Thursday, May 24, 2012

டாக்டர் கிருஷ்ணசாமி & திரு.உமாசங்கர் ஐ.ஏ.எஸ்


புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களும் திரு.உமாசங்கர் ஐ.ஏ.எஸ். அவர்களும்


பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் 28-ந்தேதி ஆர்ப்பாட்டம்: டாக்டர் கிருஷ்ணசாமி

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 


 

மத்திய அரசு நேற்று முதல் பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.7.50 உயர்த்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து புதிய தமிழகம்கட்சி சார்பில் வருகிற 28-ந்தேதி தமிழகம் முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

வல்லநாடு அரசு உயர்நிலைபள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட எனது சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த கட்டிடம் கட்டுவதற்கு பொதுப்பணித்துறை டெண்டர் விட்டும் இதுவரை காண்டிராக்டர்கள் யாரும் கட்டிட பணியை எடுக்க முன்வரவில்லை. அவர்களுக்கு குறைவாக லாபம் கிடைப்பதினால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மானிய விலையில் காண்டிராக்டர்களுக்கு மணல், கம்பி உள்பட கட்டிட பொருட்கள் வழங்க வேண்டும்.

இது குறித்து முதல்- அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும். குளங்களை ஆழப்படுத்த 3 அடி வரை மட்டுமே மண் அள்ள வேண்டும். ஆனால் சமூக விரோதிகள் சிலர் 15 அடி வரை மண் அள்ளுகின்றனர். இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

எனவே குளங்களில் மண் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி தருவைகுளத்தில் தூண்டில் வளைவு அமைக்க ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



Monday, May 21, 2012

பா.ஜ மாநாட்டில் தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க தீர்மானங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல்


தேசிய பயங்கரவாத தடுப்பு மையமானது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என மதுரை பாஜக தாமரைச் சங்கமம் 5-வது மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  மதுரையில் வியாழக்கிழமை தொடங்கிய பாஜக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:  

*இலங்கைப் பிரச்னையில் தமிழக அரசியல் கட்சிகள் சேர்ந்து குரல் கொடுப்பது அவசியம். ஆனால், இலங்கை சென்ற குழுவில் அதிமுக, திமுக இடம் பெறாதது துரதிருஷ்டவசமாகும்.  

 *இலங்கைத் தமிழர் வாழ்வு குறித்து கவலைப்படாத மத்திய காங்கிரஸ் திமுக கூட்டணி அரசை மாநாடு கண்டிக்கிறது. இனிமேலாவது இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது. 

*மதக்கலவரத் தடுப்பு மசோதா எனும் பெயரில் மாநில அரசின் சட்டம், ஒழுங்கு பாதுகாக்கும் உரிமையைப் பாதிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது. காவல் துறைக்கு அதிகாரம் வழங்குதல், உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை மாநில அரசுகளின் அதிகாரத்தை தட்டிப்பறிக்கும் வகையில் உள்ளன. 

*மத்திய அரசின் இத்தகைய போக்கிற்கு மாநில சுயாட்சி பற்றிப் பேசிவரும் திமுக போன்ற கட்சிகள் ஆதரவு அளிப்பது சரியல்ல. ஆகவே கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. 

*சேதுசமுத்திரத் திட்டத்தில் பெரும்பாலான மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக, பாரம்பரியச் சின்னமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.  

*மழை நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும் வகையில் தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு மின்சாரப் பற்றாக்குறைய முற்றிலும் நீக்கி மூடியுள்ள தொழிற்சாலைகள் இயங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். 

*இந்து ஆலயங்களில் வசூலிக்காத குத்தகை பாக்கியை வசூலிக்கவும், ஆலயச் சொத்துகளின் வாடகை, வருவாய் ஆகியவற்றை அதிகரிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பசுவதை தடைச் சட்டத்தை செயல்படுத்த வேண்டும். 

*தென்தமிழகத்தில் தொழில் வளர்ச்சியடைய குளச்சல் துறைமுகம் உருவாக்கம், மதுரை விமான நிலையத்தில் சர்வதேச விமானம் வந்து செல்ல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செயல்படுத்த வேண்டும். *விருதுநகர்-அருப்புக்கோட்டை உள்ளிட்ட நகர்களின் அகல ரயில் பாதை திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும். 

*குடும்பன் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் தேவேந்திரகுல வேளாளர் பிரிவினரை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற பொதுப்பெயரில் அழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

*தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க சிறப்புப் பயிற்சித் திட்டத்தை செயல்படுத்த அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். வறுமையில் வாடும் மாணவ, மாணவியருக்கு சாதி பாகுபாடின்றி மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை ஏழை இந்துக் குழந்தைகளுக்கு வழங்க வேண்டும்.  தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அரசு அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.



Aiming to project itself as an alternative to the two Dravidian parties in Tamil Nadu, BJP state unit on Friday said it had started preparations for the next Parliamentary polls, scheduled in 2014.

Talking to reporters on the concluding day of BJP's two-day state conference "Tamarai Sangamam" here, party state president Pon Radhakrishnan alleged that both DMK and AIADMK were "involved" in corruption and have been "punished" during every elections by the voters.

"Preparations are on for the next elections and setting up of relevant committes, initiating the membership drive and others could be taken up soon and we aim to reach every village of the state", Radhakrishnan said.
He declined to reply to queries on the possible alliances of the party ahead of the polls saying it would be discussed at an appropriate time.

Radhakrishnan said BJP was a party which performed beyoned the differences of caste, creed and religion.
To a query, he said the party will not contest the Pudukottai assembly bypoll. On the Sri Lankan issue, he said BJP supported devolution of power to Tamils. Radhakrishnan charged the Centre with attempting to takeover the state's right in maintaining the law and order under the pretext of "Communal Disturbance Prevention Bill".

He said it was not proper for DMK, a proponent of state autonomy, to support such a bill. He also wanted to declare Sethu Samudhram as a traditional and national symbol and a heritage site. Rdhakrishnan said the rivers in the country should be linked to prevent wastage of rain waters. The government should take steps on a war footing to overcome the power shortage and reopen the closed mills.
He said slaughtering of cows should be banned in the state. 

The sub castes of Devendra Kula Velalar community, including Kudumban, should be integrated and they should be named as Devendrakula Velalar.

Special skill training programmes should be conducted to enable youths in tamilnadu get employment. The government scholarship should be given for all poor students and educational assistance should be extended to all poor Hindu students also, he said.


http://www.dnaindia.com/india/report_preparations-on-to-project-itself-as-alternative-in-tn-bjp_1687460


http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=12392



சமையல் எண்ணெய்












டாக்டர் MBBS




Click on image to view bigger


சாதிவாரி கணக்கெடுப்பின்போது எந்தெந்த பிரிவுகளில் பதிவு செய்ய வேண்டும்?

தேவேந்திர குலம்:

மள்ளர் நாடு சமூக நல நிறுவன தலைவர் சுப. அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,


இந்தியா முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதில் தேவேந்திரர்கள் தங்களின் உட்பிரிவுகளான காலாடி, குடும்பன், மூப்பன், பண்ணாடி, வாய்காரர், கடையர், வாதியார் என்பதற்கு பதிலாக ஒரே இனமாக தேவேந்திர குலத்தான் என்று பதிவு செய்ய வேண்டும்.







விருதுநகர் மாவட்டங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பில் தேவேந்திர குலத்தான் என அதிகாரிகள் பதிவு செய்ய மறுப்பதை எதிர்த்து கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும், எனவே தேவேந்திர குலத்தான் என்று பதிவு செய்ய வேண்டுமே தவிர ஆதிதிராவிடர், தாழ்த்தப்பட்டோர் எஸ்.சி. என பதிவு செய்யக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

மள்ளர் என அழைக்கக் கோரி மனு: மத்திய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பரிசீலிக்க உத்தரவு

தேவேந்திரகுல வேளாளர், பள்ளர் சமூகத்தினரை ஆதிதிராவிடர் என அழைக்காமல் மள்ளர் என அழைத்து, அதிலுள்ள உள்பிரிவுகளையும் மள்ளர் என  ஒருங்கிணைக்கக் கோரிய மனுவை, மத்திய எஸ்.சி., எஸ்.டி. ஆணையம்  பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. இதுகுறித்து, பாளையங்கோட்டையைச் சேர்ந்த சிவஜெயபிரகாசம் தாக்கல் செய்த மனு: 

அரசின் சாதிகள் பட்டியலில் பள்ளர் எனக் குறிப்பிடப்பட்ட சமூகத்தினரை மள்ளர்  எனவும், தேவேந்திரகுலத்தான் என இருப்பதை, தேவேந்திரகுல வேளாளர் என மாற்றி மள்ளர் சாதியின் உள்பிரிவாக கொண்டுவர வேண்டும். பள்ளர் சாதியில் உள்ள 56 பிரிவுகளையும் ஒருங்கிணைத்து மள்ளர் என அழைக்கவேண்டும். இந்த பிரிவினர்களை ஆதிதிராவிடர் பட்டியலில் வைத்து அழைக்கக் கூடாது. இதுகுறித்து வைக்கப்பட்ட கோரிக்கைகள் பேரில், ஓய்வுபெற்ற நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அதில், தேவேந்திரகுல வேளாளர் வகுப்பில் 7 உள்பிரிவுகளை வகைப்படுத்த அரசு உத்தரவிட்டது. அப்போது, தேவேந்திரகுல வேளாளர் வகுப்பில் உள்ள 25 உள் பிரிவினரையும் மள்ளர் என அழைக்குமாறு வகைப்படுத்தக் கோரினேன். ஏனெனில், எல்லா மள்ளர் வகுப்பு பிரிவுகளையும் ஆதிதிராவிடர் பட்டியலில் கொண்டு வருவதால் ஒற்றுமை பாதிக்கும். இதிலுள்ள ஒவ்வொரு பிரிவினருக்கும் தனி கலாசாரம், பண்பாடு பழக்கவழக்கம் உள்ளது.  தேவேந்திரகுல வேளாளர் என்ற தலைப்பில், மள்ளர் மற்றும் இதர சாதிப் பிரிவினரைக் கொண்டுவர முடியாது. 

வரலாற்றிலும், போர் திறத்திலும் முன்னணியில் இருந்த  மள்ளர்களின் முக்கியத்துவம், 16-ம் நூற்றாண்டுக்குப் பின்னர் இருட்டடிப்பு  செய்யப்பட்டு, தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்பட்டனர்.  எனவே, பள்ளர் என அழைப்பதை மள்ளர் என அழைக்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், ஆர்.கருப்பையா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், இப்பிரச்னை குறித்து தமிழக அரசு ஏற்கெனவே ஒருநபர் கமிஷனை அமைத்துள்ளது. அதன் பரிந்துரைகளையும், மனுதாரரின்   கோரிக்கைகளையும், மத்திய அரசின் எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தின் பரிசீலனைக்கு வைக்க அரசு முதன்மைச் செயலர் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது.


ராஜபக்சே - திமிர் பேச்சு

இலங்கையில் தமிழர் பகுதிகளில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடம் இல்லை என  அதிபர் ராஜபக்சே திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இலங்கையில் விடு தலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்து வந்த உள்நாட்டுப்போர் முடிந்து 3 ஆண்டுகள் ஆகி விட்டன. அங்கு இந்தியாவின் நிதி உதவி யுடன் போருக்கு பிந் தைய மறுவாழ்வுப்பணி கள் நடைபெறுகின்றன. சிங்களர்களைப்போல தமிழர்களும் சம மதிப் புடனும், அந்தஸ்துட னும் வாழ ஏற்ற வகை யில், தமிழர்கள் வாழுகிற பகுதிகளிலிருந்து ராணு வத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியா, அமெ ரிக்கா, அய்க்கிய நாடு கள் சபை வலியுறுத்தி வருகின்றன. ராஜபக்சே யால் அமைக்கப்பட்ட நல்லிணக்கக்குழுவும் இந்த பரிந்துரையை செய்துள்ளது.

சமீபத்தில் வாஷிங் டனில் தன்னை சந்தித்த இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எம். பெரீசிடம், இலங்கை யில் தமிழர் பகுதிகளி லிருந்து ராணுவத்தை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், மனித உரிமையை பாது காக்க இன்னும் கூடுத லான நடவடிக்கை எடுக்கவேண்டும் என் றும் அமெரிக்க வெளி யுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் வலியுறுத்தினார்.


வெ(ற்)றி விழாவில் ராஜபச்சே

இந்த நிலையில், இலங் கையில் விடுதலைப் புலிகளுடனான போர் வெற்றியை கொண் டாட கொழும்பில் அரசு விழா எடுத் தது. இந்த விழாவில் ராஜபக்சே பேசியபோது கூறியதா வது: இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து விட்டது. ஆனாலும், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வெளிநாடு களில் செயல்படுவோர், வேறு வழிகள் மூலமாக, இலங்கையில் அமைதி யின்மையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த சூழ்நிலையில், ஒரு சிலர் கோரிக்கை விடுக்கின் றனர் என்பதற்காக, வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள ராணு வத்தினரை திரும்ப பெற முடியாது. ராணுவ முகாம்களை அகற்ற முடியாது. ராணுவ முகாம் களை அகற்றுவதன் மூலம், நாட்டின் பாது காப்புக்கு ஆபத்தான சூழல் ஏற்படும். தமி ழர்கள் வசிக்கும் பகுதி களில், நிர்வாக பணி களில் ராணுவம் தலையி டுவதாக கூறுவது சரியல்ல.

ராணுவ முகாம்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுபவர் கள், போர் முடிவடைந்த பின், கடந்த மூன்று ஆண்டுகளாக, தமிழர் கள் வசிக்கும் பகுதிகளில் எந்தளவுக்கு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள் ளப்பட்டுள்ளன என் பதை பார்க்க வேண்டும்.

எங்களின் பிரச்சி னையை, நாங்களே தீர்த்துக் கொள்ள விரும் புகிறோம். எங்களுக்கு உள்ள பொறுப்பை தட்டிக் கழிக்க முடி யாது. போரில் நடந்த உரிமை மீறல் பிரச் சினைகள் பற்றி விசா ரிப்பதற்காக அமைக்கப் பட்ட குழு அளித்த பரிந்துரைகளை, செயல்படுத்தி வருகி றோம். இவ்வாறு ராஜபக்சே பேசினார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், இலங்கையில் தமிழர் பகுதிகளில் உள்ள ராணுவத்தினரை அகற்ற வேண்டும் என, ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்த நிலையில், ராஜபக்சேயின் இந்த பேச்சு, பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

இதற்கிடையே, அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரியை சந்தித்துப் பேசிய பின் னர் செய்தியாளர்களி டம்  கூறுகையில், "போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்தப் படும். ஏற்கெனவே இது குறித்து, சம்பந்தப்பட்ட பகுதிகளில் விசாரணை துவங்கியுள்ளது. இதில் ஒரு முடிவுக்கு வருவ தற்கு, போதிய வாய்ப்பு அளிக்க வேண்டும்' என்றார்.

Friday, May 18, 2012

குழந்தைகளுக்கு வரும் வியர்க்குரு (Prickly Heat)

தடுப்பது எப்படி?

வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு வரும் பொதுவான தொந்தரவு வியர்க்குரு. இதை ஆங்கிலத்தில் prickly heat என்றும் மருத்துவ வழக்கில் miliaria என்றும் அழைப்பர்.

பெரியவர்வளை விட குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஏனெனில் குழந்தைகளின் வியர்வைச்சுரப்பிகளின் வளர்ச்சி குறைவாக இருப்பதால் வெயில் நேரங்களில் உடல்சூட்டைத்தணிக்க அதிகப்படியாக வியர்வையை வெளியேற்ற முயற்சி செய்து வீங்குகிறது.இது சிறுசிறு கொப்புளங்களை ஏற்படுத்தும்.இதனுள் சில பாக்டீரியங்கள் வளருவதால் சிவந்து காணப்படும் மேலும் வியர்வை வெளியேறாமல் உள்ளே அடைத்துக்கொள்வதால் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். 

 


தவிர்க்கும் வழிகள் : குழந்தைகளின் உடலில் அதிகப்படியான வியர்வைவராமல் பார்த்துக்கொண்டால் வியர்க்குருவை குறைக்கலாம்.அதற்கு குழந்தைகளை தினமும் தவறாமல் குளிர்ந்த நீரில் குளிப்பாட்டவேண்டும்;இரண்டுவேளை குளிப்பாட்டினால்கூட நல்லது.அப்படி முடியாவிட்டால் தண்ணீர்வைத்து துண்டுக்குளியல் செய்தால் கூட நல்லதுதான்.


சாதாரண டால்கம் பவுடரை அதிகம் உபயோகிக்ககூடாது ஏனெனில் அவைகள் வியர்வைசுரப்பிகளின் துளைகளை அடைத்துவிடுவதால் தொந்தரவு மேலும் அதிகரிக்கும். அதற்கு பதிலாக கேலமைன் உள்ள லோஷன்களை பயன்படுத்தலாம்.மேலும் மென்தால் உள்ள சிறப்பு பவுடர்களை பயன்படுத்தலாம்.



எப்போது மருத்துவரை அணுகுவது?


அதிக அளவில் ஏற்பட்டு எரிச்சல் அதிகரித்தாலோ அல்லது சீழ்ப்பிடித்து காய்ச்சல் வந்தாலோ மருத்துவரை உடன் உடன் அணுகவும்.குழந்தைகளின் உடலில் நீரிழப்பு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதும் அவசியம்.






 

மாம்பழத்தின் மகிமை





சங்ககாலம் தொட்டே சிறப்பு பெற்ற முக்கனிகளில் ஒன்று மாம்பழம் . இந்திய மாம்பழங்கள் உலக அளவில் சிறப்பு வாய்ந்தவை. மாங்கா என்ற தமிழ்ச்சொல்லில் இருந்தே mango வும் மாம்பழம் என்ற சொல்லில் இருந்து ஆம் என்ற ஹிந்தி சொல்லும் தோன்றியிருக்கலாம்  இயற்கையாக பழுத்த மாம்பழங்கள் உடலுக்கு நன்மை செய்பவை


மாம்பழத்தில் விட்டமின் A மற்றும் beta-carotene,alpha-carotene,beta-cryptoxanthin ஆகிய சத்துக்கள் நிறைய உள்ளது.இவைகள் கண் பார்வைக்கும் நோயெதிர்ப்பு சக்திக்கும் உதவும்.  மற்ற பழங்களில் உள்ளது போலவே மாம்பழத்திலும் பொட்டாசியம் (potassium) தாதுப்பொருள் நிறைய உள்ளது .இது இருதயத்திற்கு நல்லது. மேலும் விட்டமின் B6 (pyridoxine) ,விட்டமின் c , விட்டமின் E போன்ற உயிர்சத்துக்களும் உள்ளது. விட்டமின் B6 நரம்பு மண்டல GABA எனப்படும் ஹார்மோன் உற்பத்திக்கு அவசியமானது. மேலும் இது பக்கவாதத்தை தடுக்கும் ஆற்றல் கொண்டது.




விட்டமின் C கிருமிகளுக்கு எதிரான நோயெதிர்ப்புக்கு உதவுவதோடு சிறந்த Anti-oxidant ஆக செயல்பட்டு உடலில் நுழையும் free radical எனப்படும் கலகக்காரணிகளை கட்டுப்படுத்தும்  விட்டமின் E வும் free radical ஐ கட்டுப்படுத்தும்


குறிப்பு :இந்த free radical என்பவை ரவுடிகளைப்போன்றவை .நம் உடலில் புகுந்து கலகத்தையும் கலக்கத்தையும் எற்படுத்தவல்லவை.இவைகளை எதிர்த்து போராடுவன anti-oxidant எனப்படும் பொருட்கள்.  அனைத்து பழங்கள் மற்றும் பச்சைக்காய்கறிகளில் இவை அதிகம் .


உணவை அதிகமான வெப்பநிலையில் சூடுபடுத்தவோ வறுக்கவோ பொரிக்கவோ செய்யும்போது அதிலுள்ள anti-oxidant அழிந்து free radical உற்பத்தியாகின்றது. உடலின் பல நோயகளுக்கு (புற்றுநோய்,மாரடைப்பு ,இருதய வியாதி ,இரத்தக்குழாய் குறைபாடு ,நரம்பு மண்டலக் கோளாறு ) இந்த கலகக்காரணிகளே காரணம் (கலகக்காரணி என்றே சும்மா மொழிபெயர்த்துள்ளேன்)




மேலே சொன்ன நன்மைகள் மாம்பழத்தில் மட்டுமே கிடைக்கும் ; புட்டிகளில் அடைக்கப்பட்ட செயற்கைச்சாற்றில் அல்ல 





மாம்பழத்தில் வைட்டமின் ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.
மாம்பழம் பெரும்பாலும், அப்படியே பழமாக உண்ணப்படுகிறது. தோலையும், விதையையும் நீக்கிய பிறகு, பழச்சதை துண்டு செய்யப்பட்டு உண்ணப்படுகிறது. பழச்சதை நன்றாக கூழாக்கப்பட்டு, மாம்பழச்சாறாகவும் பருகப்படுகிறது. மாம்பழச்சாறு பாலுடன் கலந்தும் பருகப்படுகிறது அல்லது ஐஸ் கிரீம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை. 100 கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு  வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்து விடுவார்கள்.

மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில் தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.
வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதைவிட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே. நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.




 முக்கனிகளில் மட்டுமல்ல.. நம் அழகுக்கு அழகு சேர்ப்பதிலும் முதலிடம் மாம்பழத்துக்குத்தான். வெயிலை முந்திக் கொண்டு சந்தைக்கு வந்துவிடும் மாம்பழத்தைச் சாப்பிட்டால், சூடு பிடிக்கும் என்று சிலர் சொல்வார்கள். உண்மையில் அந்தந்த சீஸனில் வருகிற பழங்களைச் சாப்பிடும்போதுதான் அவற்றின் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.


இப்போது மொழுமொழு மாம்பழம் தரும் வழுவழு அழகுக் குறிப்புகளைப் பார்க்கலாமா..

மாங்கொட்டையின் உள்ளே இருக்கும் பருப்புக்கு கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு இருக் கிறது. மாங்கொட்டை பருப்பை அரைத்த விழுது, வெண்ணெய் போல இருப்பதால் இதை 'மேங்கோ பட்டர்' என்று சொல்வார்கள். இது, தலை முடிக்கு கண்டிஷனராக செயல்படுகிறது.


சிலருக்கு முன்பக்க முடி உதிர்ந்து, வழுக்கை ஏற்பட்டிருக்கும். இதற்கு, ஒரு டேபிள்ஸ்பூன் மேங்கோ பட்டர் (அ) முற்றிய மாம்பழ சதையுடன் வேப்பம்பூ சேர்த்து அரைத்த விழுது, விளக்கெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் கலந்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பிறகு பயத்தமாவு, கடலை மாவு, சீயக்காய் பொடி மூன்றையும் சம அளவு கலந்து தலைக்குத் தேய்த்து குளிக்க வேண்டும். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று, முன்புறம் முடி வளர ஆரம்பிக்கும்.


மேங்கோ பட்டர், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய்.. இந்த நான்கை யும் சம அளவில் கலந்து மிக்ஸி யில் அடித்து வெயிலில் வைத்து எடுக்கவும். இதை தலையில் பத்து போல் போட்டு 15 நிமிடம் ஊறவிடவும். பிறகு, சம அளவில் வெந்தயம், பயத்தம்பருப்பை கலந்து ஊற வைத்து அரைத்த விழுதைத் தேய்த்து தலைக்கு குளித்தால், பொடுகுத்தொல்லை போயே போச்சு. பொடுகால் முடி உதிர்வது நின்று, கூந்தலும் பளபளக்கும்!


நாற்பது வயதை நெருங்கினாலே சிலருக்கு கழுத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு பாதாம்பருப்பும் கசகசாவும் சம அளவில் சேர்த்து அரைத்த விழுது ஒரு டீஸ்பூன், மேங்கோ பட்டர் ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து, அந்த பேஸ்ட்டை கழுத்துப் பகுதியில் மேலிருந்து கீழ்ப்புறமாக பூசி, காய்ந்ததும் கழுவவும். இதை ஒரு மாதம் தொடர்ந்து செய்தால், கழுத்து சுருக்கம் நீங்கி, சங்கு போல மின்னும்!


பருக்களால் முகப்பொலிவு குறைந்து விட்டதா? கவலை வேண்டாம். தினமும் குளிப்பதற்கு முன் ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ விழுது, அரை டீஸ்பூன் மாம்பழ சதை, அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து முகத்தில் பூசுங்கள். பருக்கள் மறைந்து, டல்லடித்த முகமும் டாலடிக்கும்! இதிலுள்ள நல்லெண்ணெய், தோலின் பள பளப்பைக் கூட்டி, கூடுதல் மிருது-வாக்கும்.


மாம்பழ சதையுடன் அதே அளவு உலர் திராட்சையை சேர்த்து அரைத்து, அதை ஐஸ் டிரேயில் இட்டு ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். உதடுகள் உலர்ந்து போகும்போதெல்லாம் இந்த ஐஸ்கட்டியை ஒரு துணியில் சுற்றி, உதட்டின் மேல் தடவுங்கள். உதடுகள், ரோஜா இதழ் போல மின்னும்!


புருவங்களில் முடி கொட்டுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது மாம்பழச் சாறு! ஆரஞ்சு மற்றும் மாம்பழச் சாறை சம அளவு எடுத்து ஃப்ரீசரில் வைக்கவும்.


புருவங்களில் விளக்கெண்ணெய் (அ) நல்லெண்ணெயை ஒரு துளி தடவி, இந்த ஐஸ் கட்டியை ஒரு மெல்லிய துணியில் சுற்றி, கண் மற்றும் புருவத்தில் ஒற்றி எடுங்கள். தினமும் இரவு தூங்கும் முன் இப்படி செய்து வந்தால், புருவத்திலும் இமையிலும் முடி வளரும்.


மாம்பழக் கன்னங்கள் வேண்டுமா? நன்றாகப் பழுத்த மாம்பழச் சதை அரை டீஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் 2 சிட்டிகை, பார்லி பவுடர் ஒரு டீஸ்பூன், வெள்ளரி பவுடர் அரை டீஸ்பூன்.. இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் 'மாஸ்க்' மாதிரி தடவி, 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். தோலுக்குத் தேவையான நீர் சேர்ந்து கன்னம் கொழுகொழு வென்று நிறமும் கூடும்.


 






Thursday, May 17, 2012

Dr. K. Krishnasamy MLA & திரு.உமாசங்கர் IAS



ஜாதிவாரி கணக்கெடுப்பு: கிருஷ்ணசாமி வேண்டுகோள்





புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவதுதமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடங்கி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணியில் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி அமைப்பாளர்கள் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள், ஜாதி பின்னணி என்னவென்று தெரியாமல் உள்ளனர். இது போன்றவர்கள் கணக்கெடுப்பதால், உண்மை பிரதிபலிக்கப்படாது, கணக்கெடுப்பு முடிந்த பின்பு, பிரச்னைகளும், சர்ச்சைகளுமே எழும். திறன்பெற்றவர்கள் மற்றும் சமூகத்தை புரிந்து கொண்டவர்களை மட்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பில் ஈடுபடுத்த வேண்டும்பட்டியல் இனத்தில் பள்ளர், பறையர், சக்கலியர் உள்ளனர். பள்ளர் தேவேந்திர குலவேளாளர் என்றும், பறையர் ஆதிதிராவிடர் என்றும், சக்கலியர் அருந்ததியர் என்றும் அடையாளப்படுத்த வேண்டும்.















உண்மை அறியும் குழுவின் அதிர்ச்சித் தகவல்கள்





திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணி 13.06.2011 அன்று, இரவு பத்து மணியளவில் ஒரு கொலைவெறிக்கும்பலால் கொடூரமாக வெட்டப்பட்டு, உயிருக்குப் போராடிய நிலையில்திருநெல்வேலி மாவட்ட அரசுப் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலித் சமூகத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, ஊராட்சி மன்றத் தலைவரõகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தே அவருக்கு அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் தொடர்ந்து இருந்துள்ளன.

1. 13.06.2011 அன்று இரவு கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகி, உயிர் தப்பி, தற்பொழுது மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் கிருஷ்ணவேணிமிகவும் நேர்மையாகவும், துணிச்சலாகவும் செயல்பட்டுள்ளார். கடந்த ஊராட்சி மன்றத் தேர்தலில் தாழையூத்து பஞ்சாயத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்டு, 700 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். கடந்த அய்ந்தாண்டுகளாக தாழையூத்து ஊராட்சியின் மேம்பாட்டுக்கு பல திட்டங்களை ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டுள்ளார்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை மாவட்டத்திலேயே திறம்பட நிறைவேற்றிய முதன்மையான ஊராட்சி மன்றத்திற்கான "சரோஜினி நாயுடு விருதினை' 2009 ஆம் ஆண்டில், இந்தியக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் அவர்களிடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிற சாதியைச் சேர்ந்த பொது மக்கள் பலரும் இவரைப் பாராட்டுகின்றனர். இவருடைய அசாத்தியமான துணிச்சலும், நேர்மையும் பலரும் வியக்கும் அளவில் திறம்பட நிர்வாகம் செய்யும் ஆற்றலும் பாராட்டத்தக்கதாக இருந்துள்ளது.

2. ஊராட்சி மன்றத் தலைவராக இவர் நேர்மையாகவும், கறாராகவும் செயல்பட்டதுவேறு சாதியைச் சேர்ந்த சில ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தங்களது பதவியைக் கொண்டு மக்களிடமிருந்து லஞ்சம் வாங்கவோ, கூடுதலாக வேறு வழிகளில் சம்பாதிக்கவோ முடியாத சூழலில்இவருடைய செயல்பாட்டுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். சாதியச் சமூகத்தின் கடைகோடியில் இருக்கும் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்இவ்வளவு சிறப்பாக நிர்வாகம் செய்கிறாரே என்ற பொறாமையும், சாதிய ஆதிக்க உணர்வும் இவர்களிடம் அவ்வப்போது வெளிப்பட்டு வந்துள்ளது.

3. இதனால் இவருக்கு கடந்த அய்ந்தாண்டுகளிலும் தொடர்ந்து எதிர்ப்புகளும், அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் இருந்து வந்துள்ளன. பரவலாக பலதரப்பட்ட மக்களின் ஆதரவிருந்தாலும், ஒரு சில செல்வாக்கு கொண்ட தனி நபர்கள்/ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளனர். இது, ஊராட்சி மன்றத் தலைவரின் பணிகளுக்கு அடிக்கடி தடைகளாக இருந்ததோடு, அவருக்கு எதிரான சாதிய ஆதிக்க உணர்வை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. எனவே, கடந்த அய்ந்தாண்டுகளில் ஊராட்சி மன்றப் பணிகளை சரிவரச் செயல்பட விடாமல் இடையூறு செய்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் துணைத் தலைவர் மீது புகார் மனுக்களை வட்டார வளர்ச்சி அலுவலர், திட்ட அலுவலர் (வளர்ச்சி முகமை), காவல் ஆய்வாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சித் தலைவர் போன்றோருக்கு கொடுத்துள்ளார்.

பல வேளைகளில் இந்தப் புகார் மனுக்கள், காவல் துறை அதிகாரிகளால் முறையாக விசாரிக்கப்படாமலும், "இந்தம்மா இப்படித்தான், எல்லாவற்றுக்கும் தீண்டாமை புகார் மனுக்களாகக் கொண்டு வந்து தொந்தரவு செய்வார்' என்பது போன்ற உணர்வுமே மேலோங்கி இருந்துள்ளது கவனிக்கத்தக்கது. ஒரு சில புகார் மனுக்களின் மீது தாழையூத்து காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கைகளாகப் பதியப் பெற்றாலும், பல புகார் மனுக்கள் எந்தவித நடவடிக்கையுமின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளன.

4. ஒரு தலித் பெண் அரசியல் அதிகாரம் பெற்று, ஊராட்சி மன்றத்தில் ஆட்சி செலுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாத சாதிய ஆதிக்க உணர்வு, பிற சாதி ஊராட்சி மன்ற உறுப்பினர்களிடம் மேலோங்கி நிற்பதைக் காண முடிகிறது. அடிப்படையில் கெட்டி தட்டிப்போன சாதியச் சமூகத்தின் ஆதிக்க உணர்வின் வெளிப்பாடுதான் பல வேளைகளில் உள்ளாட்சி மன்றத் தலைவராக கிருஷ்ணவேணியை பணி செய்ய விடாது தடுக்கும் சம்பவங்களாக நடந்துள்ளன.

கிராம சபைக் கூட்டங்களில் அவர் வைத்திருந்த அறிக்கை ஏட்டைப் பிடுங்குவது, (26.01.2011) அவரது கையைத் திருகி, அடிக்க எத்தனிப்பது, சுதந்திர நாள் விழாவில் அவரை கொடியேற்ற விடாமல் தடுத்தல் (15.08.2010), ஊராட்சி மன்ற அலுவலகத் தில் தலைவருக்குரிய நாற்காலியில் அமர விடாமல் தடுப்பது, காசோலையில் கையெழுத்துப் போடாமல் இடையூறு செய்வது (22.01.2009), மக்கள் நலப் பணிகளைச் செய்யவிடாமல் தடுப்பது (08.04.2008) போன்று இவருக்கு நேர்ந்துள்ள ஒரு சில கொடுமைகள்ஆதிக்க சாதியினர் மத்தியில் புரையோடிக் கிடக்கும் சாதிய உணர்வின் வெளிப்பாடுதான்.

5. 13.06.2011 அன்று இரவு நடந்த கொலைவெறித் தாக்குதலுக்கு உடனடிக் காரணமாகச் சொல்லப்படுவது : ஊராட்சி மன்றத் தலைவருக்கும், மேலத் தாழையூத்தில் வசிக்கும் (ஊராட்சி மன்றப் பிரதிநிதி) சுப்பிரமணியன் () சுப்பு என்பவருக்கும் இடையே ஓடைப் புறம்போக்கில் பொதுக்கழிப்பறை கட்டுவதில் முரண்பாடு எழுந்தது. தங்களது வீட்டிற்குப் பின்புறம் செல்லும் ஓடையை ஒட்டி இப்பொது கழிப்பறை கட்டப்படுவதை சுப்பு கடுமையாக ஆட்சேபித்துள்ளார். இந்த சுப்புவும், மற்றொரு உறுப்பினரான மீரான்கனியும் இதனை எதிர்த்தாலும், அப்பகுதியில் வசிக்கும் கோனார் சமூகத்தினரும், பிற சாதியைச் சேர்ந்தவர்களும் அப்பகுதி பெண்களும் கழிப்பறைக்கான தேவையை உணர்ந்து, பொதுக் கழிப்பறையைக் கட்ட அந்த இடத்தைத் தேர்வு செய்துள்ளனர். மக்களின் விருப்பப்படி இந்த இடத்தில் கட்ட வேண்டும் என்ற முடிவும் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் பேசி எடுக்கப்பட்டது.

தனது வீட்டிற்குப் பின்புறம் பொதுக் கழிப்பறையை கட்டுவது தனக்கு கவுரவக் குறைச்சல் என்று சுப்பு எண்ணி, தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததோடு, மாவட்ட நிர்வாகத்திற்கும் இதுகுறித்து தகவல் கொடுத்து, சம்பவ தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, பொதுக் கழிப்பறையை அங்கே கட்டுவதற்கான தடையையும் வாங்கியுள்ளார். ஓடைப் புறம்போக்கில் எந்தவித கட்டடங்களும் கட்டக்கூடாது என்ற காரணத்தைக் கூறி, மாவட்ட நிர்வாகம் இம்முடிவை எடுத்துள்ளது. இதனை எதிர்த்துப் பலதரப்பட்ட மக்களையும் திரட்டி, கிருஷ்ணவேணி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சம்பவ தினத்தன்று காலையில் ஒரு மனுவும் கொடுத்துள்ளார்.

6. ஊராட்சி மன்றத் தலைவர் மீது கொடூரத் தாக்குதல் நடந்த சம்பவத்தை முதல் தகவல் அறிக்கையாகப் (குற்ற எண். 213/11) பதிவு செய்த தாழையூத்து காவல் துறை உதவி ஆய்வாளர் கே. பால்துரை, பாதிக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று தெரிந்த பின்பும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய பிரிவுகளைப் பதிவு செய்யாமல், 341, 294(பி), 323, 307 போன்ற இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் மற்றும் Sec.4 of Tamilnadu Prohibition of Harassment of Women Act 2002 இன் கீழ் மட்டுமே பதிவு செய்துள்ளார்.

சம்பவ தினத்திற்கு மறுநாள் ஆதித்தமிழர் பேரவை, தமிழ்ப்புலிகள் மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புகள், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மேற்கொண்ட போராட்டங்களின் விளைவாகவே 15.06.2011 அன்று, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப்பிரிவு 3 (2) (5)இன் கீழ் முதல் தகவல் அறிக்கை மாற்றம் செய்யப்பட்டு, ஆய்வாளரால் நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது (341, 294(பி), 323, 324, 307 இதச மற்றும் பிரிவு 4 TNPHW Act 2002 r/2 3 (2) (5) SC/ST (PoA) Act.

7. இத்தாக்குதலை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனையாக மட்டுமே பார்க்கும் பார்வை காவல் துறை அதிகாரிகளிடம் உள்ளது. பல்வேறு பரிமாணங்கள் உள்ளடங்கிய கொலைவெறித் தாக்குதல் என்ற முழுமையான பார்வை இல்லை. கிருஷ்ணவேணி மிகவும் நேர்மையாக, கையூட்டு வாங்காமல் கறாராக இருந்து செயல்பட்டதை குறைபட்டு, சற்று நெழிவு சுளிவுகளோடு செயல்பட்டிருந்தால் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்காது என்ற போக்கு, காவல் துறை அதிகாரிகளிடம் மேலோங்குவதைக் காண முடிகிறது.

8. இவ்வளவு கொடுமையான தாக்குதல் நடந்து, பல வெட்டுக் காயங்களோடு உயிருக்கு ஊசலாடி, ஒரு காதை இழந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறும் ஊராட்சி மன்றத் தலைவர் கிருஷ்ணவேணியை வட்டார வளர்ச்சி அலுவலரோ, மாவட்ட ஆட்சித் தலைவரோ அரசு மருத்துவமனைக்கு 18.06.2011 வரை நேரில் சென்று சந்திக்கவில்லை. அரசு எந்திரத்தின் (மாவட்ட நிர்வாகத்தின்) மனிதாபிமானமற்ற போக்கையே இது காட்டுகிறது.

9. தொடர்ந்து நேர்மையாக, திறம்பட செயல்பட்டதற்கு உரிய பாதுகாப்பு தனக்கும் தன் குடும்பத்திற்கும் கிடைக்கவில்லை என்ற அச்ச உணர்வு கிருஷ்ணவேணிக்கு எழுந்துள்ளது. இதேபோல நேர்மையாக, திறம்பட மக்களுக்காகச் செயல்படும் ஊராட்சி மன்றத் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் ஏற்படும் இதுபோன்ற பாதுகாப்பற்ற நிலை/அச்ச உணர்வு அவர்களுக்குள் மேலோங்கி இருப்பதுஅடித்தள ஜனநாயகத்திற்கும், மக்களின் முழுமையான பங்கேற்பிற்கும், நேர்மையான, திறமையான நிர்வாகத்திற்கும் விடப்பட்ட சவாலாகவே அமையும்.

பரிந்துரைகள் :

1. கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான கிருஷ்ணவேணிக்கும், அவருடைய குடும்பத்தாருக்கும் போதிய பாதுகாப்பை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் உடனடியாக வழங்க வேண்டும். ஏற்கனவே அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல்களும், மிரட்டல்களும் தொடர்ந்து இருந்து வந்துள்ள நிலையில், ஆயுதந்தாங்கிய பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட வேண்டும்.

2. கொடூரமான கொலைவெறித் தாக்குதலுக்கு இலக்கான கிருஷ்ணவேணிக்கு வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையான ரூ. 50,000/–அய் இரு நாட்களுக்கு முன் அரசு வழங்கியுள்ளது. ஆனால், கொலை வெறித் தாக்குதலின் தன்மை, கொடூரம் போன்றவற்றைக் கணக்கில் கொண்டு கூடுதலாக 3 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை அவருக்கு வழங்கப்பட வேண்டும். தவிர, அவருடைய மருத்துவச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளிலும் சிறப்புக் கவனம் செலுத்தி, அவர் விரைவாக குணமடைய அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.

3. ஏற்கனவே கிருஷ்ணவேணி கொடுத்த பல்வேறு புகார் மனுக்களின் மீது காவல் துறை சுதந்திரமான விசாரணையை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் முறையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும்.

4. கடந்து அய்ந்து ஆண்டுகளாக கிருஷ்ணவேணி கொடுத்த புகார் மனுக்கள் மீது முறையாக விசாரணை செய்யாத, தாழையூத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் கே. பால்துரை அங்கிருந்து உடனே மாற்றம் செய்யப்பட வேண்டும். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

5. தமிழகத்தின் பிற பகுதிகளில் குறிப்பாக தென்மாவட்டங்களில் ஊராட்சி மன்றத் தலைவர்களாக/பிரதிநிதிகளாகப் பணியாற்றும் தலித் மற்றும் பெண் பிரதிநிதிகளுக்கு, தமிழக அரசு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவர்கள் திறம்பட தங்கள் பணிகளை மேற்கொள்ளத் தடையாக உள்ள விஷயங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

6. தலித் சமூகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சி மன்றங்களில் துணைத் தலைவர் பதவிகளும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும். அதேபோல, தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்படும் ஊராட்சி மன்றங்களில் துணைத் தலைவர் பதவிகளும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும். (பெருவாரியான இடங்களில் காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரம், ஊராட்சிகளுக்கான திட்டங்களைத் தாமதமின்றி விரைவாகவும் செய்து முடிக்கவும் இத்தகைய ஏற்பாடு பெரிதும் உதவும்.) 

தாழையூத்து ஊராட்சித் தலைவர் மீதான கொலைவெறித் தாக்குதலுக்கான பின்னணி மற்றும் காரணங்களை ஆராயவும், இதுபோன்ற வன்கொடுமைகளைத் தடுக்கவும்திருநெல்வேலியில் உள்ள சமூக அக்கறை கொண்ட கல்வியாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் குழு ஒன்று உண்மையைக் கண்டறியும் நோக்கில் கள ஆய்வினை, சூன் 18 – 19 ஆகிய நாட்களில் மேற்கொண்டது. இக்குழுவில் இடம் பெற்ற உறுப்பினர்கள் : 1. பேராசிரியர் தொ. பரமசிவன் 2. பேராசிரியர் ஜெ. அமலநாதன் 3. பேராசிரியர் பே. சாந்தி 4. திரு. லெனா குமார்யாதுமாகி பதிப்பகம் 5. வழக்குரைஞர் ஜி. ரமேஷ் 6. திரு. சு. கணேசன்மக்கள் கண்காணிப்பகம் 7. வழக்குரைஞர் . பிரிட்டோவான்முகில் 8. திரு. பே. மாரியப்பன்மனித உரிமை ஆர்வலர்


நான் ரொம்ப தைரியசாலி, யாரையும் கள்ளத்தனம் பண்ண விடமாட்டேன்


நீங்கள் தலைவராகப் பொறுப்பேற்றதிலிருந்தே உங்களை இயங்க விடாமல் செய்து வருகிறார்களா?

நான் பொறுப்பேற்றதிலிருந்தே பல பிரச்சனைகள். தெரு பிரச்சனை, ரோடு, தண்ணீர் பிரச்சனை, வீடு ஒதுக்கீடு பண்றது எல்லாமே பிரச்சனைதான். கூட்டமே நடத்தவிட மாட்டாங்க. காவல் துறையின் உதவி யுடன்தான் கூட்டமே நடத்துவேன். காவல் துறையிடம் புகார் மனு கொடுத்தாலும் உடனே நடவடிக்கை எடுக்க மாட்டாங்க. அவசரம்னு போன் பண்ணி கூப்பிட்டாலும் உடனே வரமாட்டாங்க. பால்துரை இன்ஸ்பெக்டர், எந்தப் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்க மாட்டார். ஆனா, மற்றவர்கள் கூப்பிட்டால் உடனே வருவார்.

குடியரசு தினம் அன்னிக்கு கொடியேத்திட்டு, கிராம சபைக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்து கொண்டு இருக்கும்போது, துணைத் தலைவர் அவருடைய பினாமி ஆள் மூலம் இடது கையை பின்னால் திருப்பி முறுக்கி ஒடிச்சி விட்டார். பால்துரை இன்ஸ்பெக்டருக்குதான் போன் பண்ணினோம். வரவே இல்லை. அப்புறம் இதே ஆஸ்பத்திரிலதான் வந்து சிகிச்சை எடுத்துக்கிட்டேன். "ஆதித்தமிழர் பேரவை' தான் வந்து ஆர்ப்பாட்டம் பண்ணினாங்க. ஏழைப்பேச்சு அம்பலம் ஏறலை. நம்ம சொல்றது எதையுமே கேட்க மாட்டாங்க.

வெட்டும்போது ஏதாவது சொல்லி வெட்டுனாங்களா?

பேசவே விடலை. தாறுமாறா வெட்டுனாங்க. அங்க ஒரு கழிப்பறை கட்டப் போறோம். ரொம்ப நாளா போராடி ஒரு கழிப்பறை கட்டப் போறோம். சுப்பு கோனாரு அண்ணன் பையன் ஆவுடையப்பக் கோனார் பையன் அம்மலு, சுல்தான் ஆரம்பத்தில் இருந்தே என்னிடம் பிரச்சனை பண்ணினாங்க. இரண்டு பேரும் சேர்ந்து நாடார் பையன்களை பிரெய்ன் வாஷ் பண்ணி கூட்டிட்டு வந்தாங்க. அன்னிக்கு ரொம்ப நேரமாயிடுச்சு. ஆபிஸ்ல வேலை முடியவே 9.30 மணி ஆயிடுச்சு. மறுநாள் ஜமாபந்தி இருந்ததுனால ஓய்வூதியம், அப்புறம் பட்டா, ரேஷன் கார்டு எழுதிக் கொடுத்திட்டு இருந்தேன். மாமா வேற இரவு வேலைக்குப் போயிட்டாங்க. எனக்கு அன்னைக்கு "பீரியட்ஸ்' வேறு. அதனால என்னால நடக்கவும் முடியலை. தலை சுத்தலா இருந்தது. அதனால ஆட்டோல போகலாம்னு சொல்லி கிளம்பினேன்.

வழக்கமாக போகின்ற ஆட்டோவா? வேற ஆட்டோவா?

நான் எப்பவுமே நடந்துதான் போவேன். அன்னைக்கு "பீரியட்ஸ்' சமயம், மத்தியானம் வேறு சாப்பிடலை. தலை சுத்துற மாதிரி இருந்தது. நடக்க முடியல, கீழே விழுந்துருவேனோன்னு பயந்துதான் ஆட்டோல போவோம்னு கிளம்பினேன். ஆட்டோக்காரன் வந்தான். கருப்பசாமி கோயில் திரும்பிய உடனே கூட்டமா அரிவாளோட வந்ததும் ஆட்டோக்காரன் ஓடிப் போயிட்டான். நானும் ஆட்டோவை விட்டு இறங்கப் போனேன். இறங்க முடியலை. எப்பவுமே அந்த இடத்துல கும்பலா ஆள் உட்கார்ந்து இருப்பாங்க. போலிஸ் கிட்ட எத்தனையோ தடவை, அங்க ஆட்களை உட்கார விடாதீங்கன்னு சொன்னோம். உட்கார்ந்துகிட்டு கெட்ட வார்த்தையால பேசுவாங்க. கல்லைக் கொண்டு எறிவாங்க.

அன்னைக்கு அரிவாள் கத்தியோட கூட்டமா ஓடி வந்ததும் ஆட்டோக்காரன் ஓடிட்டான். ஆட்டோக்குள்ள வைச்சி வெட்டுனாங்க. பேசவே விடலை. வாயை மூடிட்டாங்க. கண்ணைப் பொத்திட்டாங்க. வெட்டு அதிகமா விழுந்ததாலே கத்த முடியலை. எட்டரை மணிக்கு மேலே எல்லோரும் நாடகம் (டி.வி.) பாக்கப் போயிடுவாங்க.

நாடகத்திலேயே மூழ்கிடுவாங்க.

அதுக்கு முன்னால உங்களத்தான் வெட்டப் போறோம்னு ஏதாவது சொன்னாங்களா?

அப்படி சொல்லலை. சொல்லியிருந்தா உஷாரா இருந்திருப்போம். ஜாக்கிரதையா இருந்திருப்போம். எங்க வீட்டுக்காரரைத்தான் வெட்டுவேன்னு சொல்வாங்க. ரோட்லே வைச்சி வெட்டுவேன்னு சொன்னாங்க. கடைசியில அவரை இங்கிருந்து மாற்றம் பண்ணிட்டாங்க. என் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு இல்லை. தலைவர் ஆனதில் இருந்தே பிரச்சனை. அவங்க சொல்ற எல்லாத்துக்கும் சரின்னு ஜால்ரா அடிச்சிட்டு போயிருந்தா நல்லா இருந்திருக்கும்; எந்தப் பிரச்சனையும் வந்திருக்காது. கள்ளத்தனம் பண்றதுக்கு, யாரையும் எதையும் தின்ன விட மாட்டேன். அதுதான் பிரச்சனை. நான் தேர்தலில் சுயேட்சையாகத்தான் நின்றேன். ஆதித்தமிழர் பேரவைன்னு ஒண்ணு இருக்கிறதே பதவி ஏற்ற பிறகு தான் தெரியும். எங்க சமுதாயம்ன்னு லேசா போவேனே தவிர, பெரிய அளவுல இல்லை.

ஊர் மக்கள் ஆதரவாக இருப்பாங்க. நீங்களே அவங்ககிட்ட கேட்டுக்குங்க. நல்லா ஒத்துழைப்பு கொடுப்பாங்க. இடையில் நாடார் சமூகத்துக்கும் ஒரு சண்டை வந்தது. 2008 இல் "சரோஜினி நாயுடு அவார்டு' சோனியா அம்மாகிட்ட வாங்க டெல்லி போயிருந்தப்ப, சாதி சண்டைல விடலைப் பசங்களுக்குள்ளே சண்டை. தட்சணம்மாள்

நாடாரோ என்னவோ ஒரு நாடார், அந்த சண்டைல எங்க சாமிய அடிச்சிட்டாங்கன்னு பிரச்சனை. அந்தப் பிரச்சனை நடக்கும்போது நான் டெல்லி போயிட்டேன்.

நான்தான் அந்த சண்டையைத் தூண்டிவிட்டேன் என்று என்னைப் பிடிக்காதவங்க சொல்லி, அந்த சாதிச் சண்டை விஸ்வரூபம் எடுத்துட்டு, என்னதான் சரிசெய்து வைத்தாலும் அப்பப்ப இது புகைஞ்சிகிட்டே இருக்கும் (அருகில் இருந்த மகள் புவனேஸ்வரி இப்ப கொடையில்கூட பிரச்சனை வந்தது. சும்மா இருந்த அம்மாவை எப்படி நீங்க இங்க வரலாம் எங்க கோயிலுக்குன்னு கேட்டாங்க. வேணி தொடர்கிறார்). மட்டமா மட்டமா அம்மணக்குண்டி அப்படி இப்படின்னு லேடிஸை கேவலப்படுத்துறாங்க. யாரு மேடம் சம்மதிப்பாங்க? இதுக்கெல்லாம் நாங்க பொறுப்பாக முடியுமா? பிரச்சனை வந்தது.

உங்க பதவிக் காலத்தில் யாரெல்லாம் அதிகளவு தொந்தரவு பண்ணாங்க?

இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த சுல்தான். ஓடைப் பிரச்சனையில சுப்பு போன வருஷத்துல இருந்து ரொம்ப தொந்தரவு பண்ணினாங்க. அப்புறம் நாடார்கள்தான். என் சொந்த ஊர் நாகர்கோவில் பக்கம். இங்குள்ள மக்கள்

எல்லாருமே நாடார் வீடுகளுக்கு கல்யாண வீட்ல இலை எடுத்துப் போடுவாங்க. சுடுகாட்டுல குழி வெட்டப் போவாங்க. இப்படி நாடார் சமூகத்துக்கு வேலை செய்வாங்க. நான் பதவிக்கு வந்ததும் அதுபோல வேலைகளுக்கு போக விட மாட்டேன். ஓடை தள்ற வேலை பார்க்கறதாலே, இப்ப போக மாட்டாங்க. இது, அவங்களுக்கு தாங்கலை. கோபம்.

சுல்தான் ஒரு தடவை தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் ஓடையில வைச்சி வேலை நடக்கும்போது, அங்க அம்மணமா வந்து நின்னாரு. இப்படி வந்து நின்னா பொம்பளைங்க எப்படி நிப்பாக? அதுக்குக்கூட போலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காசு கொடுத்தா போலிஸ் அவங்க பக்கந்தான் நிக்கும். அப்போ டி.பி.எம். மைதீன்கான் இருந்தார், அவர்கிட்ட சொன்னேன். பூங்கோதை அம்மாட்ட சொன்னேன். நான் சுயேச்சையா நின்னேன். ஆனால், நான் .தி.மு.. சார்பாக நிக்கிறேன்னு சொல்லி, அந்தம்மாவையும் நடவடிக்கை எடுக்க விடாமல் ஆக்கிட்டாங்க. கருப்பசாமி பாண்டியனையும் பார்த்தேன்.

கஷ்டப்பட்ட சமுதாயத்தில் இருந்து யாரும் வரக்கூடாதுன்னு நெனைக்கிறாங்க. கழிப்பறையை கட்டுறதை எதிர்த்து சுப்பு கோனார்; அவருடன் சேர்ந்து மீரான், சுல்தான் எல்லாம் மிரட்டினாங்க. நாங்க முறையா அணுகினோம். ஆர்.டி..விடம் கேட்டோம், தாசில்தாரிடம் கேட்டோம், இடம் இருந்தா தாராளமாக கட்டுங்க. இடம் முடிவு செய்தது மக்கள்தான். கோனார், ஆசாரி, தேவர் எல்லா சாதியும் சேர்ந்து தான் முடிவு பண்ணாங்க. இவர் சுப்பு கோனாரிடம் முக்கால்வாசி புறம்போக்கை பிடிச்சி வைச்சிருக்காரு. அதனாலதான் அவருக்கு இது புடிக்கலை.

(அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை) நான் ரொம்ப தைரியசாலிங்க. ஆனால், பொம்பளைன்னு கூட பாக்காம இப்படி தாறுமாறா வெட்டுனதுக்கு அப்புறம் எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இனிமேல் எங்க சமுதாயத்துல இருந்த யாராவது பொது வாழ்க்கைக்கு தைரியமா வருவாங்களா? பொம்பளையான என்னை வெட்டும்போது என் கணவர், என் பிள்ளைங்க கதி? எங்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கு?


கிருஷ்ணவேணி மீது கொலை வெறித்தாக்குதல்- தொல்.திருமா ,ஜான் பாண்டியன் கண்டன ஆர்ப்பாட்டம்








DKV

DKV

DKV

DKV

DKV

DKV

DKV Android Widget