Monday, June 4, 2012

பசுபதிபாண்டியன் கொலை குற்றவாளிகள் மீது வெடிகுண்டு வீச்சு! திண்டுக்கல் அருகே பதட்டம்!

திண்டுக்கல் அருகே பசுபதிபாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் போலீஸ் கையெழுத்திட வந்த போது மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. 

கடந்த ஜனவரி 10ம் தேதியன்று பசுபதிபாண்டியன் ,படுகொலை செய்யப்பப்டார். இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் உள்ளனர். இவர்களில் நடராஜ், மாடசாமி, சன்னியாசி ஆகியோர் இன்று (04.06.2012) திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வந்தனர்.

கையெழுத்திட்ட பின்னர் காரில் சென்று கொண்டிருந்தனர் அப்போது மர்ம கும்பல் ஒன்று அவர்கள் வந்த கார் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தப்பியது. இதில் கார் டிரைவர் உள்பட நான்கு பேரும் காயமடைந்தனர். இதனால் தாடிக்கொம்பு பகுதியில் பதட்டம் நிலவுகிறது.





No comments:

Post a Comment

DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget