Thursday, March 28, 2013

நெல்லையில் மள்ளர் கருத்தரங்கம்



 மள்ளர் ஒற்றுமை முன்னேற்ற வரலாற்று கருத்தரங்கம் நெல்லையில் நடந்தது. 

உலகம் முழுவதும் வாழும் மள்ளர்களை ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வர இந்திய மள்ளர் ஒற்றுமை முன்னேற்ற வரலாற்று கருத்தரங்கம் நெல்லையில் நடந்தது. கருத்தரங்கிற்கு டாக்டர் ராமகுரு மள்ளர் தலைமை வகித்தார். இந்திய மள்ளர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பான்ஜி மள்ளர் முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற ஏ.டி.எஸ்.பி., சிவ ஜெயப்பிரகாஷ் மள்ளர் வரவேற்றார். கடலியல் ஆய்வறிஞர் ஒரிசா பாலு வெளிநாடுகளில் வாழும் மள்ளர்களைப் பற்றிய மள்ளர் வரலாற்று படத்தை திரையிட்டார்.

கருத்தரங்கில் மதுரை டாக்டர் கயிலை ராஜன் மள்ளர், தேசிய மீனவர் கூட்டமைப்பு துணை தலைவர் பான்ஜி ஆசா மள்ளியர், இன்ஜினியர் ஊர்காவலன் மள்ளர், சிவமணி மள்ளர், ரவி தேவேந்திரன் உட்பட பலர் வாழ்த்துரை வழங்கினர். இந்திய மள்ளர் சங்கமம் தலைவர் வர்மன் மள்ளர் சிறப்புரை ஆற்றினார். டாக்டர் ராஜதுரை மள்ளர் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை இந்திய மள்ளர் சங்கமம் சிவ ஜெயப்பிரகாஷ் செய்திருந்தார்.



1 comment:

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget