Thursday, March 28, 2013

மள்ளர் இலக்கிய கழகம்



திண்டுக்கல்லில் உள்ள காங்கிரஸ் எம்பி. என்.எஸ்.வி. சித்தனின் அலுவலகத்தை மள்ளர் இலக்கிய கழகத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு பற்றிக் கொண்டது.



இலங்கைக்கு எதிரான போராட்டங்களின் தாக்கம் இப்போது காங்கிரஸ் வி.ஐ.பி.க்களின் பக்கம் திரும்பி இருக்கிறது. நேற்று புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.




சிவகங்கையில் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் எம்.பி.அலுவலகத்தை தாக்க வந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். இன்று காலையில் தேனியில் ஆரூண் எம்.பி. அலுவலகத்தை வக்கீல்கள் முற்றுகையிட்டனர். அடுத்ததாக இன்று மதியம் திண்டுக்கல் காங்கிரஸ் எம்.பி. சித்தனின் அலுவலகமும் முற்றுகையிடப்பட்டது.


இன்று மதுரையில் பேரணி நடத்தி மாணவர்கள் வழி நெடுக இருந்த காங்கிரஸ் கொடி கம்பங்களை இறங்கி தீ வைத்துக் கொளுத்தி தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

திண்டுக்கல் நேருஜிநகரில் சித்தன் அலுவலகம் இருக்கிறது. இன்று மதியம் மள்ளர் கழகத்தின் மாநில கொள்கைபரப்புச் செயளாலர் மோகன் தலைமையில் 18 பேர் இந்த‌ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



இலங்கை பிரச்னையில் தமிழர்களுக்கு எதிராக இருக்கும் காங்கிரஸ் கட்சியை கண்டித்தும், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் என்.எஸ்.வி. சித்தனை பதவி விலகக் கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள். 18 பேரையும் போலீஸ் கைது செய்தது.



3 comments:

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget