூ 1 லட்சமும், நஷ்ட ஈடு தொகையாக வழங்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

அறிக்கை தமிழ்நாடு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டாலும், வசந்தி தேவியின் பணிக்காலம் முடிவடைந்த மார்ச் 2005 வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2006 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் அப்போது மாநில மகளிர் ஆணையத்தின் வழக்கறிஞருமான சுதா ராமலிங்கம் இவ்வழக்கை பரமக்குடி காவல் நிலைய கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து சி.பி.ஐ பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இம்மனுவினை நீதிபதி கே.என்.பாஷா விசாரித்தார். “பாதிக்கப்பட்ட பெண், போலீஸாரால் மனிதத் தன்மையற்ற விதத்தில் உடல் ரீதியான தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டுள்ளதை ஆதாரங்கள் நிரூபிக்கின்றன என்றும் போலீஸ் அதிகாரிகள் குற்றவாளிகளாக சம்பந்தப்பட்டிருப்பதால் இவ்வழக்கின் புலனாய்வை தன்னிச்சையான அமைப்பு ஒன்று செய்யவேண்டும்” என்று தீர்ப்பு வழங்கினார்.

5 வருடங்களுக்கு பிறகு, சென்ற பிப்ரவரி 14ம் தேதி அமர்வு நீதிமன்ற நீதிபதி டபிள்யூ. சதாசிவம் கருப்பியை கொன்ற எட்டு போலீஸ்காரர்களில் 5 பேருக்கு 10 வருடம் கடுங்காவல் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு தண்டனையும் இன்னும் ஒருவருக்கு 3 வருட சிறை தண்டனையும் வழங்கியுள்ளார்.
லாக்கப் கொலையை தற்கொலை என்று சித்தரித்து கருப்பியின் உடலை மின் கம்பத்தில் தூக்கிலிட்ட காவல் நிலையத்துக்கு பொறுப்பாக இருந்த இன்ஸ்பெக்டர் சாஹில் ஹமீதுக்கு ரூ 1 லட்சம் ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.

சட்டத்தின் காவலர்களான போலீஸ்காரர்கள் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்த ஆதரவுமற்ற ஒரு பெண்ணை படுகொலை செய்திருக்கின்றனர். அவரது குடும்பத்தையும் சித்திரவதை செய்திருக்கின்றனர். அந்த குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனைகளும் அபராதமும் மட்டும் விதிக்கப்பட்டுள்ளன. இதுதான் நமது நீதி நிர்வாக அமைப்பின் லட்சணம்.




Tuesday, April 16, 2013

தமிழ் திரையுலகினர்மீது ஈழத்தமிழர்கள் கடும் குற்றச்சாட்டு




இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் தமிழர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு ஒரு நயா பைசாவைக் கூட கொடுத்து உதவாத சினிமாக்காரர்கள் இன்று திடீர் ஞானோதயம் பெற்று போஸ் கொடுக்கிறார்கள் .இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தமிழகத்தின் .நடிக, நடிகையர் மற்றும் இயக்குனர்கள், பாடல் ஆசிரியர்கள், திரை உலகுடன் தொடர்புடைய அனைவரும் கடந்த வாரத்தில் இலங்கைத் தமிழர்களையும், தமிழ் நாட்டு மக்களையும் ஏமாற்றக்கூடிய வகையில் தத்ரூபமாக சோகம் தோய்ந்த முகத்துடன் உண்ணாவிரப் போராட்டத்தில் பசிப்பட்டினியுடன் ஈடுபடுபவர்களைப் போன்று சொந்த வாழ்க்கையிலும் நடித்தார்கள்
தமிழ்நாட்டின் இந்த கூத்தாடிகளை நேரில்வந்து பார்ப்பதற்கு விருப்பம் கொண்ட பொதுமக்கள் அங்கு கூட்டம் கூட்டமாக வந்தார்களே ஒழிய இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் நோக்கத்துடன் அவர்கள் இந்த உண்ணாவிரத நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லையென்று இதனை நேரில் பார்த்துக் கொண்டிருந்த ஒரு ஊடகவியலாளர் தெரிவித்தார்.அன்று மு.ப. 11.00 மணிக்கு நடிகர்கள் ராதாரவி, வாகை சந்திரசேகர், சிவகுமார், அஜித், சூரியா, தனுஷ், பிரசாந்த், சத்தியராஜ், பிரகாஷ்ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, அருண்விஜய், கே. பாக்கியராஜ், வி.எஸ். ராகவன், எஸ்.வீ. சேகர், கருணாஸ், பவர்ஸ்டார் சீனிவாசன், டெல்லி கணேஸ், விஜயகுமார், பாண்டியராஜன், பெப்ஸி விஜயன், தலைவாசல் விஜய், கே. ராஜன், ஹரிகுமார், மன்சூரலிகான், நிழல்கள் ரவி, எம்.எஸ். பாஸ்கர், கலைப்புலி தானு, வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் ரேகா, ராதிகா சரத்குமார், ஊர்வசி, அம்பிகா, நளினி ஆகிய பழைய நடிகைகளும், நடிகர் ரஜனிகாந்த், கமல், அஜித், அர்ஜுன் ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர் சங்கம், திரைப்பட தொழிலாளர் சம்மேளனம், விநியோகத்தர் சங்கம், திரையரங்கு உரிமையாளர் சங்கம், சின்னத்திரை நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் பங்கேற்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை போர்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கைத் தமிழர்களுக்கான தனிநாட்டை அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுவதாக நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.இதில் அஜித், அர்ஜுன் ஆகிய இரு நடிகர்களும் கலந்து கொண்டார்கள். போன தடவை இதுபோன்ற ஒரு இலங்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாத காரணத்தினால் இவர்களின் படங்கள் பகிஷ்கரிக்கப்படும், சினிமா வாய்ப்புகள் பறிக்கப்படும் போன்ற அச்சுறுத்தல்கள் எழுந்தன. இதற்கு பயந்து அவர்கள் இருவரும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார்கள் என்று அறிவிக்கப்படுகிறது.


இலங்கை அகதிகள்

தமிழ்நாட்டில் அகதி அந்தஸ்துடன் இருந்துவரும் இலங்கைத் தமிழர்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம். முதலாவது பிரிவைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் கிராமப்புறங்களில் ஏற்படுத்தப்பட்ட அகதி முகாம்களில் வாழ்பவர்களாவர். இவர்கள் அனைவரும் மண்டபம், இடைத்தரிப்பு முகாமில் இருந்து பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்களாவர்.
இரண்டாவது பிரிவினர் முகாம்களில் வாழாமல் வாடகை வீடுகளில் அல்லது உறவினர்கள், நண்பர்களுடன் இருக்கும் இலங்கை அகதிகளாவர். இவர்களுக்கு தமிழக மாநில அரசாங்கத்தின் உதவிகள் கிடைப்பதில்லை. இலங்கை அகதிகளில் சுமார் 50 ஆயிரம் பேர் முகாம்களுக்கு வெளியில் அதுவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் பெரிய நகரங்களில் வாழ்கிறார்கள்.

மூன்றாவது பிரிவைச் சேர்ந்த இலங்கை அகதிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய வகையில் இலங்கையில் இருந்த போது நாசகார வேலைகளில் ஈடுபட்டவர்களாவர். இந்த பிரிவைச் சேர்ந்த இலங்கை அகதிகள் விசேட முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். இந்த விசேட முகாம்கள் 1991ம் ஆண்டுக்கு பின்னர் ஏற்படுத்தப்பட்டன.1983ம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கலவரத்துக்கு பின்னர் இலங்கையில் இருந்து அலை அலையாய் வந்த தமிழ் அகதிகள் ராஜபாலையம் அகதி முகாமில் வைக்கப்பட்டனர். இவர்களும் மூன்று பிரிவுகளாக வைக்கப்பட்டனர். ஒரு பிரிவினர் முகாம்களில் இருந்தனர். இன்னுமொரு பிரிவினர் முகாம்களுக்கு வெளியில் அகதிகளாக இருந்தனர். ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் மூன்றாவது முகாமில் வைக்கப்பட்டனர்.

அவசரகால நிலை 1983 இல் ஏற்பட்டபோது தமிழ் நாடு அரசாங்கம் அவர்களை இன்முகத்துடன் வரவேற்றது. இந்தியாவில் மொழிப்பிரச்சினை இருப்பதனால் மற்ற பிராந்தியங்களின் மொழி தெரியாத இலங்கை அகதிகளை இந்திய அரசாங்கம் வெளியில் அனுப்ப விரும்பாமல் தமிழ் நாட்டிலேயே அவர்களுக்கு சர்வதேச ரீதியில் உதவிகள் கிடைப்பதை தவிர்ப்பதற்காக இந்திய அரசு அரசசார்பற்ற அமைப்புகளை தடை செய்தது.

தமிழ் நாட்டில் மாத்திரம் 132 முகாம்களில் 80 ஆயிரம் அகதிகள் இருந்தார்கள். ஒரிசாவில் ஒரே ஒரு முகாமே இருந்தது. சகல அகதி முகாம்களும் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் உள்ளவர்களுக்கு அரசாங்கத்தின் உதவி, பணமாகவும், இருப்பிட வசதியும், சுகாதார வசதிகளும் உடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை பெறும் வாய்ப்பும் கிடைத்தது.

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளுக்கு உலக தரத்திலான கல்வி வசதியும் செய்து கொடுக்கப்பட்டது. ஆயினும் 1991ம் ஆண்டில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி எல்.ரி.ரி.ஈ. குண்டுதாரியினால் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து இந்த சலுகைகளை இந்திய அரசு வாபஸ் வாங்கியது. அதையடுத்து இலங்கை அகதிகளின் வெளியிட நடமாட்டமும் கட்டுப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து தமிழ்நாட்டின் கரையோரப் பகுதிகளில் இருந்த முகாம்கள் அனைத்தும் நாட்டின் உள்ளக பிரதேசத்திற்கு மாற்றப்பட்டன. வெளியில் இருந்து வரும் பயங்கரவாதிகளுடன் இலகுவில் ஏற்படக்கூடிய தொடர்பை கட்டுப்படுத்தவே இந்தத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முகாம்களில் இருப்பவர்களின் நடமாட்ட சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டு அவர்கள் மூன்றாம்தர பிரஜைகளாக நடத்தப்பட்டார்கள்.

முகாம்களின் விதிகளுக்கு அடிபணிய மறுப்பவர்களுக்கான இலவச உலர்உணவுகள் தண்டனையாக நிறுத்தப்படுவதுண்டு. இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானிகராலயத்தின் கண்காணிப்புக்கு அனுமதிக்கப்படவில்ல. இதுமட்டுமன்றி இந்த முகாம்களில் உள்ள மனித உரிமை துஷ்பிரயோகங்களை அவதானிப்பதற்கு எந்தவொரு அமைப்புக்கும் இடம் கொடுக்கப்படவில்லை.

அதே நேரத்தில் பொருளாதார ரீதியில் செல்வம் படைத்த இலங்கை அகதிகள் தமிழ்நாட்டில் முகாம்களுக்கு வெளியில் தனித்தனியான வீடுகளில் அகதிகளுக்கான சலுகைகளை பெறாமல் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் செல்வந்த வர்த்தகர்கள். மேலும் சிலர் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், போன்றவர்கள்.
கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த போது முகாம்களுக்கு உள்ளும், வெளியிலும் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியப் பிராஜாவுரிமை மிக விரைவில் பெற்றுக் கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில் இருக்கிறது.


நடிக, நடிகையரின் போலி நடிப்பு

இவை அனைத்தும் மேடையில் நடந்த உண்மை சம்பவங்களாகும். அடுத்து நாம் மேடைக்கு பின்னால் திரைமறைவில் நடந்த திருகுதாளங்களை அட்டவணைப்படுத்தி வெளியிட விரும்புகிறோம்.மேடைக்கு பின்னால் சென்னையில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் இருந்து சுடசுட கொண்டுவரப்பட்ட இட்லி, உழுந்துவடை, தோசை, பூரி போன்ற பலதரப்பட்ட தின்பண்டங்களும், மென்பானங்களும், ஐஸ்கிரிம், புருட்செலட் போன்றவையும் தாராளமாக கொண்டுவந்து மேசைகளில் வைக்கப்பட்டிருந்தன.

வெளியில் தங்களை பார்ப்பதற்கு உச்சிவெயிலில் நின்றுகொண்டிருந்த நூற்றுக்கணக்கான சினிமா ரசிகர்களை காக்கவைத்துக் கொண்டிருந்த இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் அடிக்கடி எழுந்து திரைக்கு பின்னால் சென்று வயிறுமுட்ட தோசையையும், இட்லியையும், வடைகளையும் விழுங்கிவிட்டு ஏப்பம்விட்டவாறு மென்பானத்தை அருந்திவிட்டு களைப்புடனான சோகத்தை வெளிப்படுத்தும் முகபாவத்துடன் மேடை யில் வந்து அமர்ந்தார்கள். இலங்கை தமிழ் மக்கள் மீது பேரபிமானம் கொண்டவர்கள் போன்று நடிப்பதை தான் நேரில் பார்த்தாக அந்த பத்திரிகை நிருபர் அறிவித்தார்.

சாமி படத்தில் “கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா, இல்ல ஓடிப்போய் கல்யாணந்தான் கட்டிக்கலாமா? தாலியைத்தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா? இல்ல புள்ள குட்டி பெத்துகிட்டு கட்டிகலாமா” என்ற பாடலில் நடிகர் விக்ரமுடன் ஆடிப்பாடி கும்மாளம் போட்ட நடிகை த்ரிஷாவுக்கு ஜஸ்கிரிம் என்றால் பொல்லாத ஆசை. ஐஸ்கிரிம் குடிப்பதற்கு எத்தனையோ இடங்கள் இருக்கும் போது இந்த நடிகை உண்ணாவிரதம் செய்து கொண்டிருந்த மேடைக்கு பின்பக்கமாக சென்று ஒரு பெரிய கப்பில் ஐஸ்கிரிமை சுவைத்துக் கொண்டிருந்த காட்சியை பார்த்த சிலர் ஆத்திரமடைந்த நிலையில் மேடைக்கு வர எத்தனித்த போது பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்திவிட்டதாக அறிவிக்கப்படுகிறது.

இவ்விதம் தான் தமிழ்த்திரையுலகின் நடிகர், நடிகையர் பணம் சம்பாதிப்பதற்கு நடிப்பைத் தொழிலாக செய்வதைப் போன்று தங்கள் சுயநலத்திற்காக எந்தத் துரோகத்தையும் சொந்த வாழ்க்கையிலும் செய்வதற்கு தயக்கம் காட்டுவதில்லை.

2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி சுனாமி பேரலையினால் இலங்கை மக்கள் குறிப்பாக வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களும் முஸ்லிம்களும் ஆயிரக்கணக்கில் உயிர்துறந்த போது இலங்கையில் தங்கள் திரைப்படங்களை காட்டி கோடிக்கணக்காக சம்பாதித்த இந்த திரையுலக நடிக, நடிகையர்கள் ஒரு செப்பு காசைக்கூட சுனாமியினால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு கொடுத்து உதவ முன்வரவில்லை. இளைய தளபதி என்ற பட்டத்துடன் திரையுலகிலும் ஒரு மாவீரனைப் போன்று நடிக்கும் விஜய் மாத்திரம் ஒரு இலட்சம் ரூபாவை சுனாமி மீட்பு பணிகளுக்காக கொடுத்தார்.
இலங்கையில் இருந்து கோடிக்கணக்கான ரூபாவை சம்பாதித்த நடிகர் விஜய் ஒரு இலட்சம் ரூபாவை நம்நாட்டு மக்களுக்காக தூக்கி வீசுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இவர் இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த தமிழ் பெண்ணை மணமுடித்திருப்பதே அதற்கான காரணமாகும்.இலங்கையில் யுத்த குற்றச்சாட்டுகள், மனித உரிமை மீறல்கள், 2009ம் ஆண்டு மே மாத நடுப்பகுதியில் இடம்பெற்றன என்று தேசத்துரோகிகள் பரப்பிய பொய்ப்புரளியை நம்பி, யுத்தம் முடிந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்னரே இலங்கை தமிழர் மீது மோகம் கொண்டு உண்ணாவிரதம் செய்யும் தமிழகத்து திரையுலகின் பிரபலங்கள் 2009ல் யுத்தம் முடிவடைந்தவுடன் இடம்பெயர்ந்த சுமார் 3 லட்சம் தமிழர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கு ஒரு நயா பைசாவைக் கூட கொடுத்து உதவாதது போல் உண்மை வாழ்க்கையிலும் நடித்துக் கொண்டு மக்களை ஏமாற்றும் நடிக, நடிகையருக்கு நம்நாட்டு தமிழ் மக்களைப் பற்றி பேசுவதற்கோ, அவர்கள் மீது பாசம் காட்டுவதற்கோ எவ்வித அருகதையும் இல்லை.

1983ம் ஆண்டிலிருந்து தமிழ் நாட்டில் இருக்கும் சுமார் 80 ஆயிரம் இலங்கை தமிழ் அகதிகளை ஒரு தடவையாவது இந்த தமிழ் நாட்டு திரையுலக நடிக, நடிகையர் அவர்கள் வாழும் முகாம்களுக்கு போய் பார்த்திருப்பார்களா? அல்லது பொருளாதார உதவி செய்திருக்கிறார்களா? அவர்கள் அவ்விதம் செய்யமாட்டார்கள். உண்மை வாழ்க்கையிலும் நல்லவர்களைப் போல் நடிக்கும் இந்த நடிக, நடிகையர்களுக்கு கருணை உள்ளம் இல்லாதிருப்பதே அதற்கான காரணமாகும்.






Monday, April 8, 2013

வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலை - ஒரு ரிபோர்ட்





அனில் அகர்வால் என்ற லண்டனில் குடியேறிய இந்தியரின் 'வேதாந்தா' தொழிற்சாலைக்கு எதிராக இந்தியாவில் உழைக்கும் மக்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றனர்.



குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் வேதாந்தாவின் தாமிர உருக்கு ஆலை அமைக்க முயன்று, தோற்றுப் போய் பின்னர் மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் 12.12.1989இல் அடிக்கல் நாட்டப்பட்டது. அங்கு விவசாயிகள் கிளர்ந்து எழுந்து போராடியதால், அம்மாநில முதல்வர் சரத்பவார் ஆலை அமைக்க அனுமதி மறுத்து 1.5.1994இல் கட்டுமானப் பணிக்குத் தடை விதித்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மக்களின் போராட்டத்தை கண்டு கொள்ளாமல், தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் 30.10.1994 அன்று ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைக்க அனுமதித்து, கட்டுமானப் பணிக்கு அடிக்கல்லும் நாட்டினார். அதனால் 18.3.1996 அன்று தூத்துக்குடி வந்த ஜெயலலிதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு கருப்பு நாளாக அனுசரிக்கப்பட்டது.



தூத்துக்குடி துறைமுகத்துக்கு தாமிரத் தாது கொண்டு வந்த எம்.வி.ரீசா என்ற கப்பல் 20.3.1996 அன்று ஆழ்கடலில் தடுத்து மீனவர்களால் விரட்டியடிக்கப்பட்டது. கப்பல் கொச்சிக்கு சென்றது. 78 விசைப்படகுகள், 24 நாட்டுப்படகுகள் கொண்ட சுமார் 500 பேர் கொண்ட சிறிய மீனவர் படைதான் இதனை செய்தது.



பின்னர் 10.4.1996 முதல் இரு பெண்கள் உள்ளிட்ட 16 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர். அரசின் சார்பில் 18.4.1996 முதல் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் கழிவுகள் குழாய்கள் மூலம் கடலில் கலக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டது.




மக்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து 1996 இல் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பரதவர், நாடார் இடையே திட்டமிட்ட சாதி மோதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் மள்ளர், தேவர் இடையே சாதி மோதல்கள் வீரியமானது. இதன் பிண்ணனியில் பல்வேறு அரசியல் காரணங்கள் இருந்தன.




ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் என்ற - தமிழ்மாந்தன் தலைமையிலான - அமல்ராஜ் என்ற இறையரசு, ராஜேஸ் என்ற கடலரசன், செ.ரெ.வெனி இளங்குமரன், சி.சற்குணம், ம.சான்சன், ம.அன்வர், முத்துராஜ், அ.அருள்ராஜ் ஆகியோரைக் கொண்ட அமைப்பு 20.7.1996 அன்று நடத்திய ஸ்டெர்லைட் மாநாட்டில் திரளான மக்கள் கலந்து கொண்டு எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
சாதியின் பெயரால் பிரிந்து கிடந்த மக்களின் ஒற்றுமையின்மையை பயன்படுத்தி கொச்சியில் இருந்து லாரிகள் மூலம் தாமிரத் தாதுக்கள் கொண்டு வரப்பட்டதோடு, 19.10.1996 இல் எம்.வி.பரங்கவி என்ற கப்பல் தூத்துக்குடி துறைமுகத்துக்கு நேரிடையாகவே தாமிரத்தாதுவை சுமந்து வந்து சேர்ந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து துறைமுகத் தொழிற்சங்கத் தலைவர் சி.பசுபதிபாண்டியன் தலைமையிலான தொழிலாளர்கள் 20.10.1996 முதல் துறைமுகத்தில் சரக்குகளை இறக்க மறுத்துப் போராடினர். 152 விசைப்படகுகள், 36 நாட்டுப் படகுகளில் ஒன்று திரண்ட மீனவர்கள் 24.10.1996 இல் அக்கப்பலை முற்றுகையிட்டு துறைமுகத்தை விட்டே வெளியேற்றினர்.
இதற்கிடையில் 1996 இறுதியில் தமிழக முதல்வரான கருணாநிதி அனுமதி கொடுத்ததால் 1997 முதல் ஸ்டெர்லைட் ஆலை இயங்க ஆரம்பித்தது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தடை இல்லா சான்றிதழை 1.8.1994ல் இரு கட்டுப்பாடுகளோடு கொடுத்தது. மன்னார் வளைகுடாவிலிருந்து 25 கிலோ மீட்டருக்கு அப்பால் தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும். 




தொழிற்சாலையைச் சுற்றி 250 மீட்டருக்கு பசுமை வளையம் உருவாக்க வேண்டும். ஆனால் ஆலை 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பசுமை வளையம் குறிப்பிட்ட அளவில் அமைக்கவில்லை.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தடையில்லாச் சான்று இல்லாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 14.10.1996ல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் 40,000 டன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியது. ஆனால் ஸ்டெர்லைட் தொழிற் சாலையில் 1,70,000 டன் தாமிரம் உற்பத்தி செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கத்தின் சார்பாக ‘தூய சுற்றுச் சூழலுக்கான தேசிய அறக் கட்டளை’ என்ற அமைப்பின் வழக்குரைஞர் வி.பிரகாஷ் 7.11.1996 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சி.பி.எம். கனகராஜ், சி.பி.ஐ.அப்பாத்துரை உள்ளிட்டோர் தங்களையும் இணைத்துக் கொண்டனர்.

இதற்கிடையில் 5.7.1997 அன்று ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்பட்ட நச்சு வாயுக் கசிவால் அருகிலுள்ள ரமேஷ் பிளவர்ஸ் நிறுவனத்தில் 165 பெண் தொழிலாளர்கள் மயங்கி விழுந்தனர். அதில் சிலருக்கு கருச்சிதைவு ஏற்பட்டது. அடுத்து 2.3.1999 அன்று அகில இந்திய வானொலி நிலையப் பணியாளர்கள் 11 பேர் ஸ்டெர்லைட் நச்சு வாயுக் கசிவால் மயங்கி விழுந்தனர்.




நீதிமன்ற வழிகாட்டுதலின்படி டாக்டர் கண்ணா தலைமையில் நீரி அமைப்பினர் 1998 இல் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை கொடுத்தனர். அதனடிப்படையில் நடந்த விவாதத்தின் முடிவாக 23.11.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதியரசர்கள் லிபரான், பத்மநாபன் குழு உத்தரவிட்டது. அதன் பின்னர் நீதியரசர் அகர்வால் தலைமையிலான அமர்விற்கு வழக்கு மாற்றப்பட்டு 25.12.1998 அன்று ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

நாக்பூர் நீரி நிறுவனம், 1998-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் நச்சு ஆலை சுற்றுப்புறச் சூழலுக்கும், நிலம், நீர், காற்று மண்டலத்திற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆய்வு அறிக்கை தந்து இருந்தது. 1999-ஆம் ஆண்டில் பல்டியடித்த நீரி நிறுவனம், 2003-ஆம் ஆண்டில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஆய்வு அறிக்கை தந்தது. இதற்கு காரணம் 1998 நவம்பர் அறிக்கைக்கு பின்னர் 1.22 கோடி ரூபாய் நீரி அமைப்பில் உள்ள அறிவியலாளர்களுக்கு ஆலோசனைக் கட்டணமாக ஸ்டெர்லைட் வழங்கியுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்கப்பட்ட விதிப்படி ஆண்டுக்கு 1,36,850 டன்னை மட்டுமே இந்த ஆலை உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால், 2003 டிசம்பரில் வேதாந்தா குழுமம் லண்டன் பங்குச் சந்தையில் தனது குழும நிறுவனங்களை பட்டியலிட்டபோது ஆண்டுக்கு 1,80,000 டன் உற்பத்தி செய்வதாக தெரிவித்தனர். இது விதியை மீறிய செயல் ஆகும்.
21.9.2004 இல் முனைவர் தியாகராசன் தலைமையிலான உச்ச நீதிமன்ற ஆய்வுக் குழு ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஆய்வு செய்தது. அப்போது அனைத்து விதிகளும் மீறப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.



தற்போது உள்ள உற்பத்தி திறனுக்கு ஏற்ற அளவு கழிவுகளை சுத்திகரிக்கவும், பராமரிக்கவும் தேவையான கட்டமைப்பு இந்த ஆலையில் இல்லை. ஆதலால் இந்த ஆலையின் விரிவாக்கப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் இசைவு அளிக்கக்கூடாது என்றும், முன்னரே இசைவு அளித்திருப்பின் அதை திரும்பப் பெறுமாறும் உச்ச நீதிமன்றத்தின் குழு அறிவுறுத்தியது. ஆனால், மறுநாளே 22.9.2004 மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது.

2004 நவம்பரில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் உரிமம் அளிக்கப்பட்டுள்ள 70,000 டன்கள் ஆனோடை விட அதிகமாக, அதாவது 1,64,236 டன்கள் ஆனோடை ஸ்டெர்லைட் ஆலை உற்பத்தி செய்துள்ளது. இரு உருளைவடிவ தாங்கு உலைகளையும், கழிவுகளை தூய்மை செய்யும் ஓர் உலையையும், ஒரு ஆனோடு உலையையும், ஒரு ஆக்சிஜன் பிரிவையும், ஒரு கந்தக அமிலப் பிரிவையும், ஒரு காஸ்டர் பிரிவையும், ஒரு கன்வெர்டரையும் எவ்வித அனுமதியும் பெறாமல் கட்டியுள்ளனர். இரண்டு பாஸ்பரஸ் அமில பிரிவுகளும், சுத்திகரிப்பு மற்றும் தொடர்ச்சியான காஸ்டர் ராட் உருவாக்கும் பிரிவும் கட்டப்பட்டு வருவதாகவும் அதற்கும் அனுமதி பெறவில்லை என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டது.

ஆனால், 2005 இல் உச்சநீதிமன்ற ஆய்வுக் குழு இதனையெல்லாம் குறைத்து மதிப்பிட்டு அறிக்கை தயார் செய்தது. அனுமதியின்றி கட்டப்பட்ட கந்தக அமிலப் பிரிவு தனது உற்பத்தியை 2005 இல் துவக்கியது. அனுமதி அளிக்கப்பட்ட 3,71,000 டன் கந்தக அமில உற்பத்தியைவிட அதிகமாக 5,46,647 டன் கந்தக அமிலம் 2004 ஏப்ரல்- 2005 மார்ச் வரை உற்பத்தி செய்யப்பட்டது. இது உரிமம் வழங்கப்பட்டதை விட 47% அதிகம்.



உச்சநீதிமன்றத்தின் முனைவர் தியாகராசன் தலைமையிலான குழு சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட பகுதிகளுக்கு ஒப்புதல் அளிக்குமாறு ஆலோசனை கூறியது. 7.4.2005 இல் சுற்றுச்சூழல் அமைச்சக தலைமை இயக்குநரான முனைவர் இந்திராணி சந்திரசேகர் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு, "உச்ச நீதிமன்ற குழுவின் பரிந்துரைப்படி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு ஒப்புதல் அளிப்பதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுக்கலாம்” என்று ஆணை பிறப்பித்தார். அதன்படி, 19.4.2005 அன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவரான முனைவர் கிரிஜா வைத்தியநாதன் விதிமுறையை மீறி கட்டப் பட்ட ஸ்டெர்லைட் ஆலையின் புதிய பிரிவுகளுக்கு அனுமதி அளித்தார்.

பல ஆயிரம் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டு வந்த நிலையில் 24.7.2010 அன்று ஸ்டெர்லைட் நிறுவனத்தின் துணைத் தலைவர் வரதராஜன் ரூ.750 கோடி வரிஏய்ப்பு செய்ததாக கைது செய்யப்பட்டார். அப்போது மீண்டும் துவங்கிய போராட்டம் மனித உரிமை பாதுகாப்பு மையம், நாம் தமிழர் அமைப்பு உள்ளிட்ட வழக்குரைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வரதராஜன் நீதிமன்ற வளாகத்தில் தாக்கப்பட்டார்.

மதிமுக மாவட்ட செயலாளர் ஜோயல், பேரா.பாத்திமா பாபு முன்னிலையில் தாமிரபரணி பாதுகாப்பு பேரவையின் அமைப்பாளர் நயினார் குலசேகரன் தலைமையில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழுவினர் 26.7.2010 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இழுத்து மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் 28.9.2010 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதியரசர் எலிப் தர்மராவ், பால்வசந்தகுமார் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை  நிரந்தரமாக மூட ஆணை பிறப்பித்தது.

இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஆனால், வழக்கை நடத்தாமல் வேதாந்தா குழுமம் இழுத்தடித்தது. 2012 இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் நடைபெற்றன. 
தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது சல்பர் டை ஆக்சைடுடன், ஆர்சின் போன்ற வாயுக்களும் வெளியிடப்படுகின்றன. 2000 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 4 கிலோ சல்பர் டை ஆக்சைடு வெளியிடப்படுகிறது. 20 கிலோ தாமிரம் உற்பத்தி செய்யப்படும் பொழுது 0.1 கிலோ துகள்கள் வெளியிடப்படுகின்றன. இவை காற்றை கடுமையாக மாசுபடுத்துகின்றன. தாமிரம் உற்பத்தியின்போது வெளியிடப்படும் கழிவுநீரில் காரீயம், காட்மியம், துத்தநாகம், ஆர்செனிக், பாதரசம் போன்ற உலோகங்கள் உள்ளன. இவை நீரை நேரடியாக மாசுபடுத்துகின்றன. இந்த உலோகங்கள் நச்சுத் தன்மை வாய்ந்தவை. திடக்கழிவுகளில் 0.5-0.7 கிலோ வரை தாமிரம் உள்ளது, ஒரு டன் தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது, மூன்று டன் திடக்கழிவு வெளியிடப்படுகிறது. இவை நல்ல நிலங்களில் கொட்டப்படுகின்றன. அதனால் நிலம் பாழாகிறது.

அமெரிக்காவில் வசிக்கும் உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆய்வாளார், டாக்டர் மார்க் செர்னைக் என்பவர், ஸ்டெர்லைட் வளாகத்திலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களிலும் சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர், ஸ்டெர்லைட் கழிவுகள் இவற்றின் மாதிரிகளை, சோதனைச் சாலையில் ஆய்வு செய்து தந்த ஆய்வு அறிக்கையில், ”மண்ணும், நீரும் நச்சுத் தன்மை வாய்ந்த உலோகங்களின் தாக்கம் கொண்டு இருப்பதாகவும், கால்நடைகள் செத்துப்போகும், மனிதர்கள் புற்று நோய் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவார்கள், மனிதர்கள் ஆயுட்காலம் இவற்றால் குறையும்” என்று பல்வேறு புள்ளி விவரங்களுடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்தான், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2013 மார்ச் 23 அதிகாலையில் வெளியேறிய கந்தக டை ஆக்சைடு வாயு, காற்று மண்டலத்தில் கலந்து, தூத்துக்குடியில் பல்வேறு பகுதியில் உள்ள மக்கள் சுவாசிக்க முடியாமல், மூச்சுத் திணறலுக்கு ஆளாகினர். கதிர்வீச்சு கலந்து இருந்த இந்த நச்சுக் காற்றால், பனித்துளிகள் படர்ந்து இருந்த செடிகள்,மரங்களின் இலைகளும், பூக்களும், நிறம் மாறி, கருகி உதிர்ந்தன.
அதே நாளில் ஸ்டெர்லைட் ஆலையின் உள்ளே மயக்கமடைந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் மேத்தா என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை விபத்திற்கான பொறுப்பை ஏற்று, தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் 1997 மற்றும் 1998 இரு ஆண்டுகளில் மட்டும் நான்கு முறை மொத்தம் ஒன்பது லட்சத்து நாற்பதாயிரம் அபராதம் கட்டியுள்ளனர்.
1994 முதல், 2004 க்கு இடைப்பட்ட காலங்களில் நடந்த விபத்துகளில், 139 தொழிலாளர்கள் படுகாயமுற்று உள்ளனர். 13 பேர் இறந்து உள்ளனர். கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் மர்மமாக இறந்துள்ளனர்.
அமெரிக்காவில், 1890 ஆம் ஆண்டு, வாஷிங்டனுக்கு அருகில் அமைக்கப்பட்ட அசார்கோ (Asarco) எனும் தாமிர ஆலை, மக்கள் எதிர்ப்பால், 1984 இல் மூடப்பட்டது. கொள்ளை இலாபம் இந்த ஆலையில் கிடைக்கிறது என்பதால், அமெரிக்காவிலும், சிலியிலும் பயனற்றது என்று தூக்கி எறியப்பட்ட பழைய இயந்திரங்களையும், 70 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைய தொழில்நுட்பத்தையும் கொண்டு, தமிழ்நாட்டில் இந்த ஸ்டெர்லைட் ஆலை அமைக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணியில் இருந்து முறைகேடாக, திருவைகுண்டம் அணைக்கட்டிற்கு முன்னதாகவே ஸ்டெர்லைட் ஆலை குழாய் மூலம் தண்ணீர் எடுத்து வருகின்றது. தமிழகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்கள் அதிகம் சிகிச்சை பெறுவது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான். சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையிலும் தூத்துக்குடி மாவட்டம்தான் தமிழகத்தில் முதலிடம் வகிக்கின்றது.

தூத்துக்குடி மாநகரிலும், சுற்றியுள்ள பகுதியிலும் குழந்தைகளுக்கு நோய் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. சுவாசக் கோளாறு, புற்று நோய், கண் எரிச்சல், நுரையீரல் சார்ந்த வியாதிகள், மலட்டுத் தன்மை மற்றும் சிறுநீரகம் சார்ந்த நோய்கள் தூத்துக்குடியில் அதிகரித்து வருவதற்கு காரணகர்த்தாவாக ஸ்டெர்லைட் தொழிற்சாலைதான் உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையின் ஸ்லாக் எனப்படும் கருப்பு கழிவுகள், வெள்ளைநிற ஜிப்சம் ஆகிய கழிவுகள் அகற்றப்படாமல் குவிக்கப்பட்டு வருவதோடு, கழிவுகளைக் கொண்டு சாலைகள் அமைத்து வருவது, கிராமங்களில் கொட்டுவது, நீர் நிலைகளில் கொட்டுவது என்று சூழல் சீர்கேட்டினை ஏற்படுத்தி வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை. இந்தக் கழிவுகளால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.

தெற்கு வீரபாண்டியபுரம் மற்றும் அதைச் சார்ந்த அ.குமாரரெட்டியார்புரம், காயலூரணி ஆகிய கிராமங்களில் நிலத்தடிநீர் விஷ நீராக மாறிவிட்டது. இதுகுறித்து மஞ்சள் நீர் காயலில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சான்றிதழ் மூலம் தெரியபடுத்தியுள்ளது.

மத்திய அரசின் நகர்புற மேம்பாட்டு அமைச்சகம் ஆய்வின்படி சுற்று சூழலிலும், நிலத்தடி நீர் மாசுபாட்டிலும் இந்தியாவில் தொழில் நகரமான தூத்துக்குடி மிக மோசமான நகரம் என்றும், ஆபத்தான நகரம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மூல காரணம் ஸ்டெர்லைட் தொழிற்சாலை. அதனால் தங்களது உயிர் காக்க, தலைமுறைகள் தழைக்க, மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட், சத்திஸ்கரில் பால்கோ, ஒரிசாவில் வேதாந்தா அலுமினியம் கோவாவில் சேசா கோவா என்று இந்தியாவையே வளைத்துப் போட்டிருக்கும் வேதாந்தா குழுமம் இந்திய அரசியல் கட்சிகளுக்கு 2011 ஆம் ஆண்டில் $2.01 மில்லியனும் (சுமார் ரூ 11 கோடி), கடந்த (2010 -2012) மூன்று ஆண்டுகளில் மொத்தம் $5.69 மில்லியனும் (சுமார் ரூ 28 கோடி) நன்கொடையாக கொடுத்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நடந்த 2009-10-ம் ஆண்டில் வேதாந்தாவிடமிருந்து $3.66 மில்லியன் பணத்தை பெற்றிருக்கின்றன இந்திய அரசியல் கட்சிகள்.

ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க் கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கும் வேதாந்தா தொடர்ந்து நன்கொடைகளை வழங்கி வந்திருக்கிறது. இந்துத்துவா குழுக்களால் நடத்தப்படும் லண்டனில் இருக்கும் கிருஷ்ணா அவந்தி தொடக்கப் பள்ளிக்கும் வேதாந்தா நிதி அளிக்கிறது. வேதாந்தாவின் ஸ்டெர்லைட் நிர்வாக இயக்குநராக கடந்த 2004 ஆம் ஆண்டு வரை ப.சிதம்பரம் பதவி வகித்து வந்தார். அதனால் பெரிய அளவில் அரசியல் நெருக்கடி ஏதுமின்றி தொடர்ந்து தப்பித்து வருகின்றது ஸ்டெர்லைட் ஆலை.
எனினும் மக்கள் மன்றத்தில் தீர்ப்புகள் எழுதப்படும் போது பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்.

 (நன்றி : ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம், கடலோர மக்கள் கூட்டமைப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு, பூவுலகின் நண்பர்கள்)



DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget