Thursday, March 28, 2013

மள்ளர் நாடு செயற்குழு கூட்டம்



மள்ளர் நாடு செயற்குழு கூட்டம் நிறுவன தலைவர் சுப. அண்ணா மலை தலைமை யில் மதுரையில் நடந்தது. 

மாநில பொது செயலாளர் சோலை பழனிவேல்ராஜன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் மோகன், மாநில துணை பொ ருளாளர் அழகர், மாவட்ட செயலாளர்கள் ராஜாராம், ராஜ்குமார் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பல்வேறு பிரிவுகளில் உள்ள தேவேந்திரர்களை ஒன்றிணைத்து 10 சதவீத தனி இட ஒதுக்கீடு அளிக்க மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி ஏப்.16ல் சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்க தேவேந்திரர் பிறந்த நாளில் பாஞ்சாலங்குறிச்சியில் பேரணி நடத்துவது, டெல்டா விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரண தொகையை உடனடி யாக வழங்க வேண்டுமென்றும், நடப்பா ண்டு மழையின்மையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களை வறட்சி பகுதிகளாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.20ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், பரமக்குடியில் கடந்த 2011ல் செப்.11ல் நடந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணையில் மார்ச் இறுதிக்குள் முன்னேற்றம் இல்லாவிட்டால் உயர்-உச்சநீதிமன்றங்களை அணுகி நீதி பெற வழக்கு தொடருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இலங்கையில் தனிஈழம் அமைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget