இதழ் மள்ளர் இன மக்களின், கொடை, வீரம், திறன் பற்றிய பல்வேறு செய்திகளை - இலக்கியத்திலிருந்தும், நடக்கிற நிகழ்வுக் குறிப்புகளிலிருந்தும் திரட்டி, வரிசைப்படுத்தி வெளியிடுவது. மள்ளர் இன மக்களுக்கான விழிப்புணர்வூட்டுவது. இதழிலுள்ள செங்கோட்டுப் பள்ளு என்கிற இலக்கியத் தொடர் உயர்தரத்தது. இந்த இதழில் நீராவிப்பட்டி தேவேந்திரர் வரலாறு காட்டப்பட்டுள்ளது. கடந்த 11 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளிவருகிறது
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் எனத் தலைப்பிலிட்டு 11 ஆவது ஆண்டாக தேவேந்திரர்குல வேளாளர் மக்களை இணைத்து, அவர்களது சாதனைகள், சிறப்புகள் பற்றி வெளியிடுவது. இலக்கியத்திலும், சங்கப்பாடல்களிலும் மள்ளர் மக்களின் நிலையை ஆய்வுசெய்து எடுத்துக்காட்டி, பெருமையை, உழைப்பை நிலைநிறுத்துகிற இதழ். இந்த திங்களில் தமிழர்களின்(தேவேந்திரர், வன்னியர், பறையர்) வரலாற்றை மறைக்கும், திரிக்கும் தொல்லியல் துறையைச் சுட்டிக் குட்டியுள்ளது.



