Thursday, March 28, 2013

இலங்கை அரசுக்கு மள்ளர் நாடு கண்டனம்



பிரபாகரனின் மகன் 12வயது பாலசந்திரனை சுட்டு கொலை செய்த இலங்கை அரசுக்கு மள்ளர்நாடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மள்ளர்நாடு மாநில பொருளாளர் தண்டாயுதபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கையில் அந்நாட்டு ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதி கட்ட போரில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் 12 வயதான பாலசந்திரனை ராணுவத்தினர் பிடித்து ஈவுஇரக்கம் இன்றி சுட்டு கொலை செய்துள்ளனர்.

இதற்கு அந்த நாட்டின் அதிபர் ராஜபக்சேவை உலக நாடுகள் கண்டித்துள்ளன. அவர் போர் குற்றவாளியாக அறிவித்து சர்வேதச கோர்ட்டில் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

இதற்கு இந்தியா தீவிர நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். வரும் மார்ச் 2ம் தேதி ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா.,மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை மீது போர் குற்றம் சுமத்தப்பட வேண்டும் என மள்ளர் நாடு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறுஅவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget